என் மலர்
சென்னை
- திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
- திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை.
- தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!
புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
- 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.
இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
- பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது.
- திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
நம் பயணம் நீண்டது, தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை குறிவைத்து பாஜக செய்பவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் திமுகவை டார்கெட் செய்கின்றனர்.
பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது என கரூர் மாநாட்டிலேயே எடுத்து சொன்னேன்.
தொகுதி மறுவரையறை, கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என லிஸ்ட் நீள்கிறது.
அவர்களின் கூட்டணிக்குள் பல குழப்பம் இருந்தபோதிலும் திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையாக எதிர்ப்பது திமுக தான்.
அனுபவம், வலிமை, கொள்கைகளோடு பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது.
திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முன்னெடுப்பில் ஒருகோடிக்கும் அதிகமான குடும்பங்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.
இந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போலதான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
- அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கல்வி, மருத்துவத்தரம், உள்கட்டமைப்பு, சட்டம், ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது தான் பொருளாதார வளர்ச்சி.
பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம், வாங்கும் திறனை எடுத்துக்காட்டுவது ஜிடிபி.
4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
கொரோனா பாதிப்பு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்தும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதா வளர்ச்சி.
அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்" என்றார்.
- வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.
- குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்.., என விஜய் பேச்சு.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது " CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்துள்ளாரா? என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா "கண்டது கழியது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்" என பதில் அளித்தார்.
- ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
- முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைகளும் என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்," தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம்" என்றார்.
- இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும். அதற்காக சென்ட்ரல் மெட்ரோவில் அலுவலகம் திறக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும், பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: LFO@cmrl.in
இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
- செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னைக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 265 மி.லி. குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார்.
- அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டெல்லி செல்கிறார்.
பா.ம.க.வின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவராக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது 'ஏ' மற்றும் 'பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அன்புமணி கையொப்பமிட்ட படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து ராமதாஸ் தரப்பு அணி ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு அணியினர் கூறுகையில்,
பா.ம.க. கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாம்பழச் சின்னம் ராமதாஸ் அணிக்கு மட்டும் தான் சொந்தமாகும். ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்து மறைக்கப்பட்டு, போலியான ஆவணங்களை அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எங்களது கடிதங்களை ஆய்வு செய்து ஒரு நியாயமான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றால், ராமதாஸ் அணி தரப்பில் இருந்து கண்டிப்பாக நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் மன்றம் ஆகியவை முன்னிலையில் எங்களது கோரிக்கையை முன்வைத்து சட்ட போராட்டங்களை மேற்கொள்வோம். பா.ம.க. கட்சி விவகாரத்தில் ராமதாசை ஏமாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பா.ம.க.வை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டெல்லி செல்கிறார். ஓரிரு வாரங்களில் ராமதாஸ் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.
இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது.
இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.
இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.






