கங்கை நதியில் காந்தத்தை வீசி நாணயங்களை அள்ளும் வாலிபர்

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார்.தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார்.
கங்கை நதியில் காந்தத்தை வீசி நாணயங்களை அள்ளும் வாலிபர்
Published on

கங்கை நதியில் புனித நீராடும் பொதுமக்கள் பலரும் தங்கள் பொருட்களை கங்கை நதியில் வீசி செல்கின்றனர். சிலர் நாணயங்களை வீசி சென்று விடுகின்றனர்.

இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார். பின்னர் தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார். பின்னர் அந்த நாணயங்களை சந்தையில் விற்று தங்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்வதாக அவர் கூறுகிறார்.

சில நேரங்களில் இவ்வாறு நாணயங்களை சேகரிக்கும் போது தங்கம், வெள்ளி கூட கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படியெல்லாம் கூட பணம் கிடைக்குமா என பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com