என் மலர்
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடுவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியக்குடி, சாத்தாம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இதே போல் அரியலூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரிய நாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, அயன் ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக் கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தாவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், விழுப்பணங் குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்த நாயகன்குடிக்காடு, பெரிய குறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலாவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா தேசியகொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை விரும்பும் பொருட்டு வென்புறாக்களை பறக்கவிட்டார், திறந்தவெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 3 நபர்களுக்கு 75 ஆயிரமும், வேளாண்மை துறை மூலம் 7 நபர்களுக்கு 50 ஆயிரமும் உட்பட ரூ.1.25 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காவல் துறை, தீயனைப்புதுறை, வருவாய்துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, காவல் துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், ஊராட்சி உதவி இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, இந்து சமய அற நிலையத்துறை உதவி அலுவலர் செந்தில்குமார், வேளாண்மைதுறை இணைஇயக்குனர் அய்யாசாமி, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வ ராஜ், வேளாண்மை செயல் பொறியாளர் கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், ஆர்டிஓ அரியலூர் மோகனராஜன், உடையார்பாளையம் டீனா குமாரி,
தாசில்தார் முத்துலெட்சுமி, உமாமகேஸ்வரி, வேல்முருகன், ராஜமூர்த்தி, அரசு கேபிள்டிவி தாசில்தார் முத்துகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி, யூனியன் கமிஷ்னர் பிரபாகரன், ராஜேந்திரன், நகராட்சி கமிஷனர் வினோத், மாவட்ட கூடுதல் காவல்துறை கண்கானிப்பாளர் சண்முக நாதன், டி.எஸ்.பி. மோகன்தாஸ், கென்னடி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு தனியார் தொழிற்சாலைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் குடியரசுதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. #tamilnews

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயங்கொண்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தது குறித்து கேட்ட போது ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர். அமைதி பூங்காவாக தமிழகத்தை பார்த்துக்கொள்ளும் திரவிடக்கழகத்திற்கு அனுமதி மறுத்தது ஒருதலைபட்சமானது.
இதற்கான விலையை இந்த அரசு தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பே கொடுக்கவேண்டியது இருக்கும். ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து கருத்துக்காக எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக அவருடைய பேச்சை திரித்து மாற்றிக் கூறி அதன் மூலமாக பெரியார் மண்ணில் ஆர். எஸ்.எஸ்.ஐ. அல்லது மத வெறியை தூண்டி தாங்கள் கால் ஊன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுமா இதனால் அரசியல் லாபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்று நினைக்கிறார்கள்.
ஆன்மிக அரசியல் அடித்தளத்தை இதன் மூலமாக நிறைவேற்றலாமா? என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. என்ன முயற்சி எடுத்தாலும் நோட்டாவை விட இவர்கள் எவ்வளவு நோட்டு கொடுத்தாலும் அதிகமான இடத்தில் வெற்றி பெறமுடியாது என்பது தெரிந்துவிட்டது. நோட்டாவுக்கும் பா.ஜ.வுக்கும் தான் போட்டியே தவிர இவர்களுக்கும் மற்ற கட்சிக்கும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் ராமதாசை ஜீயர்கள் சென்று சந்தித்தது குறித்து கேட்டபோது, பெரியார் பாதைக்கு அவர் விரைவாக வந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என தெரிவித்தார்.
ஆண்டாள் விவகாரத்தில் ரஜினி மற்றும் கமல் மவுனம் குறித்து கேட்ட போது, இது போன்ற கருத்து சொல்லக் கூடிய அளவிற்கு ஆழமான சிந்தனையும், துணிவும் அவர்களுக்கு இல்லை என்பது தான் தெளிவாக காட்டுகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது தான் அவர்களுடைய நிலைப்பாடு.
கூட்டத்தின் முடிவில் கி.வீரமணியின் எடைக்கு எடை நாணயங்கள், காய்கறி மூட்டை, தென்னை மரக்கன்றுகள் வழங்கினர். #Tamilnews






