search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திரு.பட்டினத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: தந்தை போலீசில் புகார்
    X

    காரைக்கால் திரு.பட்டினத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: தந்தை போலீசில் புகார்

    • ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார்.
    • கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்றதாக தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி விருதாச்சலம் ரோமாபுரி பகுதியைச்சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினியை, (வயது19). காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன் (21) என்பவருடன், கடந்த 13.11.22 அன்று திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 30-ந் தேதி ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, ஆடிக்கு கூப்பிட வரவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு தந்தை தற்போது நிலைமை சரியில்லை, பிறகு வந்து கூப்பிடுகிறேன் என கூறினார். இந்நிலையில், பிரின்ஸ் கிளிண்டன் தாய் விக்டோரியா ஆரோக்கியராஜிற்கு போன் செய்து, ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக கூறினார். அடுத்து, ஆரோக்கியராஜ், உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்தபோது, 1-ந் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்ற தாகவும், அப்போது கிளிண்டன் அடித்ததால் ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்தது. இது குறித்து, ஆரோக்கியராஜ், திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×