search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை- கவர்னர் தமிழிசை
    X

    புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை- கவர்னர் தமிழிசை

    • காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார்.
    • புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.

    அமைச்சர் சந்திரப் பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், காரைக்கால் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கவர்னர் தமிழிசை கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார். சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

    பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்கள், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

    காரைக்கால் பகுதியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் ஒரு வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால் சிக்கல்களை குறித்த விவாதங்கள் எப்பொழுதும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.

    மக்களின் குறைகளை அறிந்து கொள்ள மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார்.

    மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×