என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 2004-2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது தமிழகத்திற்கு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
    • மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    * கோவை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    * உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்ற வர்த்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.

    * பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார்.

    * 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியோடுதான் தொடங்க போகிறது.

    * தமிழ்நாட்டில் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.

    * 2026-ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி உருவாவது உறுதி.... உறுதி...

    * வகுப்புவாதம், பிரிவினை வாதம் சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    * பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனித்துவமான முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.

    * தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களில் மொழி வளம், கலாசாரம் உள்ளிட்டவைகளை போற்றக் கூடிய மபெரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.

    * தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.

    * வேங்கைவயலில் ஒரு சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது.

    * கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. கள்ளக்சாரயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என புகார் அளிக்கும் கல்லூரி மாணவர்கள் திடீரென கொள்ளப்படுகிறார்கள்.

    * இப்போது தேச விரோத சிந்தனை மட்டும்தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது.

    * கனிம வளக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் உதவியுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தலைவர் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் பணமோசடி வழக்கு மற்றும் செம்மணல் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.

    * யார் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடித்தான் திமுக உறுப்பினர்களாக சேர்க்கும்போல் இருக்கிறது.

    * ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரம் அடைந்திருக்கிறது. துன்பத்தில் இருக்கிறது. இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது புதல்வர் புதுபுது பிரச்சனையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    * தற்போது நீங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஒரு புதிய பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பாராளுமன்ற இடங்கள் குறையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார். இந்த விசயத்தில் பொய் சொல்லி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். இழப்பு ஏற்படும் எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது. நான் உண்மையை உரைத்திருக்கிறேன். எனக்கு பதில் சொல்ல் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    * 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியமாக 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.

    * கட்டுமான பணிகளுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே, மத்திய அரசு நிதி தரவில்லை என மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு உண்மையான துரோகம் செய்துள்ளீர்கள். மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
    • மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.

    கோவை:

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    * தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது எப்படி நடக்கம் என அமித்ஷா தெளிவாக விளக்கி உள்ளார்.

    * விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.

    * முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?

    * ஏற்கனவே பிரதமரும் விளக்கமாக பேசி உள்ளனர்.

    * தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?

    * முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?

    * மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.

    * விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை, விஜய் குழந்தைகளுக்கு மும்மொழி.

    * த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா? விஜய் மேடையில் பொய் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • 13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
    • வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.

    கோவை:

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று காலை செல்வபுரம்-சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திருநகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, லதா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி, அதனை சரிபார்த்தனர்.

    மேலும் வங்கி கணக்கில் உள்ள பணம், வீட்டில் இருந்த நகைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள் அது தொடர்பாகவும், எம்.எல்.ஏ.விடம் கேட்டனர். அவர் அதற்கான தகுந்த ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.

    சோதனையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.

    சோதனை நடப்பதை அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இேதபோன்று, பெரியநாயக்கன் பாளையத்தில் அம்மன் அர்ச்சுனன் நடத்தி வரும் நிறுவனம் மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்குள்ள கம்ப்யூ ட்டர்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.

    அம்மன் அர்ச்சுனன் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவாகியும் நீடித்தது. இரவு 7.40 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இதேபோல் நிறுவனங்களில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.

    13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த போலீசார் அதனை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே லஞ்ச ஒழிப்புசோதனையில் தனது வீட்டில் எந்த பொருளையும் அதிகாரிகள் எடுத்து செல்ல வில்லை என அம்மன் அர்ச்சுனன் பேட்டி கொடுத்துள்ளார்.

    எனது வீட்டில் நடந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது. ரூ.2 கோடியே 6 லட்சம் எனது வங்கி கணக்கில் உள்ளது. 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதற்கான அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன்

    எனது வீட்டில் 2 மணி நேரம் தான் சோதனை நடந்தது. 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் இருந்தார்கள். அனைத்தும் சட்டப்படியாக சரியாக இருந்தது. வருமானவரித்துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருக்கிறது.

    எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.

    அ.தி.முக தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். என்னிடம் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

    எனக்கு நடந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

    இந்த வழக்கை நான் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன். இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க. தொண்டனை அசைத்து பார்க்க முடியாது. உங்களுக்கு அச்சம் வந்ததால் சோதனை செய்கிறீர்கள். அ.தி.மு.க தொண்டர்கள் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார். அதன்பின், ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.

    மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சென்னையில் இருந்து புறப்பட்டோர் 63 நாயன்மார் திருமேனியுடன் கூடிய தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    கோவை:

    ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு சிவயாத்திரை எனும் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, மைசூர், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.


