என் மலர்tooltip icon

    அரியலூர்

    தா.பழூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் நிறைந்த இப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொள்ளிட ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது கரைபகுதிக்கு எதிர்புறத்தில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை நோக்கி 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று வருவதை பொதுமக்கள் பார்த்தனர்.

    இதில் அச்சமடைந்த அவர்கள் கிராமத்திற்குள் சென்று ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விரைந்து வந்து முதலையை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து தா.பழூர் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தா.பழூர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இளைஞர்கள் பிடித்து கட்டி வைத்திருந்த முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தா.பழூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கொள்ளிட ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இந்த பகுதியில் இன்னும் அதிக முதலைகளை பார்த்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கிராம மக்கள் தங்களது கால்நடைகளை இந்த ஆற்றில் தான் குளிப்பாட்டுவார்கள், மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் விடுவார்கள். பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும். அணைக்கரை ஆற்றில் அதிகளவு முதலைகள் இருப்பதால், அங்கிருந்து உணவு கிடைக்காமல் அங்கு இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. எனவே முதலைப்பூங்கா அமைத்து முதலைகளை பாதுகாப்பதோடு மட்டும் அல்லாமல், மக்கள் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தே.மு.தி.க. கொடி நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தே.மு.தி.க. கொடி நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட தலைமைக்கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் கழக தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல்அமீது தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதனையடுத்து அரியலூர் 7,8-வது வார்டுகளிலும், அரியலூர் ஒன்றியம் காஞ்சி லிகொட்டாய், திருமானூர் ஒன்றியம் கோமான், குருவாடி, காமரசவல்லி, மாத்தூர், கீழவரப்பங்குறிச்சி, மாதா காலனி, ஏலாக்குறிச்சி, கீழ கொளத்தூர், சாத்தமங்கலம், முடிகொண்டான், திருமா னூர், குலமாணிக்கம், செம்பியக்குடி, கோவில் எசனை, ஆங்கியனூர்,

    வெங்கனூர், வேட்டக்குடி, எரக்குடி, அயன்சுத்தமல்லி, மடத்தான்குளம், மேலப்பழூர், மல்லூர் ஆகிய ஊர்களில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைதலைவர் ஜோசப் சத்ய மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், அரியலூர் நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் மணிகண்டன்,

    திருமானூர் கிழக்கு ராஜ்குமார், மேற்கு ஜெகதீசன், அரியலூர் ஒன்றிய பொருளா ளர் சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கலிய மூர்த்தி, அரியலூர் மாவட்ட அணிச் செயலாளர்கள் நல்ல தம்பி, ராமச்சந்திரன், சகாதேவன், முன்னாள் மாவட்ட மாணவரணி தர்மராஜ், சதீஸ்குமார்,

    அரியலூர் நகர நிர்வாகிகள் மதி, சேகர், சுந்தர், ராஜா, கண்ணன், சின்னமுருகன், மருது, சக்தி, திருமானூர் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ரெங்கராஜ், சாமிநாதன், விஜயலாரன்ஸ், பிரான்சிஸ் பாலகுமார், முத்துலிங்கம், பழனியப்பா, தெய்வநாதன், கருப்பையா, செந்தில்குமார் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். #tamilnews

    ஜெயங்கொண்டத்தில் வீட்டு பாதை பிரச்சனையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வாரியங்காவல்: 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 7-வது கிராசில், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான அண்ணாமலை (வயது 60) தனது மகன்களுடன் வசித்து வருகிறார். ஜெயங்கொண்டம்-தா.பழூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை இவர், வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீட்டுக்கு பாதை விடுவது சம்பந்தமாக, முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை அண்ணாமலை மனு கொடுத்தும் உரிய தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே கம்பி வேலி அமைப்பதற்கான பணிகள் நடந்ததால், தகவல் அறிந்த அண்ணாமலை தனது குடும்பத்துடன் அங்கு வந்து அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் மனமுடைந்த அவர், திடீரென மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

    இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர் வைத்திருந்த கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் அண்ணாமலையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    அரசு ஊழியரின் நிலத்தை அளக்க லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்  அருகே  உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த வர் கருணாநிதி. அரசு போக்குவரத்து  கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க கடந்த 2012 ஆம் ஆண்டு செந்துறையை அடுத்த படைவெட்டிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்த நில அளவையர் மணிமொழி என்பவர் ரூ.2  ஆயிரத்து 500  லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை குற்றவி யல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி லஞ்சம் வாங்கிய நில அளவையர் மணிமொழிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். #tamilnews
    பல்கலைக்கழக பி.எச்.டி. மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வி.ஏ.ஓ. சென்னையில் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துசேர்வாமடம் கிராமம் பெரியத்தெருவை சேர்ந்தவர் புஷ்பா (வயது 30). இவர் பட்டபடிப்பு முடித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.  இவருக்கும் தற்போது முத்துசேர்வாமடம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் செல்வராசு (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

    செல்வராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதனை மறைத்து புஷ்பாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் புஷ்பா குடும்பத்தினருடன் சேர்ந்து வாழலாம் என செல்வராசுவிடம் தெவித்துள்ளார். குடும்பத்தினருடன் சேர்ந்தால் தனது குட்டு உடைந்து விடும் என அஞ்சிய செல்வராசு புஷ்பாவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கு மிடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் செல்வராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் புஷ்பாவிற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தால் செல்வராசு புஷ்பாவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதில் மனமுடைந்த புஷ்பா கடந்த 5 மாதத்திற்கு முன்பு கழுத்தில் கட்டிய தாலியை அறுத்து எறிந்ததோடு, வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து புஷ்பாவின் தாய் சுகுணாவதி, மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வி.ஏ.ஓ. செல்வராசு, புஷ்பாவை தற்கொலைக்கு தூண்டியதோடு, அவர்  தலைமறைவானதும் தெரியவந்தது.

    அவரை கைது செய்வதற்காக தொடர்ந்து போலீசார்  தேடி வந்தனர். இந்த நிலையில் செல்வராசு சென்னை குன்றத்தூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான  போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கி இருந்த வி.ஏ.ஓ. செல்வராசுவை கைது செய்தனர்.  6 மாதத்திற்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். #tamilnews
    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில்  உள்ள காவேரிக்கரையில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று மிதந்ததை பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் சென்று பார்த்தனர்.  அப்போது அங்கு மிதந்த உடல் பெண் என்பது தெரியவந்தது. அவரது உடலில் இரண்டு கால்களிலும் தையல் போடப்பட்டிருந்தது. கழுத்திலும் தையல் போடப்பட்டிருந்தது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம் என அனிதா நினைவு நூலக அடிக்கல் நாட்டு விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா நீட் தேர்வால் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவி அனிதா நினைவாக நூலக அடிக்கல்நாட்டு விழா, அவரது சொந்த ஊரான, குழுமூர் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு குன்னம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம். எல்.ஏ. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடைசி வரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து போராடும் என்றார்.

    அவரை தொடர்ந்து குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசுகையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு பெற அ.தி.மு.க. அரசு கடுமையாக போராடியது.

    உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரிலேயே நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவிடாமல் தடுத்தார். எனவே தமிழகத்தில் நீட் வந்ததற்கு அ.தி.மு.க. அரசு காரணம் இல்லை.

    அரசியல்வாதிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதனை கேட்ட அ.தி.மு.க.வினர் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    தொடர்ந்து பேசிய அவர் அனிதா இறந்தபோது என்னால் நேரில் வர இயலவில்லை. எனவே, அவரது நினைவு நூலக கட்டுமானப் பணிக்காக எனது சொந்த பணத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன் என்றார்.

    அனிதா நினைவு நூலகத்திற்கு நடிகர் லாரன்ஸ் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்.

    திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி பேசுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபரின் தாயாருக்கு, நான் மகனாக இருந்து எனது சொந்த செலவில் வீட்டு கட்டிக் கொடுத்தேன். அதற்கான கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்று விட்டு வந்தேன்.

    அதேபோல, நீட் தேர்வால் இறந்த அனிதாவுக்கு, அவரது அண்ணணாக இருந்து எனது சொந்த செலவில் இந்த நூலகத்தை கட்டி முடிப்பேன். பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். வரும் தேர்தலிலாவது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்களுக்காக ஓட்டு போடாதீர்கள். யார் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.

    ஒரே மேடையில் அ.தி.மு.க., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது அரசியல் நாகரீகம் மாறியுள்ளதாகவும், மக்கள் பிரச்சனைகளுக்கும் இதே போன்று அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். #Tamilnews
    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி குழந்தைகள் பூங்காத்திடல் பகுதியில் 1 ஆண்டாக  குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சை ஏற்க மறுத்த பொதுமக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகள் வந்த பின்னரே சாலை மறியல் போராட்டத்தை கை விடுவோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் வளர்ச்சி துறையினர் இன்னும் 1 மணி நேரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கான்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    பின்னர் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று அங்கு பழுதாக மின் மோட்டாரை சரி செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    இந்த போராட்டத்தால் அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் தெற்க்குபட்டியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தங்களது 100 நாள் அட்டையை சாலை கட்டி தொங்க விட்டு செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் செந்துறை ஜெயங் கொண்டம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    அரியலூரில் கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் அரியலூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்றிரவு ஜெயலட்சுமியும், அவரது தோழி கார்த்திகாவும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக கொல்லாபுரத்தில் இருந்து அரியலூருக்கு மொபட்டில் சென்றனர். அப்போது வழியில் டாடா சுமோ காரில் வந்த ஒரு கும்பல் திடீரென ஜெயலட்சுமியின் மொபட்டை வழிமறித்த தோடு, அவரை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகா ஊருக்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்கள் அரியலூருக்கு விரைந்து சென்று மகளை கடத்தி சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை.

    இதையடுத்து அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதில், கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (26), பாஸ்கர் (25) மற்றும் 5 பேர் சேர்ந்து ஜெயலட்சுமியை கடத்தி சென்றுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இதற்காக அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஜெயலட்சுமி எதற்காக கடத்தப்பட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் அவரை கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக கடத்தி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பல் பிடிபட்டால்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மக்கள் பிரச்சனைக்காக திமுக.வுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் நேரத்தில் திமுக.வுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று திருமாவளவன் கூறினார். #thirumavalavan #dmk #coalition
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவக்கொலைகள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஜெயங்கொண்டத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட வீரத்தமிழன் மற்றும் ஜெகதீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவக்கொலையா? என போலீசார்  விசாரணை செய்ய வேண்டும். 

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டியாவது 10 ஆண்டுகள் சிறை என்பதை 8 ஆண்டுகளாக குறைத்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 25 பேர் உள்ளிட்டவர்களை நன் நடத்தை விதிகளின் படி விடுதலை செய்ய வேண்டும்.

    மின் வாரிய ஊழியர்கள், சத்துணவு அங்கன் வாடி ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிட கழகம் சார்பில்  நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும். 

    மேலும் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் நீட் தேர்வு இருப்பது ஒருதலைபட்சமானது. காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்குள்ள உரிமையை பெற்று கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 
    அரியலூர் மக்கள் பிரச்சனைக்காக திமுக.வுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் நேரத்தில் திமுக.வுடன் கூட்டணி குறித்து  முடிவு செய்யப்படும் . 

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது  மாவட்ட செயலாளர் செல்வநம்பி , கருப்புசாமி, மகளிர் அணி திருவிழி திருமாறன், செல்வராஜ், செந்துறை ஒன்றிய செயலாளர் வீரவளவன், பாலசிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilnews #thirumavalavan #dmk 
    அரியலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி ஒருவர் புதிதாக கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா இன்று நடக்கிறது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். இதையடுத்து அவரை வரவேற்று ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகில் கட்சி நிர்வாகிகள் சார்பில் பெரிய வடிவில் பேனர் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது பேனரின் கீழ் பகுதி தீயில் எரிந்து கிடந்தது. இதையறிந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து குவாகம் போலீசில் புகார் செய்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். பேனர் தீப்பிடித்து எரிந்தது எப்படி என்று தெரியவில்லை. யாராவது மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பேனர் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கலப்பு திருமணம் செய்த வீரத்தமிழன், ஜெகதீஸ்வரி ஆகியோர் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதன் காரணமாகவும் அரியலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்த வாடி பிரிவு சாலையில் இரும்புலிக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது அனுமதியில்லாமல் போர் வெள்ளுக்கு போடும் கூழாங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ராமரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். 

    தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த லாரி உரிமையாளர் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேசையும் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். அதே போன்று வீராக்கன் கிராமத்தில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் நாகல்குழியை சேர்ந்த கார்த்திகேயனை கைது செய்தனர். 

    இன்று அதிகாலை இரும்புலிக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது  மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்ததோடு வங்காரத்தை சேர்ந்த பஞ்சநாதனை கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இரும்புலிக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டரின் இந்த அதிரடி வேட்டை செந்துறை பகுதி மணல் கொள்ளையர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×