என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் இன்று காலை இரண்டாம் நாள் நடைபயணத்தை தொடங்கினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் ஆ.ராசா, வி.பி. துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சாத்தமங்கலம், கள்ளூர் பாலம் வழியாக திருமானூர் சென்றது. பின்னர் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வழியாக கும்பகோணம் சென்றடைகிறது.
முன்னதாக நடைபயணத்தின்போது திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டு மொத்த தமிழகமே காவிரி நீருக்காக போராடி கொண்டிருக்கும் போது அதை திசை திருப்பும் வகையில் ஐ.பில்.எல். போட்டிகளை நடத்துவது வேதனை அளிக்கிறது. இந்த போட்டிகளை நடத்த வேண்டாம் என சொல்லவில்லை. தள்ளி போடுங்கள் அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றுங்கள் என வலியுறுத்தியும் அதனை மீறி நடத்துவது கண்டனத்திற்கு உரியது.
சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டினால், நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என தமிழக அமைச்சர் கூறியுள்ளது அக்கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும், இது வரலாற்று பிழையாக அமையும்.

ஜெயலலிதா இல்லை என்பது இப்போது நமக்கு வேதனையை தருகிறது. அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிய வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களே ஒன்று திரண்டு போராடி கொண்டிருக்கும் போது மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போவது மாபெரும் வரலாற்று கரையாக அமைந்து விடும். மத்திய அரசை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்கிறது.
இதேபோல் ஐ.பில்.எல். போட்டிகள் நடத்தும் நிறுவனத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகள் முத்துமாரி (30) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. நதியா, நதி, நதிஷ் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், முத்துமாரியை உருட்டுகட்டையால் சரமாரி தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கூவாகம் போலீசார் கடந்த 3-ந்தேதி நடராஜன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது முத்துமாரி இறந்து விட்டதால், நடராஜன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்து, தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் 3 பேரும் நிர்கதியாய் தவித்து வருகிறார்கள்.
அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசினை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அரியலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், மாவட்ட அவைதலைவர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், குணா, மணிவண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவி விஜயலட்சுமி உள்பட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு அரியலூர் பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு வந்தனர்.
பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தீமிதி திடல் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. நிறுத்தப்பட்டிருந்தது. அதனை திருடிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கொண்டு கடைக்கு வந்தார்.
கடை உரிமையாளரிடம் வண்டியை ஸ்டார்ட் செய்து தரும்படி கேட்டுவிட்டு, தனது வண்டிக்கு அனைத்து லாக்குகளையும் மாற்ற எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் இந்த வண்டி என்னுடைய நண்பருக்கு சொந்தமானது, நீ எப்படி எடுத்து வந்தாய் என்று கேட்டவுடன் திருடன் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் மருதூர் நோக்கி அந்த வாலிபர் வாகனத்தில் தப்பினார்.
இதையறிந்த கடை உரிமையாளர் மற்றும் பொது மக்கள் தப்பியோடிய திருடனை விரட்டி சென்றார்கள். இதில் தப்பி ஓடிய திருடன் பொன்பரப்பி பெரிய ஏரி அருகே குறுக்கு வழியில் சென்று விடலாம் என நினைத்து இடது புறமாக திருப்பியுள்ளார்.
ஆனால் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். மேலும் பொது மக்கள் தன்னை துரத்தி வருவதை அறிந்த திருடன் எழுந்து அருகில் இருந்த ஏரியில் குதித்து தப்பி விடலாம் என நினைத்து குதித்துள்ளார்.
ஆனால் பொது மக்கள் ஒரு மணி நேரமாக ஏரியை சுற்றி தேடியுள்ளனர். திருடன் தண்ணீரில் நீந்தி அடுத்த கரை வழியாக தப்பியிருக்கலாம் என நினைத்து கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஏரிக்கு குளிக்க வந்தவர்கள் சிலர் ஏதோ சடலம் மிதப்பதாக கூறினர். இதை கேள்விப்பட்டு ஊர்மக்கள் கூட்டம் கூடியது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடம் வந்த செந்துறை போலீசார் விசாரணை செய்ததில் அந்த வாலிபர் நாச்சியார் பேட்டை மேற்கு தெருவைச்சேர்ந்த கலியபெருமாள் மகன் தளபதி (22)என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






