என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
    • மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.

    சென்னை:

    மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இருமொழிக்கொள்கையே போதுமானது என்று கூறி வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

    ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.

    தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.

    துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள்.
    • எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    சென்னை :

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகாததால் இன்று காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

    சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சீமான் மீதான பாலியல் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சீமான் பெரியார் குறித்து பேசிய பிறகு தான் ஈரோடு மண் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தம் என்று அந்த மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள். ஆகவே அவர் இன்னும் கூட பேசட்டும். இன்னும் இன்னும் நாங்கள் எங்கள் பணியின் வேகத்தை பலமாக்குவோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு முதலமைச்சர் சொல்லிய 200 தாண்டி அவரை ஆட்சிக்கட்டிலில் மக்கள் அமர வைப்பார்கள். இதுபோன்ற ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கடந்து வந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். இதுபோன்று பின்னால் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார். 

    • யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.
    • நான் யாரையும் குறை சொல்லவில்லை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது:-

    தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை நாய் மாதிரியும், கிளியே காக்கா மாதிரி கத்த சொன்ன என்ன செய்யும். அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்.



    நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கு ஒரு மொழி இருக்கு. அது தான் அடையாளம். ஆனால் எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் அடையாளம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள இந்த மொழிக்கு எவ்வளவு வலிமை இருந்திருக்கும் என்று பாருங்கள். பழமையான தமிழ் மொழி, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் நிற்கிறது. அவர் சொன்னாரு பாருங்க... என்ன நடந்தாலும் சரி இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னாரு பாருங்க... அந்த ஒரு வார்த்தை தமிழ்நாட்டு மக்கள் மனதை நெகிழ வைத்து உள்ளது.

    தமிழ் மொழியில் சின்ன சின்ன வார்த்தைக்கு கூட அர்த்தம் இருக்கு அடையாளம் இருக்கு எல்லாம் இருக்கு. தங்கமான மொழி. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன். இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழனின் மேடை, தமிழ்நாட்டினுடைய மேடை. நான் யாரையும் குறை சொல்லவில்லை என்றார். 

    • காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர்.
    • ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது அவருக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சீமான் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அவர் திடீரென்று சீமான் மீதான புகாரை கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றார். இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    ஆனால் அவருடைய கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான புகைப்படங்கள், 'ஆடியோ' உரையாடல்கள் போன்ற தகவலை சேகரித்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.

    அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டின் வெளிக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் கதவை தட்டினார்.

    உடனே சீமான் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாம்பரத்தை சேர்ந்த அமல்ராஜ் கதவை திறந்து விட்டார். ஆனால் போலீசாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கும், காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

    காவலாளி அமல்ராஜை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்றார். அப்போது போலீசாருடன் மல்லுக்கட்டினார். சீமான் வீட்டின் வளாகத்துக்குள் போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த களேபரத்தின் முடிவில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் சேர்ந்து காவலாளி அமல்ராஜின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர். ஆனால் காவலாளி அமல்ராஜ் போலீஸ் ஜீப்பில் ஏற மறுத்தார். இதனால் ஜீப்பில் வைத்தும் மோதல்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் காவலாளி அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துக் கொண்டார். துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பின்னர் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வழியாக கடும் போராட்டம் நடத்தி காவலாளி அமல்ராஜை கைது செய்து நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், சீமான் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மன் நோடீசை கிழித்ததாக அவரது வீட்டின் பணியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சீமான் வீட்டில் இல்லை. அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

    அவருடைய மனைவி கயல்விழி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் பதறியபடி வெளியே வந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார்.

    ஆனால் போலீசார் காவலாளியையும், பணியாளரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

    தனது வீட்டின் காவலாளியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது, சீமானின் மனைவி கயல்விழி வெளியே வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.

    சீமான் வீட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் காவலாளி தாக்கியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மற்றும் 2 போலீஸ்காரர்கள், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளியும், பணியாளரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கார்த்திகேயன் இருவரையும், வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
    • சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மடக்கி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

    இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர் வாகனத்தை மடக்க வேண்டும் என்றும், சப் - இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.
    • மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கும், தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் என் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவதில்லை. ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழக கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.

    இந்த முறை என் பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்று தமிழ்நாடு தனது உயிர்பிரச்சினையான மொழிப்போர் மற்றும் உரிமை பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூகநல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலத்தை காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம். தற்போது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக்குரல் வந்துள்ளது.

    இதை பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று கூறி அதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்காததால் இன்றும் நமக்கான பணத்தை கொடுக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்ல மறுக்கிறார்கள். நாம் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி செய்தால் அதை தமிழ்நாடும், தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

    நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். நன்றி வணக்கம்," என்று கூறியுள்ளார்.

    • நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3.10.288 மெட்ரிக் டன் அதிகமாகும்.

    விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கால தாமதமின்றி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சூழ்நிலையில், 28.02.2025 மற்றும் 01.03.2025 ஆகிய இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் தயார் நிலையில் இருந்து மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொளமுதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்கள். மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

    இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், இ.ஆ.ப. கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் காணொலி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
    • காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?

    கள்ளக்குறிச்சியில் 66 பேர் பலியாக காரணமாக இருந்த சாராய வியாபாரிகள் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கள்ளச்சாராயம் காய்க்கிறார்கள் என்றும் ஜாமினில் வந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ற செய்கிறார்கள் என கண்காணிக்காதது காவல்துறைக்கே கரும்புள்ளி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.

    ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.

    தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?

    66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?

    கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
    • மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும்.

    சென்னை கொளத்தூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பிறகு அவர் உரையாற்றியதாவது:-

    நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி உள்ளோம். ரூ.210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.

    பெரியார் மருத்துவமனையை பொது மக்கள் சுகாதாரத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக நினைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையில் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், ஊராட்கள் சட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்படும்.

    மாற்றுத்திறநாளிகள் என பெயர் கொடுத்து சுயமரியாதையை காத்தவர் நமது கலைஞர் கருணாநிதி. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரத்தில் பங்கு.

    மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும். இதுவே உண்மையான சமூக நீதி பெரியார் அரசு. வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
    • அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை.

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.

    இந்த திட்டங்கள் எல்லாமே எழும்பூர் தொகுதி மக்களிடம் முழுமையாக சென்றடைந்துவிட்டதா என்பதை அறியவும் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

    இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.

    அதோடு, திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள். 

    அதோடு, சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள்.

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.

    இந்த வகையில், திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் எழும்பூர் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு, வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

    இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதாக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்தார்.

    • நடிகை விஜயலட்சுமி வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
    • வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார்.

    சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர். இந்த சூழலில் தான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை வாபஸ் பெற்றார்.

    இவர் சீமானின் முதல் மனைவியா? எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

    தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது.

    விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் உள்ளன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

    இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதக்கக்கோரி முறையீடு செய்துள்ளார்.

    • 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
    • காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

    விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி அமல்ராஜ் தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.

    இதனை தொடர்ந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்ததன்பேரில், சீமான் வீட்டின் காவலாளி அமல்ராஜ் மீது போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் சம்மனை கிழிக்கும் முன்பு சீமானின் மனைவி கயல்விழியிடம் அனுமதி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வழக்கறிஞரான கயல்விழி சம்மனை கிழித்தால் என்ன சட்ட விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்தும் சம்மனை கிழிக்க அனுமதித்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில், அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

    ×