என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, அண்மை யில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து செய்த விமர்சனம் காரணமாக, குஜராத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது. இதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் சாலை யில், காரைக்கால் மாவட்ட காங்கிரசார், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமையில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
போராட்டத்தில், புதுவை முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், தங்கவடி வேலு, கருணாநிதி, சுப்பை யன், அரசன், ரஞ்சித், முரளி, நிர்மலா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ராகுல் காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடி யாத பா.ஜ.க. அரசு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில், திட்ட மிட்டு பொய்வழக்குகளை ஜோடித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டி யன்பால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இதை யடுத்து, காங்கிர சார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த போராடத்தால், காரைக் கால் புதுச்சேரி-சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.
- பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் கோனேரிகுப்பம் சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது போலீஸ் வாகனத்தை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். 3 பேர் தப்பியோடி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது, நாட்டு வெடிகுண்டு, 2 கத்திகள், மிளகாய்பொடி ஆகியவை இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 4 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடப்பாக்கம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த தேவநாதன் (18), கமலேஷ் (19), அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதும் தெரியவந்தது.
மேலும் பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே உலகநாதனை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, மிளகாய் பொடி, 2 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூடப்பாக்கத்தை சேர்ந்த ராமு, தீனா, கவுதம் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
எதிராளியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் தக்க நேரத்தில் கைது செய்ததால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மகேஷ்குமார் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இணைப்பு ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.
இவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகேஷ்குமாரின் தொல்லையால் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இது தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்களை சந்தித்து மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
இந்த புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார். காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி வழங்கிய உண்மை அறிக்கையின் அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
- கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறி யானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பணிகள் நடைபெறும் அகலங்கன்னு பாலத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளரிடம் கூறிய கலெக்டர் இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
- குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள், வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து, ரவுடிகளாக வலம் வருகின்றனர்.
நாள் முழுவதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை தேடி தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
வடமாநிலங்கள் பலவற்றில் குடிசை தொழில்போல் கஞ்சா சாக்லேட்களை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து, ஒரு சாக்லேட் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை சாப்பிடுபவர்கள் 3 மணி நேரத்திற்கு போதையில் மிதக்கின்றனர். குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.
சாதாரண பெட்டிக்கடையில் மற்ற சாக்லேட்டுகளுடன் கஞ்சா சாக்லேட்டும் சர்வ சாதாரணமாக டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து புதுச்சேரி போலீசார் பெட்டி கடைகளில் கஞ்சா சாக்லேட்டுகளை சப்ளை செய்யும் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
- பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது, கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அதன்பின் புதிய பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனாளிகளை கண்டறிந்து மீண்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதேபோல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.
17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வர உள்ளது.
- காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது.
- மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.
புதுச்சேரி:
டெல்டா மாவட்ட விவசாயிகளூக்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்காரைக்கால் மாவட்ட எல்லைக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்நிலையில், காரைக்கால் வந்த தண்ணீரை, விவசாயிகள் பயன்பாட்டுக்காக உடனே திறந்துவைக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, நேற்று காலை நல்லம்பல் நூலாறு ரெகுலேட்டரில் இருந்து பாசத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமையில்தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகள் பாசனதார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ சிவா கூறியதாவது:-இந்த பாசன நீரானது காரைக்கால் மாவட்டத்தில் 5000 ஹெக்டேர் அளவிற்கு பாசன வசதி பெரும். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைத்த நிலையில், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு குறித்த நீர் கிடைக்கும். இதற்காக பாடுபட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகளை பாராட்ட கடைமைபட்டுள்ளே ன்என்றார்.
- கண்காணிப்பு கேமராவில் குழந்தையை ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.
- விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றவர்கள் இருவரும் சோனியாவின் உறவினர்கள் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு லட்சயா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ஆதித்யா என்ற 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சோனியா புதுச்சேரி கடற்கரையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவில் வியாபாரத்தை முடித்த விட்டு மிஷன் வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
அங்கு ஒரு கடையின் முன்பு பிளாட்பாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். பின்னர் அசதியில் அவர் குழந்தைகளுடன் பிளாட்பாரத்திலேயே தூங்கிவிட்டார்.
