என் மலர்
அரியலூர்
காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் குடும்பத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறினார். #PulwamaAttack #SivaChandran #TamilisaiSoundararajan
ஜெயங்கொண்டம்:
காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் பலியாகினர்.
இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த வீரர் சிவச்சந்திரனும் பலியானார். அவரது உடல் இன்று மாலை அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்திற்கு வந்து, சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருப்போம். சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நர்சிங் படித்துள்ளார். எனவே அவருக்கு அந்த துறை சார்ந்த அரசு பணி வழங்க தமிழக அரசை வலியுறுத்துவோம். சிவச்சந்திரன் அவரது மகனை ஐ.பி.எஸ்.ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதனை தற்போது அவரது மனைவி காந்திமதி நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
அவரது மகன் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசு சிவச்சந்திரன் குடும்பத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #TamilisaiSoundararajan
காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் பலியாகினர்.
இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த வீரர் சிவச்சந்திரனும் பலியானார். அவரது உடல் இன்று மாலை அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கார்குடி கிராமத்திற்கு வந்து, சிவச்சந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவச்சந்திரன் பணியின் போது எடுத்துக்கொண்ட படம்.
சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருப்போம். சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நர்சிங் படித்துள்ளார். எனவே அவருக்கு அந்த துறை சார்ந்த அரசு பணி வழங்க தமிழக அரசை வலியுறுத்துவோம். சிவச்சந்திரன் அவரது மகனை ஐ.பி.எஸ்.ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதனை தற்போது அவரது மனைவி காந்திமதி நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
அவரது மகன் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசு சிவச்சந்திரன் குடும்பத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #TamilisaiSoundararajan
கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை செயல் அதிகாரி அறிவுறுத்தினார்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப்பணிகள் மற்றும், குடிநீருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையரும் முதன்மை செயல் அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் வருகிற கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆழ்குழாய் கிணறுகள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அலுவலர்களும் கண்காணித்து, அவற்றில் பழுது ஏற்பட்டிருந்தால் உடனடியாக பழுது நீக்கம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பழுது ஏற்பட்டிருக்கும் காலங்களில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது.
மேலும் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களிடம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், கட்டையன் குடிகாடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதை பார்வையிட்டு முதன்மை செயல் அதிகாரி ஆய்வு செய்தார். மேலும் பொன்பரப்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும், பணியாளர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
இதில், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, நகராட்சி ஆணையர்கள் திருநாவுகரசு, வினோத் மற்றும் வருவாய், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மோகன்ராஜ்(வயது 22). இவர் தனது தாய் மாமா மாரியப்பனுக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை, அறுவடைக்காக ஓட்டி வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் வயலுக்கு, நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக நேற்று மாலை மோகன்ராஜ், அவருடைய தாய்மாமா மகன் மகேந்திரனுடன்(25) டிப்பர் லாரியில் அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியை மகேந்திரன் ஓட்டினார். மோகன்ராஜ், லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுதாகரின் வயலுக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகளை கவனிக்காமல் லாரியை, மகேந்திரன் ஓட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பிகள் நெல் அறுவடை எந்திரத்தின் மீது உரசியது. இதனால் நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லாரியை ஓட்டிய மகேந்திரன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மோகன்ராஜ்(வயது 22). இவர் தனது தாய் மாமா மாரியப்பனுக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை, அறுவடைக்காக ஓட்டி வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் வயலுக்கு, நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக நேற்று மாலை மோகன்ராஜ், அவருடைய தாய்மாமா மகன் மகேந்திரனுடன்(25) டிப்பர் லாரியில் அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியை மகேந்திரன் ஓட்டினார். மோகன்ராஜ், லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுதாகரின் வயலுக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகளை கவனிக்காமல் லாரியை, மகேந்திரன் ஓட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பிகள் நெல் அறுவடை எந்திரத்தின் மீது உரசியது. இதனால் நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லாரியை ஓட்டிய மகேந்திரன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சியாமளா (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று சின்னபிள்ளை என்பவரின் மனைவி இளஞ்சியம்(60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் குடும்ப தகராறில் அஞ்சல் துறை பெண் அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர்களுக்கு கார்த்திக்கேயன் (3) என்ற மகன் உள்ளார்.
விஜயலட்சுமி வாரியங்காவல் அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கருணாகரனுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே குடும்பதகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடைக்காரர்களிடம் இருந்த 13 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள், கப்பு களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் ஆய்வு செய்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கடைக்காரர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செந்துறை அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் பெரிய ஏரி. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்த 300 ஏக்கர் நெல் சாகுபடி முற்றிலும் பாதிப்படையும் தருவாயில் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ராயம்புரம் பெரிய ஏரியானது 364 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். தமிழக அரசு விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்ததால் போதிய அளவு விவசாயிகள் மண் எடுக்க முடியவில்லை. பாசன ஏரிகள் தூர்வாரப் படவில்லை.
