என் மலர்
உத்தரப் பிரதேசம்
- தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட மாநில கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.
- பிரதமர் மோடி புலந்த்சாகர் நகரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
புலந்த்சாகர்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட மாநில கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் சுமூக உறவை ஏற்படுத்தி தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது.
ஆனால் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி கடும் சலசலப்பை சந்தித்துள்ளது. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் எப்போது உடன்பாடு ஏற்படும்? என்ற கேள்விக்குறி நிலவுகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் விழாவை பிரமாண்டமாக நடத்திய கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க பா.ஜ.க. தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகருக்கு சென்றார்.
பிரதமர் மோடி புலந்த்சாகர் நகரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லட்சக்கணக்கான தொண்டர்கள் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்கமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அல்லது உத்தரபிரதேச மாநிலம் தனது வாரணாசி தொகுதியில் பிரசாரத்தை தொடங்குவார். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் நகரில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புலந்த்சாகர் நகருக்கு காரில் வந்தார். இதையடுத்து டெல்லியில் இருந்து நொய்டா வழியாக புலந்த்சாகர் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாலையின் இரு புறமும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
புலந்த்சாகர் நகருக்கு சென்றதும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். இது பிரதமர் மோடியின் பாராளுமன்ற தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் பிரசார தொடக்கம் என்பதால் லட்சக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் பங்கேற்றனர். சுமார் 5 லட்சம் தொண்டர்களை பா.ஜ.க. நிர்வாகிகள் திரட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பிரதமர் மோடி ரூ.19,100 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் பெயரில் மிகப்பெரிய மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டினார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
2019-ம் ஆண்டு தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 2 இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற அப்னா தளம் கட்சி வெற்றி பெற்றது.
மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. 6 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தடவை பிரதமர் மோடி தனது பிரசாரத்தை புலந்த்சாகர் நகரில் இருந்து தொடங்கி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வீடியோ பிரசாரத்தை பா.ஜனதா இன்று தொடங்கியது. மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பயன் அடைந்த மக்கள் குறித்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. சந்திரயான், ராமர் கோவில், நலத்திட்டங்கள் போன்றவையும் குறிப்பிட்டு பா.ஜனதா வீடியோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு உள்ளது. பிரதமர் மோடி கனவை மட்டும் விதைப்பவர் அல்ல. செயல் வீரராக திகழ்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
- அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.
கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.
அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.
அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.
ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.
வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.
ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.
அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
- முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர்.
அயோத்தி:
அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ராம பிரானை தரிசித்து வருகின்றனர்.
இதில் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர். அன்றைய தினத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்கள் ரூ.3 கோடியே 17 லட்சம் செலுத்தி உள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
- விடுமுறை தராத விரக்தியில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லக்னோ:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் அறிவித்தன.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுமுறை தராததால் வேதனை அடைந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.
- உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர்.
- பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரசாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக, பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதை விட கூடுதல் வெற்றி இனி வரும் தேர்தலில் பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.
- அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
- காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ஐந்து வயது பாலகனாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. ஆனால், முதல்நாள் சூரிய உதயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை 3 மணி முதல் கோவிலில் குவியத் தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆறு மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையிலும் எந்தவித அசாம்பாவிதம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பக்கதர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகக்ப்படுவார்கள். பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.
- ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன.
- ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும்.
இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள் உள்பட நவரத்தினங்களும் இடம் பெற்றுள்ளன. 18,567 சிறிய வட்ட வடிவ வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 3 ஆயிரம் நவரத்தின கற்கள் அந்த மாலையில் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
அதுபோல 5 அடுக்கு கொண்ட நெக்லசும் ராமரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்தது தவிர அயோத்தி ஆலய நிர்வாகம் சார்பிலும் ராமருக்கு பல்வேறு நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர் இந்த நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.
நெற்றிசுட்டி, இரண்டு கைகளிலும் அணியும் அணிகலன்கள், இடுப்பில் கட்டப்படும் அலங்கார நகைகள், கிரீடங்கள் என ராமருக்கு விதவிதமான நகைகளை தயார் செய்து உள்ளனர். 500 கிராம் எடை கொண்ட சிறிய நெக்லஸ் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ராமருக்கு அணிவிக்கப்படும் தங்க மாலைகளில் விஜய்மாலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தங்க மாலை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும்.
