என் மலர்
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கோக்குடி அருகே உள்ள காணிக்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன்குமார். மதபோதகரான இவர் அரியலூர் மீனாட்சி நகரை சேர்ந்த மார்க்ஸ்ட், திருச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் சாலையில் நடந்து சென்றவர்களிடம் கிறிஸ்தவ மதம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
அப்போது அங்கு வந்த கடுகூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் முத்துவேல் (வயது 25), காமராஜர்நகரை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல் (39), ஓ.கூத்தூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் பொன்சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோன்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி உள்ளனர்.
மேலும் அவர்களை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று, அவர்களின் நெற்றியில் குங்குமம் மற்றும் விபூதியை பூசி கீழே விழுந்து வணங்கும்படி துன்புறுத்தியதோடு, அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆரோன்குமார் அரியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.
இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சிலை, கடைவீதி, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் துணை தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வில் கருணாநிதி தங்களது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு வந்ததால் அதனை எதிர்த்த எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து அண்ணாவை முன்னிலைப்படுத்தி தொடங்கிய கட்சி அ.தி.மு.க.,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் , தமிழக முதல்வராக பதவியேற்க உறுதுணையாக இருந்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துரோகத்தை எதிர்த்து அன்று தொடங்கப்பட்ட இயக்கம். இன்றும் துரோகிகளை எதிர்த்து வெற்றி பெறும் இயக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயேட்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில், நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்த நேரத்தில், பயில்வான் தி.மு.க.வே தேர்தலை நிறுத்த பல வேலைகளை செய்தது. 10 தலைகளை கொண்ட ராவணன் போல, பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க., பயப்படுகிறது.
தம்பிதுரை பேச்சு எல்லாம் டூபாக்கூர். முன்பு எம்.பி.,க்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்றால் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல பட படவென வெளியே வரும். என்னை மு.க.ஸ்டாலின் 20 ரூபாய் என கூறுகிறார். அவர் ஆர்.கே. நகரில் டெப்பாசீட் வாங்காததால் நான் ஸ்டாலினை டெபாசீட் ஸ்டாலின் என அழைப்பேன். கரூரில் தி.மு.க.வினருக்கு ஆள் இல்லாததால் நம்ம செந்தில் பாலாஜியை மாவட்ட செயலாளராக ஆக்கியுள்ளனர். அவரை பற்றி தான் நமக்கு தெரியுமா? இல்லையா?.திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.பரவாயில்லை. 3 மாதத்தில் தேர்தல் வரும் போது தெரியும் . வரும் ஏப்ரல் , மே மாதத்தில் நடைபெறவுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.அமோக வெற்றி பெறும் .
தமிழக மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். எனவே கட்சியினர் மக்களை சந்தித்து 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வது எரியும் நெரிப்பில் எண்ணை ஊற்றும் செயலாகும். மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோஜியோ அமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி என கூறுவது கானல்நீராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். எடப் பாடி பழனிச்சாமி சத்தமாக கூறினால் அது பொய்யாகத்தான் இருக்கும். மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக அரசு பணத்தை செலவழித்துள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்றார். #dinakaran #bjp #edappadipalanisamy #parliamentelection






