என் மலர்tooltip icon

    சென்னை

    • சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    • நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் காங்கிரசுக்குள் விசுவரூபம் எடுத்து உள்ள உட்கட்சி பிரச்சனையும், தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரங்களும் பெரும்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும். அமைச்சரவையில் இடம் வேண்டும். அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

    இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க.விடம் இருந்து உடனடியாக பதிலையும் எதிர்பார்க்கிறது. இது பற்றி கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்கும்படி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் தி.மு.க.விடம் வேண்டுகோள் வைத்தார்.

    ஆனால் தி.மு.க. தரப்பில் உடனடியாக பேச்சுவார்த்தை குழு அமைக்க வாய்ப்பில்லை என்றும் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றும் கூறி விட்டனர்.

    வழக்கமாக தி.மு.க. பேசும் போது பேசிக்கொள்ளலாம் என்றுதான் காங்கிரசும் காத்திருக்கும். ஆனால் இந்த முறை விஜய் கட்சி என்ற புதிய வாய்ப்பும் இருப்பதால் அதை பயன்படுத்தி தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    கூட்டணி விவகாரத்தில் காங்கிரசுக்குள்ளும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். அது மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும். காங்கிரசும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

    ஆனால் தேர்தல் அனுபவம் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டுமா? தி.மு.க. வெற்றிக் கூட்டணி. எனவே அதில் தொடரலாம். கூடுதல் சீட் போன்ற விவகாரங்களை பேசி முடிவு செய்யலாம் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.

    இந்த முறை காங்கிரசுக்கு தி.மு.க. 30 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்றும் இது தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசி உறுதி செய்வார் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு பாதையில் சென்று கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தது கட்சிக்குள் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. ஜோதிமணியின் கருத்துக்கு மற்றொரு எம்.பி.யான மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    தி.மு.க.வுடன்தான் கூட்டணி தொடர வேண்டும் என்றும் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்றும் காங்கிரசில் இரு பிரிவாக இருப்பதன் வெளிப்பாடு தான் இந்த புதுப்பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

    ஜோதிமணியின் விமர்சனத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு மாநில தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன் என்றார்.

    ஜோதிமணியின் புகாருக்கான பின்னணி காரணம் பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடசந்தூர், ஒட்டப்பிடாரம், பழனி ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு கட்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைவராக ஜோதிமணியின் ஆதரவாளர்தான் நியமிக்கப்பட்டார். தற்போது அந்த மாவட்ட தலைவர் ஜோதிமணிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.

    அவர் ஜோதிமணி பற்றி தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்காக டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பி.எல்.ஓ.1 படிவம் ஜோதி மணிக்கு குறிப்பிட்ட நாளுக்குள் சென்று சேரவில்லை. இதனால் பி.எல்.ஓ. 2 நியமிக்க தன்னால் முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

    வெளிச்சத்துக்கு வந்தது இந்த காரணங்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கி மாநில தலைமைக்கு எதிராக அணி திரள்வதாகவே கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரீஷ் சோடங்கர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

    சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து ஒவ்வொருவரிடமும் கருத்துக்கள் கேட்டறிந்தார்.

    கட்சிக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பது பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து இன்று மாலை வரை பல தரப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

    நாளை (ஞாயிறு) மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் அகில இந்திய செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

    • 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றம்.
    • நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய #DravidianModel அரசு!

    நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.

    திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார்.
    • கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் அரசி. இவரது பிறந்தநாள் (ஜனவரி 3) ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார். இது அவரது கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களுக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது, அவர் பெண்ணுரிமை மற்றும் வீர வரலாற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

    இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

    தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்!

    இவ்வாறு கூறினார்.


    • பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
    • தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

    அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்று உள்ளது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    அந்த ஆலோசனையின்போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக்கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

    ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

    புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

    பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகை யில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்து வதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 7-ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
    • அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநில அளவில் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டனர்.

    இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு 55 சதவீதம் பேர் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று பதில் அளித்துள்ளனர்.