ராமர் கையில் வைத்திருக்கும் அம்பு-வில் ஒரு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையில் போட்டுள்ள வளையல்கள் 850 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அவை 560 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ராமருக்கு கையில் அணிவிக்கப்படும் மோதிரங்களும் பல்வேறு வகையான நவரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளன.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள விராட் கோலிக்கு அழைப்பு.
- விழாவில் கலந்து கொள்ளவில்லை, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கும் இவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளவில்லை. கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக அயோத்தியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் விராட் கோலியே போன்று இருந்தார். அவரது நடை, செயல் உண்மையான விராட் கோலி போன்றே இருந்தது.
மேலும், இந்திய அணியின் ப்ளூ ஜெர்சி அணிந்திருந்தார். இதனால் விராட் கோலிதான் வந்துள்ளார் என நினைத்த அவரது ரசிர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்தனர். பின்னர்தான் அவர் போலி விராட் கோலி எனத் தெரியவந்தது. இருந்த போதிலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
தனிப்பட்ட காரணத்திற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி, அதன்காரணமாகத்தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
- இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பிஷேகம் நேற்று நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடரந்து அருள்பாலித்து வருகிறார். பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ராமரை இன்றும் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் பகவான் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரக்ள்.
- ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்ற விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
- முதல் காலை நேரமான இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆத்தியநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டனர். மேலும், நாட்டில் உள்ள முன்னணி தொழில்அதிபர்கள், பிரபலங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். ஏற்கனவே கும்பாபிஷேக விழாவைக் காண அயோத்தியில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்து முதல் காலை நேரமான இன்று, அதிகாலையில் இருந்து கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்கதர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Heavy rush outside the Ram Temple as devotees throng the temple to offer prayers and have Darshan of Shri Ram Lalla on the first morning after the Pran Pratishtha ceremony pic.twitter.com/gQHInJ5FTz
— ANI (@ANI) January 23, 2024
ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்ய உள்ளே முண்டியடித்து நுழையத் தொடங்கினர். பாதுகாவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது போன்ற வீடியோ வெளியானது.
ஆனால், அது ராமர் கோவிலில் பக்தர்கள் கூடிய வீடியோ அல்ல. கவுகாத்தியில் உள்ள கோவிலில் பக்தர்கள் கூடிய கூட்டம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கவுகாத்தியில் உள்ள கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முண்டியத்து சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
- ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.
அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.
பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பும்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அக்ஷய் குமார் மற்றும் சூர்யா, இருவரும் அமிதாப்பை சந்தித்தனர்
- மோடி, அமிதாப் இருவரும் கரம் கூப்பி நலம் விசாரித்து கொண்டனர்
இந்தி திரையுலகின் மெகா ஸ்டாரான 81-வயதான அமிதாப் பச்சனுக்கு சில தினங்களுக்கு முன் கையில் அறுவை சிகிச்சை நடந்தது.
இத்தகவலை அவரது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
முன்னணி இந்தி நடிகரான அக்ஷய் குமார் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான சூர்யா இருவரையும் சந்தித்து உரையாடிய புகைப்படங்களை அப்போது அவர் வெளியிட்டார். அதில் அவரது வலக்கர மணிக்கட்டு பகுதியில் "பிரேஸ்" அணிந்திருந்தார்.

ஆனால், அறுவை சிகிச்சை குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடவில்லை.
இன்று உத்தர பிரதேச அயோத்தியா நகரில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கட்டப்பட்டு வந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் என பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
திரையுலக பிரபலங்களில் அமிதாப் முதலில் வந்திருந்தார்.
கும்பாபிஷேகம் முடிந்ததும் திருக்கோவிலை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடி, அங்கு வந்திருந்த பிரபலங்களுடன் சிறிது நொடிகள் செலவிட்டார்.
அப்போது மோடி, அமிதாப் பச்சனை கண்டு கரம் கூப்பி வணங்கினார். அதே போல் நடிகர் அமிதாப்பும் கைகூப்பி பிரதமரை வணங்கினார்.
அப்போது பிரதமர் அமிதாப்பிடம் அவரது கை குறித்து விசாரித்தார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
1984ல், அமிதாப் பச்சன், உத்தர பிரதேச பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்று, பாராளுமன்றத்திற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.







