என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்
அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஐந்தாம் கட்டமாக இரண்டு கிராமங்கள்-உடையார் பாளையம் மற்றும் அரியலூர் வட்டங்களில் வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் 2-ந்தேதி நாளை வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடக்கிறது.
அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, விளாங்குடி ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் முத்து சேர்வாமடம், பிளிச்சிகுழி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டத்தில் காட்டாத்தூர் (வ) கிராமத்திலும், செந்துறை கிராமத்திலும் நடைபெறுகிறது.
முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். #tamilnews
Next Story






