என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தவர் கைது
Byமாலை மலர்6 April 2018 1:41 PM GMT (Updated: 6 April 2018 1:41 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்தவர் சூசைமேரி (43). இவர் ஜெயங்கொண்டம் நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சூசைமேரி பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
இது குறித்து சூசைமேரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரித்ததில் மேலுரை சேர்ந்த பாலமுருகன் (38) என்பது தெரியவந்தது. இது குறித்து பாலமுருகன் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X