என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார்
    • இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) பங்கேற்கிறார். இதற்காக பிரயாக்ராஜ் சென்ற ஜனாதிபதி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

    இத்துடன் பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முன்னதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது.
    • சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே இன்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

    முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

    ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.

    முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
    • ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?

    மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."

    "திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

    • காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர்.
    • என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை.

    உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டை கடந்து கார் ரெயில் தண்டவாளத்திற்குள் நுழைந்தது.

    ஓட்டுநர் குடிபோதையில் காரை சாலையில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரெயில் தண்டவாளத்தில் வேகமாக செலுத்தினார். அதிவேகமாக சென்றதால், தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது.

    ரெயில் தண்டவாளத்தில் கார் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை நோக்கி விரைந்து சென்றனர். காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்ததாக தெரிகிறது.

    என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவர் தனது காரை ரெயில் தண்டவாளத்தில் கொண்டு சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் உடனடியாக காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். கேட் கீப்பர், கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை அனுப்பினார், அதன் பிறகு அதே ரெயில் பாதையை நெருங்கி டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.

    ரெயில் சுமார் 35 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து நிலைய கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீட்புப் பணியை மேற்கொண்டு, நகராட்சி ஹைட்ரான்ட்டின் உதவியுடன் காரை தண்டவாளத்திலிருந்து அகற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில், தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்பட்ட பின்னரே செல்ல முடிந்தது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
    • அங்கு சமாஜ்வாதி மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவியது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இங்கு அயோத்தி மாவட்டத்தின் மில்கிபூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி.யானார்.

    இதையடுத்து, மில்கிபூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. சமாஜ்வாதி சார்பில் அவதேஷ் பிரசாதின் மகன் அஜித் பிரசாத், ஆளும் பா.ஜ.க. சார்பில் சந்திரபானு பஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.

    இந்நிலையில், அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க.வின் சந்திரபானு பஸ்வான் 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

    மில்கிபூர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடி, அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • கும்பமேளாவிற்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடினர்.
    • இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என மாநில அரசு தெரிவித்தது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

    மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் திங்கட்கிழமை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    கும்பமேளாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.

    அதேபோல, நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

    • வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் பழைய ஜிடி சாலையில் உள்ள துளசி சௌராஹா அருகே உள்ள ஒரு முகாமில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

     

    உடனே அங்கு விரைத்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.
    • பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.

    இதுவரை கிட்டத்தட்ட 34 கோடிக்கும் அதிகமானோர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவின் புகழ் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 68 இந்து பக்தர்கள் குழு நேற்று பிரயாக்ராஜுக்கு வந்தது. பிறகு திரிவேனி சங்கமத்திற்கு வந்த அந்த குழு தங்களது மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து, சங்கமத்தில் புனித நீராடினர்.

    பாகிஸ்தானை சேர்ந்த பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் சடங்குகளை செய்து, தங்கள் முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். நீராடிய பிறகு அந்த குழுவை சேர்ந்த மகிஜா தனது அனுபவத்தை விவரித்தார். அப்போது, இது தெய்வீகத்தை விட மேலானது என குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகில் சென்றார்.
    • கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது வருகை தந்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

    இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் சென்றுள்ளார். மோடியின் 'தனி விமானம்' பாம்ராலி விமான நிலையத்தை அடைந்தது.

    அங்கே ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இரு துணை முதல்வர்களும் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டிபிஎஸ் ஹெலிபேடை மோடி வந்தடைந்தார்.

    இங்கிருந்து வாகனம் மூலம் விஐபி காட் பகுதியை அடைந்தார். அங்கிருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் படகு மூலம் ஏரியல் கோட் பகுதியை சென்றடைந்த பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

    தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடி உள்ளார்.

    பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்ததாகப் பக்தர்களுடன் மோடி உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மகா கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்பின் மோடி தற்போது இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது.
    • கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.

    லக்னோ:

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பமேளா முடிவில் 2,000 மூத்த குடிமக்கள் புனித நீராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    சமூக நலத்துறை, தேசிய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் உடன் இணைந்து முக்கிய ஆதரவை வழங்கி வருகிறது.

    கும்பமேளாவில் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் அரசு முதியோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.

    சமூக நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் தேவைப்படுபவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் உதவி சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த முன்முயற்சியின் மூலம் முதியோர், குறிப்பாக அரசால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதையும், கும்பமேளாவின் தெய்வீக உணர்வை அனுபவிப்பதையும் உறுதி செய்வதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • புனித நீராடிய பின் பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புனித நீராடினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (5-ந்தேதி) பிரயாக்ராஜ் செல்கிறார். டெல்லியில் இருந்து விமான படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் காலை 10.45 மணிக்கு பிரயாக்ராஜ் செல்கிறார்.

    பின்னர் படகு மூலம் ஏரியல் கோட் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். தலைநகர் டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார்.

    பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. புனித நீராடிய பின் பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
    • இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே 2 சரக்கு ரெயில்கள் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார்டு கம்பார்ட்மெண்டும், என்ஜினும் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது 2-வது சரக்கு ரெயில் அதன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்லைன் தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து ரெயில்வே வழக்கமான போக்குவரத்து பாதையில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    விபத்து காரணமாக, பல ரெயில்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் தாமதமாகின. இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை சீர்படுத்தி, வழக்கமான போக்குவரத்தை வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    ×