நள்ளிரவு திடீரென்று கண்விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குழந்தையை ஒரு தம்பதி கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியர் புனிதா (31), பசவராஜ் (32) என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த சில மாதத்துக்கு முன்பு புனிதா கர்ப்பமானார். இந்த நிலையில் திடீரென புனிதாவுக்கு கரு கலைந்தது.
இதனை கணவனிடம் கூறி புனிதா வருத்தப்பட்டார். மாமியார் உள்பட கணவன் வீட்டினர் ஏளனமாக பேசுவார்களே என்று பயந்துபோன புனிதா தனது கணவரிடம் வேறு எங்காவது குழந்தையை கடத்தி வந்து தனக்கு பிறந்ததாக கூறலாம் என யோசனை தெரிவித்தார்.
அதற்கு பசவராஜ் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டிற்கு செல்வதாக புனிதா தனது மாமியாரிடம் கூறிவிட்டு கணவருடன் புதுவை வந்தார்.
அவர்கள் இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து முகாமிட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு சரியான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுவை கடற்கரைக்கு வந்தபோது அங்கு சோனியா கைக்குழந்தையுடன் பொம்மை விற்பதை பார்த்து உள்ளனர்.
குழந்தை அழகாக இருந்ததால் அதனை கடத்தி செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்திற்கு புனிதாவின் சகோதரரான புவனகிரியை சேர்ந்த ராஜ்கணேஷ் (30) உதவி செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பல நாட்களாக அவர்கள் சோனியா இரவு நேரத்தில் குழந்தையுடன் எங்கு செல்கிறார் என்பதை நோட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு மிஷன் வீதி கடை முன்பு பிளாட்பாரத்தில் குழந்தையுடன் சோனியா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழந்தையை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து குழந்தை கடத்தலுக்கு உதவிய புனிதாவின் சகோதரர் ராஜ்கணேசையும் போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தையை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- வீ.விஜய் (என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி எந்திரத்தை, ஏமாற்றி கடத்திசென்ற நபரை, ஒரு வருடத்திற்கு பிறகு திருநள்ளாறு போலீசார் கைது செய்து, ஜே.சி.பி எந்திரம் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டையை சேர்ந்தவர் த.விஜய். இவரது ஜே.சி.பி எந்திரத்தை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச்சேர்ந்த வீ.விஜய் (வயது35) என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்துசென்றுள்ளார்.
ஒரு சில மாதங்கள் வாடகையை முறைப்படி வழங்கிய வீ.விஜய், அடுத்த சில மாதங்களாக வாடகையை தரவில்லை. மேலும், ஜே.சி.பி எந்திரம் எங்குள்ளது என்ற விவரத்தையும் கூற மறுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட த.விஜய், தனது ஜே.சி.பி. எந்திரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த மார்ச் 2023ல், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, வீ.விஜயை தேடிவந்தனர். இந்நிலையில், வீ.விஜய் வாடகைக்கு எடுத்த ஜே.சி.பி எந்திரத்தை, தனது நண்பர் பாருக்கிடம் விற்றது தெரிவந்தது. தொடர்ந்து, சீர்காழியில் பாருக்கை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், வீ.விஜயை போலீசார் கைது செய்து, ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தனம் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் போலகம் பகுதி யைச்சேர்ந்தவர் தனம் (வயது32). இவர் அரியலூரைச்சேர்ந்த மணிகண்டன் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிவாஸ் (8), ஸ்ரீநிதி (3) என்ற 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும், தனம் தாய் வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் கடந்த சில மாதமாக மனைவி தனம் மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.
சமபவத்தன்று வழக்கம் போல் மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தனம் சப்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் விலக்கிவிட்டனர். தொடர்ந்து, மணிகண்டன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலைமிரட்டல் விடுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
காயம் அடைந்த தனம், திரு.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி கண்டனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- பெண் ஆசையால் வாலிபர் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை க்ளிக் சென்றுள்ளார்.
