என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
- மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
சென்னை:
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்தினார்.
இந்தநிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் ராகுல் காந்தி. நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
- நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகம் முன் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-
நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி . நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடந்தது போனதில்லை. ஆனால் நாங்கள் 2000 முறை சிந்தித்து செயலாற்றி கொண்டு வருகிறோம். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.
ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியானஅரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்கிகிறது. 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.
சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன? சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?
- மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு.
* முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?
* மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.
* மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என முதலமைச்சர் கூறியது மோசடி.
* கலைஞர் ஆட்சியில் எந்த அடிப்படையில் வன்னியர், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
* பீகார் முதலமைச்சரால் மட்டும் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்த முடிகிறது.
* சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றார்.
- ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.
- தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருக்கும்.
ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து அண்ணாபூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை ரசித்து செல்வார்கள். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் கோடை விழா மலர்கண்காட்சி நடந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் இந்த மாதம் 4-ந் தேதிவரை மலர்க ண்காட்சி நீட்டிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் பக்ரீத் தொடர் விடுமுறை நாளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. மேலும் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்வதால் இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு பகுதிகளில் மாலை நேரத்தில் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 9 மணிவரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. இதனால் பகலில் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து சென்றனர். இதே போல் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து சென்று வருகிறார்கள்.
- குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்கும், குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழையில் நனைவதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குற்றாலம் வருகை தருவார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் அருவிகளில் குளிக்க தடை நேற்று நீட்டிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இன்றும் 3-வது நாளாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (32). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கும் பெண்கள் சரிவர கடனை கட்டாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் நிதி நிறுவனத்தில் பணம் கட்டாததால் பிரகாஷின் சம்பள பணத்தை பிடித்தம் செய்துள்ளனர். இதனால் குடும்ப செலவிற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடனை அடைப்பதற்காக ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்து விடலாம் என எண்ணி இருக்கும் பணத்தையும் மீண்டும் கடன் வாங்கியும் ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அதிலும் தோல்வி ஏற்பட்டு மேலும் கடனாளியாக ஆனார்.
இந்த நிலையில் தனது நண்பர் ஒருவருக்கு கடன் அதிகமானதால் கடன் காரர்களில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது இதனால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் விஷம் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் இருக்கும் இடத்தையும் லொகேஷன் மூலமாக அனுப்பியும் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷின் நண்பர்கள் அவர் இருக்கும் இடத்தை தேடி சென்று பார்த்தனர். அங்கு அவர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியின் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
பின்னர் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே அவர் எவ்வளவு கடன் வாங்கி உள்ளார்? ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் ?என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.
- எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
- இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது.
சென்னை :
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்றார்.
- நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
- மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதுவரையில் இயல்பைவிட 125 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (27-ந்தேதி) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 36 செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 27-28 செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
- 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.
சென்னை:
10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
* சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.
* மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது, முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.
- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
- போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது.
சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை அளவில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
- சட்டமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினர் கே.பி.அன்பழகனை பரிசோதித்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபின் அவரது அறையில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது, முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினர் கே.பி.அன்பழகனை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.
- வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வால்பாறை:
கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களாக இங்கு அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, அக்காமலை, வெள்ளமலை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, சிறுகுன்றா, சோலையார் அணை, உருளிகல், பண்ணிமேடு, வில்லோனி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
மாலையில் தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
தொடர் கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வால்பாறை தாசில்தார் வாசுதேவன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கூழாங்கல் ஆறு பகுதியில் ஆய்வு செய்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் வால்பாறையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவை குற்றாலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 19 செ.மீ மழையும், சின்கோனாவில் 14 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-198, சின்கோனா-147, சோலையாறு அணை-122, வால்பாறை-107, சிறுவாணி அடிவாரம்-60, தொண்டாமுத்தூர்-33 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இரவும் மழை நீடித்தது. மழைக்கு கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் 4-ம் மைல் பகுதியில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டு, மூங்கில்கள் சரிந்து சாலையில் விழுந்தன.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மண்குவியலை அகற்றினர்.
கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் மூங்கில்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.






