என் மலர்
கோயம்புத்தூர்
- யுவராஜ் வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பு தூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சின்னியம்பாளையத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம், எல்.இ.டி. டி.வி, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பி யுவராஜ் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் அருகே உள்ள மாசாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 27). தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய சதீஸ்குமார் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. கொள்ளை யர்கள் அதே பெட்டியில் இருந்த 8 அரை பவுன் தங்க நகைகளை எடுக்காமல் சென்றதால் நகைகள் தப்பியது.இது குறித்து சதீஸ்குமார் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போ லீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
பிரசாந்தும், செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் சம்மதத்தின் பேரில் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.
கடந்த 5-ந் தேதி பிரசாந்தின் காதலியான தன்யாவுக்கு பிறந்த நாள். காதலியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றார். கேக்குடன் சென்று தன்யாவை வெளியே வரும்படி கூறி அழைத்தார்.
நள்ளிரவில் வந்து சத்தம் போட்டதால் தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை கண்டித்தனர். அப்போது அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தனர்.
இதற்கிடையே தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார். யாரிடமும் பேசாமல், தனி அறைக்குள் முடங்கி கிடந்தார். பெற்றோர் ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் அடையவில்லை.
காதலன் இறந்த துக்கத்தை எண்ணி நாள்தோறும் கவலையடைந்தார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து வருந்தினார். இதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
மகள் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், மீண்டும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் அவரது பெற்றோர் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.
அவர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால் தன்யாவுக்கு உதவியாக அவரது பாட்டியை வைத்து விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
நேற்று தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். மாணவி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக அவரின் பாட்டியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு சென்றனர்.
வீட்டில் தன்யாவும், அவரது பாட்டியும் மட்டுமே இருந்தனர். தன்யாவுக்கு தனது காதலன் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. அவன் சென்ற இடத்திற்கே சென்று விடுவது என நினைத்து தான் முதலில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பெற்றோர் காப்பாற்றி விட்டனர். இதனால் மீண்டும் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியது.
உடன் பாட்டி இருந்ததால், அவரை வெளியில் அனுப்ப முடிவு செய்த தன்யா, தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வா என்று தெரிவித்து, அவரை வெளியில் அனுப்பி வைத்தார்.
பாட்டியும் பேத்தி கூறியதை உண்மை என நம்பி மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டார். பாட்டி சென்ற பின்னர் தனது அறைக்குள் சென்ற தன்யா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன்யாவின் பாட்டி, மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தன்யாவை காணவில்லை. இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியானார். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை பார்த்ததும் பாட்டி கதறி அழுதார். மேலும் தனது மகனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் கொல்லப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த இளம்பெண் முதல் முறை தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்த நிலையில், 2-வது முறையாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இரவு நேரம் என்பதால் இருட்டை பயன்படுத்தி பின் இருக்கையில் இருந்த வாலிபர், நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
- பஸ் காந்திபுரம் வந்ததும் நர்சு விரைந்து சென்று பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காட்டூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தலைமை நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் நர்சு கோவைக்கு புறப்பட்டார். நாகர்கோவிலில் இருந்து கோவை வந்த தனியார் சொகுசு பஸ்சில் ஏறி அவர் வந்தார். நர்சின் பின் இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
இரவு நேரம் என்பதால் இருட்டை பயன்படுத்தி பின் இருக்கையில் இருந்த வாலிபர், நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நர்சு சத்தம் போட்டார். இது குறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார். கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் தொடர்ந்து நர்சுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
பஸ் காந்திபுரம் வந்ததும் நர்சு விரைந்து சென்று பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக பூர்ணிமா ரங்கராஜன் மீது புகார் எழுந்தது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை ஒன்றியத்தில் மருதூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பூர்ணிமா ரங்கராஜன் (40) என்பவர் உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இந்த புகார்கள் பற்றி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக விசாரித்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், 100 நாள் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதும், ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது.
- நேற்று ஒரே நாளில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.
