என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய-கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    அதே நேரம் இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 24-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
    • ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

    * 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

    * 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"

    * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    * நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

    * தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    என்று தெரிவித்தார். 

    • 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாக குறைப்பு.
    • 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், ஆவின் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன் பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலைகள் மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். அப்படியில்லாமல் அதே விலையில் விற்க வேண்டும் என்றால் பால் பொருள்களின் அடிப்படை விலையை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள். ஆவின் பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டனவா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    அமுல் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் விலைகுறைப்பு செய்ய மறுப்பதன் நோக்கம் என்ன? ஆவின் பொருள்களை பயன்படுத்தும் ஏழை மக்களை சுரண்டி அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

    பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மறைந்த நடிகர் ஏம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுடைய மனைவி கீதா ராதா மறைவுக்கு இழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 148 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    17-09-2025- ஒரு கிராம் ரூ.142

    • காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு.
    • வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

    வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மாகாலனி, வெங்கடேஸ்வராநகர், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், செயலககாலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்ககாலனி, ராஜீவ்காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம்நகர், கந்தன்சாவடி, சந்தோஷ்நகர், பால்ராஜ்நகர், காந்திநகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோநகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, கவிந்தன்நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்காரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர்நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சி.எல்.ஆர்.ஐ.நகர், ரூகி காம்ப்ளக்ஸ்.

    சேத்பட்: மெக்நிக்கல்ஸ் சாலை, நௌராஜி சாலை, குருசாமி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, முத்தையப்பா தெரு, அருணாச்சலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்ராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கமாடத் தெரு, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, சாஹிப் தெரு, தெற்கு கசரத் தோட்டம், வடக்கு அரச தோட்டம், வாசு தெரு, ராஜ ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியாள் தெரு, டெலிபோன் குவாட்டர்ஸ், போஸ்டல் குவாட்டர்ஸ், ஹைல்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆர்பிஐ குவாட்டர்ஸ், திருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு.

    கல்லூரி சாலை: கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ, பைக்ராஃப்டி கார்டன் தெரு.

    ஆழ்வார்திருநகர்: ஆர்.கே.நகர் பிரதான சாலை, இந்திராகாந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜிநகர், திருமலைநகர்.

    தில்லைகங்காநகர்: ஆண்டாள்நகர் 1வது பிரதான சாலை, விரிவாக்கம், மற்றும் 1 முதல் 5 வது குறுக்கு தெரு, கிருஷ்ணராஜாநகர் 1 முதல் 4வது தெரு, மற்றும் விரிவாக்கம், பிருந்தாவன்நகர் 1 முதல் 7 வது தெரு மற்றும் விரிவாக்கம், நேதாஜி காலனி 1வது பிரதான சாலை மற்றும் 1, 2வது குறுக்கு தெரு, ரெயில்வே காலனி 5வது லேஅவுட், சதர்ன் செல்டர், நறுமுகை அபார்ட்மெண்ட்.

    சின்மையாநகர்: சாய்நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன்நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோநகர், சாய்பாபா காலனி, ரத்னாநகர், தாராசந்த்நகர், எல் மற்றும் டி காலனி, சி.ஆர்.ஆர்.புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திராநகர், ராஜீவ்காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்திநகர், வாயுபுத்ரா தெரு, பாலாம்பால்நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜிநகர், எஸ்பிஐ காலனி, பிஏ. காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரிநகர்.

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • வருகிற 27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வருகிற 27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
    • உ.பி.யில் சில மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.

    மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற 'திங்க் இந்தியா' மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கிறது என்று கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்.

    கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்(NEP) கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.

    நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர இத்தனை மொழிகள் கற்பிக்கப்படும்போது, மூன்றாவது மொழியால் என்ன பிரச்சனை?  

    நாங்கள் எந்த மொழியையும் யாரையும் மீது திணிக்கவில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு மொழிகளும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஒரு மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு மொழிகளை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.

    பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது அவர்கள் விரும்பினால் தமிழைக்கூட தேர்வு செய்யலாம்.

    இந்தியாவில் சுமார் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் தாய்மொழிகள் அல்லது பிராந்திய மொழிகளைப் பேசுகிறார்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான் ஒரு ஒடியா, எனக்கும் என் மொழி மீது அன்பு உண்டு, ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    மேலும் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை நிறுத்தி வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதான், "இது ஒரு அரசியல் பிரச்சினை. நான் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை இதைப்பற்றி பேசியுள்ளேன். நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டது. அதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை.

    மத்திய அரசு பல திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களுக்கும், பிரதமர் போஷன் (மதிய உணவு) திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசஷ் மற்றும் எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தபோது RTE நிதி குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.

    மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இதில் அரசியல் நலன்களைக் கொண்டு வர வேண்டாம். நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் " என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.  

    • நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.
    • இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    அண்ணாவும், கலைஞரும் சந்தித்துக் கொண்டது மிலாது நபி விழாவில் தான். இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அந்த சந்திப்பின்போது தான் அமைந்தது.

    இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும்.

    நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.

    நபிகள் கூறிய சமத்துவத்தை தான் தந்தை பெரியாரும் முன்மொழிந்தார்.

    காசாவில் அரங்கேறும் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காசாவில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்.

    மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக உள்ள இயக்கம் திமுக. பாஜகவிற்கு துணை போகிற இயக்கங்களை புறகணிக்க வேண்டும். 

    • திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
    • திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    ×