என் மலர்
புதுச்சேரி
- ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார்.
- கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்றதாக தெரியவந்தது.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி விருதாச்சலம் ரோமாபுரி பகுதியைச்சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினியை, (வயது19). காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன் (21) என்பவருடன், கடந்த 13.11.22 அன்று திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 30-ந் தேதி ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, ஆடிக்கு கூப்பிட வரவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு தந்தை தற்போது நிலைமை சரியில்லை, பிறகு வந்து கூப்பிடுகிறேன் என கூறினார். இந்நிலையில், பிரின்ஸ் கிளிண்டன் தாய் விக்டோரியா ஆரோக்கியராஜிற்கு போன் செய்து, ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக கூறினார். அடுத்து, ஆரோக்கியராஜ், உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்தபோது, 1-ந் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்ற தாகவும், அப்போது கிளிண்டன் அடித்ததால் ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்தது. இது குறித்து, ஆரோக்கியராஜ், திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
- பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.
- ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் செயலி மூலம் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவியில் இந்த செயலி மூலம் இருவரும் தகவல்களை அனுப்பி பரிமாறிக்கொண்டு வந்தனர்.
பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி வந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது. இதனை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த பெண்ணுக்கு அணுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது.
கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணை குழு புகாரை ஆய்வு செய்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என துணைவேந்தருக்கு அறிக்கை அளித்தது.
இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக, துணைவேந்தர், நிதி நிர்வாக அதிகாரி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ.விடம் புகார் அளித்தனர். ஆனால் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவில்லை. புகார் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் வைத்திருக்க முகாந்திரம் உள்ளதாக சி.பி.ஐ. அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த புகார் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.
- இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
- போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.
- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர்.
- சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நகர போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாரை பார்த்ததும் 4 வாலிபர்கள் ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது27), கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), சூர்யா (23), பாபநாசத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 220 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார்.
- புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.
அமைச்சர் சந்திரப் பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காரைக்கால் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கவர்னர் தமிழிசை கேட்டு கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார். சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்கள், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் ஒரு வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரைக்கால் சிக்கல்களை குறித்த விவாதங்கள் எப்பொழுதும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.
மக்களின் குறைகளை அறிந்து கொள்ள மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார்.
மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
- தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக்கொள்கையில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி புதுவையில் கடந்த 27-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அரசின் கல்வித்துறை உத்தரவில் தனியார் பள்ளிகளும் புத்தகப் பையில்லா தினத்தை கடைபிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளியில் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர். சில தனியார் பள்ளிகளில் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டது.
- பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 வழங்க முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
பெண் குழந்தைகள் வைப்புத்தொகை திட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் முதலமைச்சரின் விபத்து காப்பீடு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
புதுவை சமூக நலத்துறையின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் முதலமைச்சரின் விபத்து காப்பீட்டு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய திட்டம் என 4 திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 4 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடக்கிறது.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.
- அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர்.
திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தாக்கியதை கண்டித்து அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்த அமைச்சர் சந்திரபிரியங்கா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது யாரோ அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரிபிரியங்கா சிறிது நேரம் செய்வது அறியாமல் திகைத்து போனார்.
- வசந்தகுமார் என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார்.
- அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் வினோத் (வயது43). இவரிடம், மேலகாசாகு டியைச்சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார். வசந்தகுமார், காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி கேண்டீனுக்கு சிலிண்டர் போடுவதில், ரூ.2 லட்சம் வினோத்துக்கு கொடுக்க வேண்டியு ள்ளதாக கூறப்படு கிறது. பலமுறை கேட்டும் வசந்த குமார் பணம் தராததால், தனது கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் என்பவர் மூலம், வசந்தகுமாரின் மோட்டர் சைக்கிளை வினோத் எடுத்து சென்றார்.
இதனால், ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், அவரது அண்ணன் வசந்தராஜா (38), அண்ணி இலக்கியா (30) ஆகிய 3 பேரும், வினோத் வீட்டுக்கு சென்று, வினோத்தை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த வினோத், நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு ஆஸ்பத்திரியில் வினோத் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், இலக்கியா என்பவர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை, வினோத் என்பவர் எங்களை கேட்காமல் எடுத்து சென்றதால், நான், எனது கணவர் வசந்தராஜா, அவரது தம்பி வசந்தகுமார் ஆகியோர் வினோத் வீட்டுக்கு சென்று கேட்ட போது, வினோத் வசந்த ராஜாவை தாக்கினார். தடுக்கசென்ற வசந்தகுமாரையும் தாக்கினார். என்னை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துவிட்டார். மேலும், கொலைமிரட்டலும் விடுத்துள்ளதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் இலக்கிய புகார்மீது வழக்கு பதிவு செய்து வினோத்தை விசாரித்து வருகின்றனர்.
- புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது.
- அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் அரசு நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வழக்கம்போல் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மாணவிகளை பார்த்து ஆபாச செய்கை செய்தார். மேலும் திடீரென மாணவிகள் முன் சென்று தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓட தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் அடியனூத்து பகுதியை சேர்ந்த ரகுமான் (வயது 23) என்பதும், இவர் புதுவை ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரகுமானை போலீசார் கைது செய்தனர்.