கோவை,
கோவையின் மைய பகுதியில் ரேஸ்கோர்ஸ் அமைந்துள்ளது. இங்கு 2 அரை கிலோ மீட்டரில் நடைபயிற்சி செல்லும் மைதானம் உள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரேஸ்கோர்சில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அடைந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் இடங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, ஆலயம், கோவில் ஆகியவையும் அமைந்துள்ளது. எனவே இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை விரட்டி விரட்டி காலில் கடித்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வெறிபிடித்த நாய் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அந்த வழியாக சென்ற வர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதுபற்றி ரேஸ்கோர்சில் தினசரி நடை பயிற்சி செல்லும் வாலிபர் ஒருவர் கூறியதாவது:-
ரேஸ்கோர்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நாய்களை பிடித்து செல்கிறார்கள். பின்னர் கருத்தடை செய்த பின்பு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேறு பகுதிகளில் பிடித்த நாய்களையும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பலர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தினசரி வந்து நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை அளிக்கின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட நாய்கள் அங்கே தங்கி விடுகின்றன. இப்படி நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் நாய்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உணவு வழங்க வேண்டியது தானே. எனவே அதிகாரிகள் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கும்பாபிேஷக விழா கடந்த 5-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
- சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி புதன்கிழமை நடைபெற்றது.
கோவை,
கோவை மாவட்டம் வடக்கு தாலுகா, காளப்பட்டி பி.எஸ்.ஜி லே அவுட்டில் உள்ள ஸ்ரீ பிரிய கணபதி கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிேஷக விழா கடந்த 5-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாக பூஜை நடத்தப்பட்டது.
சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, ஸ்ரீ பிரிய கணபதி விமான கோபுரத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சர்வ சாதகம் சிவாகம செம்மல் சிவஸ்ரீ எஸ் எஸ் செந்தில்நாத சிவாச்சாரியார் மற்றும் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஸ்தானிகர் சிவாகம பாஸ்கரா சிவஸ்ரீ எஸ் சிவகுரு சிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதில் பி.எஸ்.ஜி லே-அவுட், நரேன் கார்டன் அண்டு எக்ஸ்டென்சன், விஎல்கே கார்டன் அண்டு எக்ஸ்டன்சன், ஸ்ரீநகர், ஸ்ரீராம் கார்டன், பாலசுப்ரமணியன் அவென்யூ, ஐயப்பா நகர், சார்ப் நகர் மற்றும் காளப்பட்டி பகுதியை சார்ந்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
- கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
- நேற்று அதிகாலை, 6 மணிக்கு, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.
பேரூர்,
பேரூர் பச்சாபாளையம், ராம்ஜிஹில் வியூவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, இறை அனுமதி பெறுதல், கலச பூஜை, மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி, வாஸ்து பூஜை உள்ளிட்டவை நடந்தன.
அதன் பின் புதிய விக்கிரகங்களுக்கு அபிஷேகம், சுவாமிகளுக்கு கண் திறப்பு நடந்தது. மாலையில் முளைப்பாரி, சீர் தட்டுகள் மற்றும் தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடந்தது.
இரவு, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 6 மணிக்கு, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9.20 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை, 9.:30 மணிக்கு, பிரசன்ன வெங்கடேஷ் சுவாமிகள் தலைமையில், விமான கோபுரத்திற்கும், செல்வ விநாயகருக்கும், மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
இதில் ராம்ஜிஹில் வியூ உரிமையாளர் ராம்ஜி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், தர்மராஜா அருள் பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ராம்ஜிஹில் வியூ குடும்பத்தார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பேரூராட்சி செயல் அலுவலர் கே.மணிகண்டனின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
வடவள்ளி,
கோவை பேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேரூர் பேரூராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து அதனை கொண்டு வந்து கண்காட்சிக்கு அடுக்கி வைத்து மக்கள் அதனை பார்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் மூலமாக ஆடைகள், புத்தகங்கள், உரங்கள், காலணிகள் போன்ற–வற்றை சேகரித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வருகின்றன.
