என் மலர்
நீங்கள் தேடியது "Shivratri Festival"
- செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
- விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ஏனாதி செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளாக நடந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் கலச நீர் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 6மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. தலைமை பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து அம்மனுக்கான பூஜைகளை செய்தார்.
கொடியேற்ற விழாவில் கோவில் குடிமக்கள் மற்றும் ஏனாதி செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளுல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 21-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் படைப்பு வகைகள் சாற்றி சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி சண்முகசுந்தரம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.
- ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது.
- சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் சிவஞானன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'கோவை வெள்ளியங்கிரி பகுதியில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான விதிமீறல்கள் உள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடைபெறும் இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி வனப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள 45 'டெசிபல்' ஒலி அளவைவிட மகாசிவராத்திரி விழாவின்போது வனப்பகுதியில் கூடுதல் ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. லட்சக்கணக்கானோர் கூடுவதால் கழிவுநீர் தேங்கி விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே வனப்பகுதியில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர், 'சிவராத்திரி நிகழ்வின்போது மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ''ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின்போது அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. குறி்ப்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த பகுதியில் மாசற்ற சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.
அதற்கு மனுதாரர் தரப்பில், ''விதிகளை மீறி விடிய, விடிய ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒலி மாசு இல்லையா? ஈஷாவில் 3 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. மகா சிவராத்திரி விழாவுக்கு 7 லட்சம் பேர் வருவார்கள். அவர்களுக்கு இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானது கிடையாது'' என்று வாதிடப்பட்டது. அதற்கு ஈஷா தரப்பில், 'ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில்தான் இந்த சிவராத்திரி விழா நடைபெறுகிறது. சரவணம்பட்டியில் வசிக்கும் மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்'' என்று கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தவும், கழிவுநீர் சுத்திகரிப்புக்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவி்க்கப்பட்டு உள்ளதால், மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி






