என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர்.
- சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நகர போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாரை பார்த்ததும் 4 வாலிபர்கள் ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது27), கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), சூர்யா (23), பாபநாசத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 220 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






