search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் கார் மோதல்"

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலியானார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் ஞானமணி(வயது 54). இவர் தி.மு.க.வில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி பரிமளா(48). இவர்களுக்கு ரஞ்சிதா(22) என்கிற மகளும், ரஞ்சித்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பரிமளா அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இதேபோல் எலவத்தடி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்(47). இவரது மனைவி ஜானகி(42), மகள் ரம்யா(22), மகன்கள் அஜித்குமார்(20), அரவிந்த்(15) ஆவார்கள்.

    ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். நேற்று மாலை 6 மணிக்கு சத்திரம் கூட்டுரோட்டில் இருந்து பேர்பெரியான்குப்பத்திற்கு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வேகாக்கொல்லை என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயடைந்த ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    கிழக்கு கடற்கரை சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident
    சோழிங்கநல்லூர்:

    பாலவாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23) என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் நோக்கி திரும்பி வந்தார்.

    அப்போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகள் மைதிலி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மைதிலி, கோத்தகிரியை சேர்ந்த ஒருவருடன் பீளமேட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மைதிலி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

    இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவரும், இவரது மனைவி சத்யா (25) மற்றும் இவருடைய மாமன் மகன் நாகராஜ்(25) ஆகிய 3 பேரும் இன்று காலை சொந்த வேலை காரணமாக ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இந்த மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று லாரியை முந்திச்செல்ல முயன்றது. இதில் கார் நிலைதடுமாறி செல்வம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கி, சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அவரது கணவர் செல்வம் மற்றும் உறவினர் நாகராஜ் ஆகிய இருவரும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அடிப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கும், நாகராஜை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் காரை பறிமுதல் செய்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×