364 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உடனடியாக தூர்வாரவேண்டும்.
பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல் வயல்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் அண்ணாசிலையில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நடந்த 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தேரடி, சத்திரம், மாதா கோவில், ஒற்றுமை திடல், அரண்மனை தெரு, வண்ணான் குட்டை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது.
இதையடுத்து போலீசார் அரியலூர் பஸ் நிலையம் பின்புறம் வாகன சோதனை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிய 3 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகனம் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியை ஏற்க செய்து பின்னர் புதிய ஹெல்மெட் ஒன்றை இலவசமாக வழங்கினார். இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, தா.பழூர் ரோடு, 4 ரோடு, திருச்சி ரோடு, பஸ் நிலையம் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் நன்றி கூறினார்.
அரியலூர் அண்ணாசிலையில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நடந்த 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தேரடி, சத்திரம், மாதா கோவில், ஒற்றுமை திடல், அரண்மனை தெரு, வண்ணான் குட்டை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது.
இதையடுத்து போலீசார் அரியலூர் பஸ் நிலையம் பின்புறம் வாகன சோதனை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிய 3 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகனம் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியை ஏற்க செய்து பின்னர் புதிய ஹெல்மெட் ஒன்றை இலவசமாக வழங்கினார். இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, தா.பழூர் ரோடு, 4 ரோடு, திருச்சி ரோடு, பஸ் நிலையம் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் நன்றி கூறினார்.
பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலுக்கு இணங்க ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் 4 ரோடு, கடைவீதி, விருத்தாசலம் ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்சில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. வேகத்தை குறைத்து, சாலை விதிகளை மதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் போலீசார் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலுக்கு இணங்க ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் 4 ரோடு, கடைவீதி, விருத்தாசலம் ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்சில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. வேகத்தை குறைத்து, சாலை விதிகளை மதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் போலீசார் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
போலீசாரை கண்டித்தும் மற்றும் ஓட்டுனர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் உருவாக்கிட வலியுறுத்தியும் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
சென்னையில் கால் டாக்சி டிரைவர் ராஜேஸ், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததற்கு காரணமான போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், வாகன ஓட்டுனர்களை தரக்குறைவாக பேசும் போலீசாரை கண்டித்தும் மற்றும் ஓட்டுனர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் உருவாக்கிட வலியுறுத்தியும் ஜெயங்கொண்டத்தில் உள்ள அப்துல் கலாம் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஜெயங்கொண்டம் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிவிக்கக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காங்கையன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் உத்தாண்டம். இவருடைய மகன் உதயநிதி(வயது 17). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் உதயநிதி நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயநிதியுடன் அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அங்கு சென்று பார்த்தபோது உதயநிதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். இதையடுத்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவனின் உறவினர்கள் உதயநிதி இறந்ததற்கான காரணம் தெரிவிக்கக்கோரி பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியலால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், உதயநிதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 474 மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது புதிய பாடதிட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் கடந்த வாரம் வந்த அவரது தாய் தேன்மொழி நன்றாக படிக்க வேண்டும் என உதயநிதியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயநிதி தங்கி இருந்த 6 மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களை பார்த்து சென்றதாகவும், அப்போது உதயநிதி விடுதி அறை தோழனின் தந்தையிடம் செல்போன் வாங்கி தனது தாய், தந்தையிடம் பேசியதாகவும், அதன் பின்னர் சோகத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மாணவர் உதயநிதியின் உடலை பார்ப்பதற்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று மதியம் வந்தனர். அப்போது மாணவர் உதயநிதி சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரேத பரிசோதனை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை கைவிட வைத்தனர். பின்னர் மாலையில் டாக்டர்கள் உதயநிதியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து உதயநிதியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காங்கையன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் உத்தாண்டம். இவருடைய மகன் உதயநிதி(வயது 17). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் உதயநிதி நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயநிதியுடன் அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அங்கு சென்று பார்த்தபோது உதயநிதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். இதையடுத்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவனின் உறவினர்கள் உதயநிதி இறந்ததற்கான காரணம் தெரிவிக்கக்கோரி பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியலால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், உதயநிதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 474 மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது புதிய பாடதிட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் கடந்த வாரம் வந்த அவரது தாய் தேன்மொழி நன்றாக படிக்க வேண்டும் என உதயநிதியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயநிதி தங்கி இருந்த 6 மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களை பார்த்து சென்றதாகவும், அப்போது உதயநிதி விடுதி அறை தோழனின் தந்தையிடம் செல்போன் வாங்கி தனது தாய், தந்தையிடம் பேசியதாகவும், அதன் பின்னர் சோகத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மாணவர் உதயநிதியின் உடலை பார்ப்பதற்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று மதியம் வந்தனர். அப்போது மாணவர் உதயநிதி சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரேத பரிசோதனை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை கைவிட வைத்தனர். பின்னர் மாலையில் டாக்டர்கள் உதயநிதியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து உதயநிதியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






