என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.
    • 180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு தொழில்களுக்காக தமிழர்கள் சென்றனர். இதில் தாயகம் திரும்பிய தமிழர்கள் நெய்மிளகாய் கொண்டு வந்தனர். இந்த மிளகாய்களை கொடைக்கானல் மலைக்கிராமங்கள், ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில சாகுபடி செய்தனர். சீதோசன நிலை நெய்மிளகாய் வளர்வதற்கு ஏற்றதாக இருந்ததால் ஆண்டு முழுவதும் மலை ஸ்தலங்களில் நெய்மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

    பம்பரம் போன்று தோற்றமளிக்கும் நெய்மிளகாய் நாட்டு மிளகாயை விட காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை இருக்கும். குழம்பில் போடும்போது நெய்போன்று வாசனை கமகமக்கும். கொடைக்கானலில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்ட போதும் மழைக்காலமே இதன் சீசனாகும். தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.

    180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் ஒருசில விவசாயிகள் மட்டுமே நெய்மிளகாய் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகவே விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் சமையலில் பயன்படுத்தினால் நெய் சேர்த்தது போல் ருசியாக இருக்கு ஒருதடவை சுவைத்து பார்த்தவர்கள் மீண்டும் அதனை தேடி வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது சீசன் தொடங்கி உள்ளநிலையில் மேலும் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.
    • முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும்.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களது வீரம் போற்று தலுக்குரியது. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களது தியாகம் பாராட்டக் கூடியது. தேசியமும், தெய்வீகமும் நிறைந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியவர்கள். அவர்களது தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இன்று இங்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடியதாக கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியுள்ளார்கள். இதற்காக உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்வாரா? முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.

    நடிகர் விஜய் இன்று அரசியல் இயக்கத்தை தொடங்குகிறார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் தொடங்கலாம். முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். அவர் தேசிய அளவில் அரசியல் செய்யப்போகிறாரா, மாநில அரசியல் செய்யப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
    • இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையின் பின்புறம் ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.

    இளைஞர்கள், தவெக மாநாட்டு பந்தலை பார்த்த உற்சாகத்தில் கீழே குதித்தாக தகவல் வெளியானது. மேலும், இவர்களில் மாநாட்டுக்காக சென்ற நிதிஷ்குமார் என்பவர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால், புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் அவர் உயிரிழக்கவில்லை, தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

    • 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மனைவி செல்வராணி (வயது 57). இவர் சம்பவத்தன்று திசையன்விளை பொம்மிநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதா லெட்சுமி தலைமையிலான போலீசார் செல்வராணியை சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான செல்வராணி மீது கஞ்சா வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் அடிக்கடி கைதாகி உள்ள செல்வராணி, தற்போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகருக்கு மாற்றிவிட்டார்.

    அங்கிருந்து அவ்வப்போது திசையன் விளைக்கு வந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது, தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

    விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    இந்நிலையில் தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

    • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், த.வெ.க மாநாட்டையொட்டி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    வழக்கமாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில், இன்று திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொள்கைரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிட விஜய்யின் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.

    பெரியார், காமராஜர் வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையை விஜய் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் என்று அவர் கூறினார்.

    • அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியாக இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 30,475 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 106.48 அடியாக உயர்ந்து உள்ளது. நீர் இருப்பு 73.49 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
    • கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியானது உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் சமீபத்தில்தான் ரூ.3 கோடியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்குள் தெருநாய் ஒன்று புகுந்தது. தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் ஏறி படுத்து ஓய்வெடுத்தது.

    இதை அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான், தற்போது நோயாளிகளின் படுக்கையில் தெருநாய் படுத்து ஓய்வெடுத்த சம்பவமும்.

    எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் இருந்து ஏராளமானோர் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அதிகாலையிலேயே புறப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கினர்.

    சென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    அவர்களது கையில் தவெக கொடி இருந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநாட்டு பணிகளை விஜய் கட்சியினர் முன்னெடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள்.
    • விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

    வெற்றிக் கொள்கை திருவிழா என்று பெயர் குறிப்பிட்டு இந்த மாநாட்டு பணிகளை விஜய் கட்சியினர் முன்னெடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள்.

    85 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு செல்வதற்கு 5 நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக அதிகாலை முதலே குவிய தொடங்கி விட்டார்கள்.

    இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு!

    மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!

    உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!

    மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!

    உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது! என்று கூறியுள்ளார். 



    • மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
    • மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயைில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×