அங்கு தனித்தனியாக ஒவ்வொரு பொருட்களுக்கும் பெட்டிகள் அமைத்து வைக்கப்பட்டு உள்ளன. அதில் பொருட்களை அடுக்கி வைத்து உள்ளனர். பேரூராட்சி அலுவலத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கு உள்ள பொருட்களை ஆர்வமுடன் பார்ப்பதுடன், தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து செல்கின்றனர். பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கே.மணிகண்டனின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
- கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
- 2 பேர் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான மாதப்பூர், அருகம்பாளையம், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள இரும்பு கதவுகள் திருடப்பட்டு வந்தன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினரான சி.பி.கே செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கணியூர் மேட்டுக்காட்டில் தான் நடத்தி வரும் கடையில் இருந்து இரும்புகளை மர்மநபர்கள் திருடி சென்றதாக புகார் கொடுத்தார்.தொடர்ந்து புகார்கள் வரவே இரும்புகளை திருடும் மர்மநபர்களை பிடிக்க கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தையல்நாயகி உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் திருடு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 பேர் முகம் பதிவாகி இருந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதை தேடினர். அப்போது அவர்கள் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் அரசூர் கொள்ளு பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான குமார்(45), டிரைவர் மகேந்திரன்(25) என்பது தெரியவந்தது.மேலும், இவர்கள் தான், தங்களது நண்பரான சரவணன்(35) என்பவருடன் சேர்ந்து கருமத்தம்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள இரும்பு கதவுகளை திருடியதும் தெரியவந்தது.
இதுதவிர கருமத்தம்பட்டியில் பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த இடத்தில் கிடந்த இரும்பு கம்பியையும் இந்த கும்பல் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்களிடம் இரும்பு கதவுகளை எங்கே என்று விசாரித்த போது, கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்றதாக தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று, இரும்புகளை மீட்டனர்.
பின்னர் மகேந்திரன், குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சரவணனை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இவர்களிடம் இரும்புகளை வாங்கிய கடை உரிமையாளரிடமும் விசாரணை நடக்கிறது.
- வால்பாறையில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
- நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக, தேயிலை செடிகள் துளிர் விட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
விரைவில் தென்மேற்கு பருவமழையும தொடங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக பசுந்தேயிலை பறிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பசுந்தேயிலை பறிக்க முடியாத நிலையில், நவீன எந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் அடிப்படையில் கூடுதல் நேரம் பணி வழங்கப்படுிறது.
இதுகுறித்து தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறும் போது, 30 தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் எந்திரம் வாயிலாக தேயிலை பறிப்பதால் 6 தொழிலாளர்கள் கொண்டு பணி நடைபெறுகிறது.
சம மட்ட எஸ்டேட்களில் மட்டுமே இது போன்ற எந்திரங்களைக் கொண்டு தேயிலை பறிக்க முடியும். மலைச்சரிவு கொண்ட இடங்களில் தொழிலாளர்கள் கத்தரி வெட்டு வாயிலாக தேயிலை பறிக்கின்றனர் என்றனர்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.
கோவை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1க்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 6 வரையும், 10-ம் வகுப்புக்கு கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி 20-ல் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்மையில் தேர்வு முடிவுகளும் வெளியாகின.
தற்போது கோடை விடுமுறை முடிந்து விட்டது. இதனையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் 14-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள், மைதானம், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், மின் இணைப்புகள் சரிபார்ப்பு, வளாக கட்டிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வகுப்பறையில் இருந்த ஒட்டடை அடிக்கப்பட்டு மேஜைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு பளிச் சென்று காட்சியளிக்கிறது.
இதேபோல் பள்ளி வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசாலாப்படுத்தும் பணியும் நடக்கிறது. மேலும் விளையாட்டு மைதானங்களில் உள்ள சிறு, சிறு பள்ளங்களும் சரி செய்யப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும்.
- ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
கோவை:
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பஸ்களில் முதல்கட்டமாக 65 பஸ்களுக்கு புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ்.) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கபட்டு, குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.
அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும்.
தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும்.
பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