- கட்டணம் செலுத்திய பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.
இதில் புதுச்சேரியை சேர்ந்த பலரும் சிக்கி தவிக்கின்றனர். சைபர் கிரைம் போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனிடையே இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். அப்போது அவரது செல்போனில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் அழகிய பெண்களிடம் பேசலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண் ஆசையால் அந்த வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்றுள்ளார். அப்போது அதில் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டணம் செலுத்தி சென்ற பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது அக்கவுண்டில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் ஒரே நாளில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் வேலை, கொரியரில் பொருட்கள் வந்துள்ளது. பான்கார்டு அப்டேட் என கூறி புதுச்சேரியை சேர்ந்த 9 பேரிடம் சுமார் ரூ 6 லட்சத்து 82 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இணைய வழியில் அதிக லாப முதலீடுகள், வேலைவாய்ப்பு அல்லது வங்கிகளில் இருந்து, கொரியர்களில் இருந்து வரும் அழைப்புகளை உறுதி செய்யாமல் ஏற்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.
- புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது நுகர்வோர்களாக உள்ளனர்.
புதுவையின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசின் மதுபான கழகங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட சில மது வகைகள் மட்டும்தான் இந்த மாநிலங்களில் கிடைக்கும். ஆனால் புதுவையில் மது வகைகள் மட்டும் 900 வகைகளும், பீரில் 35 வகைகளும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மது, ஒயின், பீர், வோட்கா ஆகியவையும் கிடைக்கிறது.
இது மதுபான பிரியர்களை கவர்ந்திழுக்கிறது. இதனால் வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுவிற்பனை சூடுபிடிக்கிறது.
அதேநேரத்தில் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.
சமீபத்தில் சுற்றுலா பயணிகளை கவர ரெஸ்டோ பார்களை புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்த பார்களும் அவ்வப்போது புதிது, புதிதாக திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மதுக்கடைகளில் கடுமையான வியாபார போட்டி நிலவுகிறது. மாநில எல்லை பகுதிகளில் உள்ள கடைகளில் மது பிரியர்களை கவர 2 பீர் வாங்கினால், ஒரு பீர் இலவசம், ஒரு குவார்ட்டருக்கு முட்டை இலவசம் என பார்களில் உணவு வகைகளுக்கு சலுகைகள் வழங்கி மது பிரியர்களை ஈர்க்கின்றனர்.
நகர பகுதிகளில் இந்த போட்டி இன்னும் கூடுதலாக உள்ளது. ஏனெனில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே மதுபார் உள்ளது. அறைகளிலும் மதுபானம் விநியோகம் செய்யப்படும். மது பிரியர்களை ஈர்க்க மதுக்கடைகள் முன்பு சலுகை விளம்பரங்களை வைக்கின்றனர். இணைய தளத்திலும் சலுகை விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
சமீபத்தில் பீர் பிரியர்களை புதுவைக்கு வரவழைக்கும் வகையில் பீர் பஸ் சென்னையிலிருந்து புதுவைக்கு விடப்படும் என அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பீர் பஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக பெண்களுக்கென மதுபார் திறக்கப்பட்டது.
இதில் பெண்களே மதுவை விநியோகம் செய்வார்கள், சலுகைகள் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஏற்கனவே நாடு முழுவதும் மது வகைகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. இதையும் மீறி புதுவையில் மதுபான கடைகளின் முன்பும், இணைய தளத்திலும் சலுகைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
இதற்கு புதுவை கலால்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுவையில் உள்ள மதுபார்கள், விடுதிகள் விற்பனை தொடர்பான சலுகைகள், பெண்களுக்கு மது இலவசம், பரிசு பொருட்கள் போன்ற சுவரொட்டிகள், பதாகைகள், இணையதளத்தில் விளம்பரங்கள் செய்வதாக தெரிகிறது.
இது கலால்விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்கள் மதுபான கடைகள், உணவகம், விடுதிகள், சமூகவலைதளங்களில் உள்ள தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.