    தி.மு.க. அரசு கடந்த 4½ ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள தா? என்பதற்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    விஜய்யின் த.வெ.க. எந்த கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்பதற்கு தி.மு.க. முதல் இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 3-வது இடத்திலும் உள்ளன.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, 41 சதவீதம் பேர் வரவேற்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி அடையவில்லை என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    விஜய்யின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். நன்றாக இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

    தமிழகத்தில் இளம் வாக்காளர்களை கவரக் கூடியவர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அண்ணாமலை 2-வது இடத்தில் உள்ளார்.

     

    அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

    விஜய்யின் சுற்றுப் பயணம் அரசியலில் தாக்கத்தை எற்படுத்தும் என்று 41 சதவீதம் பேரும், ஓரளவுக்கு ஏற்படுத்தும் என்று 27 சதவீதம் பேரும், இல்லை என்று 24 சதவீதம் பேரும் கருத்து கூறி உள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக த.வெ.க. உள்ளதா? என்பதற்கு இல்லை என்று 44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக விஜய்யை மக்கள் பார்க்கிறார்களா? என்பதற்கு இல்லை என்று 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    சீமான் வருகிற சட்டசபை தேர்தலில் எம்.எல். ஏ.வாக வேண்டும் என்று 69 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வாக்குகள் சிதறும். இது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது தவறு.

    தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளில் தி.மு.க. வலுவான கூட்டணியாக காணப்படுகிறது.

     

    அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும். சீமான் 4-வது இடத்தையே பிடிப்பார்.

    த.வெ.க. வலுவான கூட்டணி அமைத்தால் 2-வது இடத்தை பிடிக்க அ.தி.மு.க. கடுமையாக போராடும்.

    தமிழகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் 76 சதவீதம் வாக்குகள் பதிவானால் கூட்டணி ஆட்சி ஏற்படும். இந்த சதவீதம் மாறினால் வெற்றி வாய்ப்புகளும் மாறும். இந்த தேர்தலில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் தி.மு.க. முதலிடத்தில் உள்ளது.

    தி.மு.க. கூட்டணி 30.62 சதவீதம் ஓட்டுகளை பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 26.39 சதவீதமும், த.வெ.க.வுக்கு 21.07 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.
    • 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.

    * நாங்கள் எதிர்பார்த்தபடி ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

    * 48 ஆயிரம் பேருக்கு கருணை ஊதியம் அறிவித்திருப்பதை ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.

    * 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

    * எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்.

    * வரும் 6-ந்தேதி முதல் நடக்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்வதாக அறிவித்தது.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
    • ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

    இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

    இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது.

    அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.

    ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதலமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.

    * அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    * கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.

    * 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.

    * பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.

    * Tamil Nadu Assured Pension Scheme - TAPS செயல்படுத்தப்படும்.

    * ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    * 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.

    * பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.

    * ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

    சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    * தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

    * உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது.

    * கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.

    * தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.

    * த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி.

    * தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

    * தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    * கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    * கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
    • எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஆசிரியர் போராட்டம் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நான் அவர்களிடம் பேசி வருகிறேன். திருச்சியில் முதலமைச்சர் இதுபற்றி என்னிடம் கேட்டார். தேர்தல் வாக்குறுதியை கேட்கிறார்கள் என்றேன்.

    ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.

    ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

    அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

    ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
    • கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் திசம்பர் 31-ஆம் தேதி மது விருந்துடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும், அந்த நேரத்தில் நோயர்களுக்கு மருத்துவம் அளிக்க மருத்துவர்களோ, பிற பணியாளர்களோ இல்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதையை ஒழிப்பதற்கான அரசு மருத்துவமனைகளை போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

    திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால், நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான். திமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும்.

    மருத்துவமனையின் பிரசவ வார்டில் வைத்து மது அருந்தியவர்கள் யார்? அரசு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாமல் பழுதடைந்து கிடந்தது ஏன்? அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு இல்லாதது ஏன்? என்பதற்கான விடை அரசிடம் இல்லை. ஆனால், அங்கு பணியிலிருந்த 4 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதன் மூலம் அனைத்துத் தவறுகளையும் அவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்க திமுக அரசு முயல்கிறது. இத்தகைய சீர்கேடுகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அனைத்து தெருக்களிலும் மதுக்கடைகள் நிறைந்திருப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதும் தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் ஆகும். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு திமுகவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். அது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். 

    ×