என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
    • போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.

    வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.

    போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.

    சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை

    இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.

    அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே அம்பகரத்தூர் அலா காலணியை சேர்ந்தவர் முகம்மது அலீம். இவர் துபாயில் வேலைபார்த்துவிட்டு, கடந்த மாதம் வீட்டு வந்தார். வீட்டில், தனது மனைவி ஜெசிமாவுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார். மீண்டும் கடந்த 15-ந் தேதி வீடு வந்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார்.
    • விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் இன்று அதிகாலை புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வழுதாவூர் சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது மேட்டுப்பாளையத்தில் கே.எஸ்.பி. ரமேஷ் அலுவலகம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலை யோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. மேலும் அருகில் உள்ள மின்கம்பம் மீது மோதியதில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாய மடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்தவர்களை மீட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதில் காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார். மேலும் திருமூர்த்தி என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னை வாலிபர்கள் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமானது.

    அதுபோல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த கார்சாலையோரம் நின்றிருந்த கும்பல் மீது மோதியது. இதில் 4 மீனவ பெண்கள் பலியானார்கள்.

    மது குடித்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி செல்வதால் புதுவையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
    • புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

    மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவைத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் புதுவை மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அக்கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதுபோல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூரிலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பு மிக்க நிலம் உள்ளது.

    தற்போது அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து பலர் வீடு கட்டியுள்ளனர். எனவே காவல் துறை நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து உடனே அந்த இடத்தை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை. 

    இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். 

    இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.

    • தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். குறிப்பாக, 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக நிரப்ப படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள டெஸ்டர் பதவியினை உடனே நிரப்பவேண்டும். 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழி யர்களை விட, 2011ல் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முரண்பாடுகளை நீக்கவேண்டும். யூனியன் பிரதே சங்களில் மின்துறை யை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் முடிவைக் முழுமையாக கைவி டவேண்டும். உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறு த்தப்பட்டது. மேலும், மின்துறை ஊழிய ர்களின் கோரி க்கையை போர்க்கால அடிப்ப டையில் நிரப்பா விட்டால், காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலசங்க ஙக்ளை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சங்க தலைவர் தெரிவி த்துள்ளார்.

    • கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
    • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

    அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

    அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    புதுச்சேரி:

    2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

    இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டிய குழி
    • மூடாமல் சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், வடபாதி கிராமம் அருகே, தண்ணீர் குழாயை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய குழி ஒன்று தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த குழியை மூடாமல் சென்றுவிட்டனர்.இந்நிலையில், வடபாதி கிராமத்தைச்சேர்ந்த இளங்கோ வன் (37) என்பவர், அந்த குழியின் அருகில் உள்ள மதகு ஒன்றில் தூங்கினார். தூக்கக்கலகத்தில் அந்த குழியில் விழுந்து மயங்கிவிட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் அவரை பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த குழியி லேயே அவர் இறந்துவிட்டார்.

    இளங்கோவனின் உடலை பிரதேச பரிசோதனைக்காக கொன்டு சென்றபோது, இளங்கோவனின் மனைவி மற்றும் உறவினர்கள், பிரதே பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டு இளங்கோவனின் இறப்பிற்கு நியாயம் கேட்டு கோஷம் எழுப்பினர். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றனர். விபரம் அறிந்த வட்டாச்சியர் மதன்குமார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத கிராமமக்கள், மாவட்ட விடுத்கலைச்சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் சென்று, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் தோண்டப்பட்டு, மூடாமல் சென்ற குழியில்தான் இளங்கோவன் விழுந்து பலியாகியுள்ளார். எனவே அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என மனு வழங்கி முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்தாக கலெக்டர் உறுதியளித்தார்.

    • திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார்.
    • திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மதகடிப்பட்டு:

    வில்லியனூர் அருகே பங்கூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது28). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் திருமண நாளும் குறிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமணம் திடீரென நின்று போனதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் மன விரக்தியில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    ஆனாலும் திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பாஸ்கரன் நேற்று இரவு கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம் அருகே கெண்டியான்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு சென்றார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன் பாஸ்கரன் பாய்ந்தார். இதில் தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி அதே ரெயிலில் பாஸ்கரனை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக பாஸ்கரனை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
    • பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.

    ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.

    கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

    இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    ×