என் மலர்
நீங்கள் தேடியது "Narcotics arrest"
- ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் பறிமுதல்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் இளந்தரையன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) மேகா, தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதனால் போலீசார் நள்ளிரவில் அந்த வீட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் 8 கிலோ ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (வயது 29 ), அவரது மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப்பொருளை பதுக்கியது தெரியவந்தது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் பின்னரே அவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது? யாரிடம் விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.24 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
- போதை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்
- வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). இவர் சொந்தமாக மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த மினி டெம்போவில் நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிக் கொண்டு அவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது மினி டெம்போவில் முட்டை லோடு ஏற்றிக் கொண்டு கர்நாடகாவுக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கு முட்டை லோடு இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பியபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்- 74 கிலோ, பான்மசாலா-77 கிலோ, கூல் லிப்-23 கிலோ உள்ளிட்ட 262 கிலோ போதை பொருட்களை மினிடெம்போவில் கடத்தி கொண்டு வந்தார்.
மினி டெம்போ கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைந்தது. அப்போது நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு சாலையில் நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த மினி டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து, டிரைவர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை கடைகளில் கொடுத்து விற்பனை செய்வதற்காக கடத்தி கொண்டு வந்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஆகியவை நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.