    இதில் சென்னையில் இருந்து வந்த சிவயாத்திரை குழு அறுபத்து மூவர் திருமேனிகளைத் தாங்கிய ஒரு பிரத்யேக தேரினையும் இழுத்து வந்தனர். ஆதியோகி தேர்கள் அனைத்தும் கலைநயம் மிக்க சிற்பங்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மரத்தினால் உருவாக்கப்பட்டவை.

    அனைத்து சிவயாத்திரை குழுக்களும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வந்துசேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் மகா சிவராத்திரிக்காக 40 நாள் விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவுசெய்து கொள்வார்கள்.

    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வரும் அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    நாளை (26-ந்தேதி) காலை கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்தவாறே ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகங்களையும் அவர் காணொலி மூலம் திறந்துவைக்க உள்ளார்.

    பின்னர் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் 1000 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா கோவை வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை வரும் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
    • அம்மன் அர்ஜுனன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது.
    • சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் சிவஞானன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கோவை வெள்ளியங்கிரி பகுதியில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான விதிமீறல்கள் உள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடைபெறும் இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி வனப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள 45 'டெசிபல்' ஒலி அளவைவிட மகாசிவராத்திரி விழாவின்போது வனப்பகுதியில் கூடுதல் ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கானோர் கூடுவதால் கழிவுநீர் தேங்கி விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே வனப்பகுதியில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர், 'சிவராத்திரி நிகழ்வின்போது மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ''ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. குறி்ப்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த பகுதியில் மாசற்ற சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

    அதற்கு மனுதாரர் தரப்பில், ''விதிகளை மீறி விடிய, விடிய ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலி மாசு இல்லையா? ஈஷாவில் 3 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. மகா சிவராத்திரி விழாவுக்கு 7 லட்சம் பேர் வருவார்கள். அவர்களுக்கு இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானது கிடையாது'' என்று வாதிடப்பட்டது. அதற்கு ஈஷா தரப்பில், 'ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில்தான் இந்த சிவராத்திரி விழா நடைபெறுகிறது. சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்'' என்று கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்புக்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவி்க்கப்பட்டு உள்ளதால், மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி 

    • உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது.
    • தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார்.

    மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ், காரமடை மண்டல தலைவர் ஆர்.கே ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன், சங்கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இந்திய அளவில் முதல் பட்ஜெட்டை தயாரித்தது தமிழகத்தை சேர்ந்தவர். மோடியின் அரசு ஏழைகளுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. ஏழை எளிய மக்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அரசாக உள்ளது.

    மக்களிடம் பணம் இல்லை என்றால் இதற்கு முன்னாள் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தான் காரணம். உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ஆனால் மோடியின் ஆட்சியில் பணம் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வங்கியில் பணம் தொடங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் 1 வாரத்தில் 1.8 லட்சம் கோடி வங்கி கணக்கு தொடங்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.2.50 ஆயிரம் கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் சாலை அமைக்க தமிழக அரசு இடம் எடுத்து மத்திய அரசுக்கு வழங்காததால் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தமிழக அரசு செய்யும் பல தவறுகளை மறைக்க மத்திய அரசை காரணம் காண்பித்து தப்பித்து செல்கின்றனர்.

    தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. இன்று தி.மு.க.வில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்கி அங்கு இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வருகையால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல அரசு பள்ளிகளில் மொத்தமாக 4 மாணவர்கள் வரை தான் கல்வி பயின்று வருகின்றனர்.

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க 2026-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும். எனது வாழ்நாளில் ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர தலைவர் உமாசங்கர் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • தங்கும் அறையிலேயே மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    கோயம்பத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வெளியில் கஞ்சா வாங்குவது மிகவும் ரிஸ்க் ஆகிவிட்டதால் அறையிலேயே வளர்த்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

    வடவள்ளி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 25-ந் தேதி 2 நாள் பயணமாக கோவை வருகிறார். அன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். இரவில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 26-ந் தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார். மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையம், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விழா நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரமாண்ட நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். அது திறந்தவெளி மைதானம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தார்.

    அவருடன் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

    • இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.
    • சில மணி நேரங்களில் பெயர் பலகையை ரெயில்வே அதிகாரிகள் திருத்தி எழுதினர்.

    மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.

    தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

    பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.

    இந்நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய பெயர் பலகையில் மீண்டும் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டது. சில மணி நேரங்களில் பெயர் பலகையை ரெயில்வே அதிகாரிகள் திருத்தி எழுதினர்.

    கருப்பு மையால் இந்தியை அழித்த 4 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×