என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.
    • டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    * சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.

    * தவறான செய்திகளை திருப்பி திருப்பி பதிவு செய்யக்கூடாது.

    * மத்திய அரசுக்கு கைகட்டி நிற்கும் வேலைக்காரனா மாநில அரசு.

    * மத்திய அரசு மாநில அரசின் சுயமரியாதைக்கு சவால் விடுத்தது.

    * ஆண்டான் அடிமை மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது.

    * டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.

    * ஏலம், குத்தகை உரிமையை மாநில அரசுக்கு அளிக்க கோரி கடிதம் எழுதினேன்.

    அமைச்சர் கடிதம் எழுதியது எங்களுக்கு எப்படி தெரியும் என இபிஎஸ் எதிர் கேள்வி எழுப்பினார்.

    * நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது எத்தனை கடிதத்தை வெளியிட்டீர்கள்.

    * கடிதங்களில் இருந்த விபரங்களை அவையில் கூறி விட்டேன் என்று அவர் கூறினார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.
    • டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.

    * பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை திமுக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    * மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    * 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
    • மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அப்துல் சமது கூறினார்.

    தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது என்று சிந்தனை செல்வன் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் சரண்யா (வயது 20) , திருமண மானவர். இவர் இன்று காலை தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் அவிநாசி-பெருமாநல்லூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    60 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் சரண்யாவின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர்.

    அதில் பின்னால் அமர்ந்திருந்த ஹெல்மெட் அணிந்திருந்த நபர் தான் வைத்திருந்த கூர்மையான அரிவாளால் சரண்யாவின் கை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரி வெட்டினார்.

    அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே ஹெல்மெட் அணிந்திருந்த நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

    காயம் அடைந்த சரண்யாவை அக்கம்ப க்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சரண்யாவின் கணவர் ரமேஷ், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். எனவே அவர்தான் சரண்யாவை வெட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
    • புயலால் கரை தட்டியதா என விசாரணை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், இன்று காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டை சேர்ந்த மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.

    இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் சுமார் 150 மூங்கல்க ளால் கட்டபட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.

    இந்த படகில் மீன் பிடிக்க பயன்படுத்த கோழி தீவனம் 2 மூட்டை சுமார் 30 கிலோ உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரணியம் கடலோர காவல் குழுவின் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரலட்சுமி, சுதாகர் மற்றும் போலீசார் படகை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.

    • தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது.
    • 40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.

    சென்னை:

    சட்டசபை கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் மணிகண்டன், "தென்பெண்ணை ஆற்று உபரி நீர் மலட்டாற்றில் திறந்து விடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-

    தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.

    மலட்டாற்றில் உடனடியாக கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6500 கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து ம், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மேல்மலையனூரில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செஞ்சி:

    கடந்த வாரம் பெய்த புயல் மழையால் செஞ்சி பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களில் வெள்ள நிவாரண பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பக்கத்து ஒன்றியமான மேல்மலையனூர் ஒன்றியத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு மேல்மலையனூர் ஒன்றியம் சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சத்திய மங்கலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சென்ற சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோவில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது.
    • தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோவில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது.

    இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

    தீர்மானத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதவ் அர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது அவரது சொந்த கட்சியினரே புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறின. மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சிக்கு நெருடலான சூழலை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்ட குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனாவை விசிக கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்வதென முடிவெடிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து விசிக சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.

    2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

    3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீநான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

    4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

    5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

    6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 63 பணிகள் நடைபெறுகிறது.
    • வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு குறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 63 பணிகள் நடைபெறுகிறது. அதில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடைபெறுகிறது.

    கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018-ல் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கற்கள் பெற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது.

    25 அடி நீளம் கொண்ட கல்லை பெறுவதற்காக ரூ.19 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

    • போதை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்
    • வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). இவர் சொந்தமாக மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்த மினி டெம்போவில் நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிக் கொண்டு அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது மினி டெம்போவில் முட்டை லோடு ஏற்றிக் கொண்டு கர்நாடகாவுக்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கு முட்டை லோடு இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பியபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்- 74 கிலோ, பான்மசாலா-77 கிலோ, கூல் லிப்-23 கிலோ உள்ளிட்ட 262 கிலோ போதை பொருட்களை மினிடெம்போவில் கடத்தி கொண்டு வந்தார்.

    மினி டெம்போ கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்தது. அப்போது நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு சாலையில் நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த மினி டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து, டிரைவர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை கடைகளில் கொடுத்து விற்பனை செய்வதற்காக கடத்தி கொண்டு வந்துள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஆகியவை நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

    ×