என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்கள்"

    • தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். குறிப்பாக, 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக நிரப்ப படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள டெஸ்டர் பதவியினை உடனே நிரப்பவேண்டும். 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழி யர்களை விட, 2011ல் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முரண்பாடுகளை நீக்கவேண்டும். யூனியன் பிரதே சங்களில் மின்துறை யை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் முடிவைக் முழுமையாக கைவி டவேண்டும். உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறு த்தப்பட்டது. மேலும், மின்துறை ஊழிய ர்களின் கோரி க்கையை போர்க்கால அடிப்ப டையில் நிரப்பா விட்டால், காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலசங்க ஙக்ளை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சங்க தலைவர் தெரிவி த்துள்ளார்.

    மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மின்துறையை தனியார்மயமாக்க புதுவை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.

    கடந்த திங்கட்கிழமை முதல் போராட்ட குழுவினர் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணித்து உள்ளனர்.

    விதிப்படி மட்டும் வேலை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எச்.டி. மீட்டர் ரீடிங் பணியை நிறுத்தியுள்ளனர். புதிய மின் இணைப்பும் வழங்கவில்லை.

    நேற்று கவர்னர் தமிழிசை, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மேலும் அவர் கூறும்போது, மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் அரசு என்ன முடிவு எடுத்தாலும் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்குமான நல்ல முடிவாகத்தான் இருக்கும்.

    நல்லது நடப்பதற்காகத்தான் எந்த முடிவும் எடுக்கப்படுகிறது. எந்த விதத்திலும், யாரும் பாதிக்காத அளவுக்குத்தான் அரசின் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    டெல்லியில் மின்துறையை தனியார் மயமாக்கினர். அங்கு 60 சதவீதம் மின்துறை நஷ்டத்தில் இயங்கியதால் தனியார் மயமாக்கப்பட்டது.

    ஆனால் புதுவையில் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. எந்தவித நஷ்டமும் கிடையாது. அரசு துறைகளில்தான் மின்துறைக்கு வரவேண்டிய கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது.

    அப்படியிருக்க மின்துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? நாங்கள் அரசு ஊழியர்களாகவே பணியில் சேர்ந்தோம்.

    அரசு ஊழியர்களாகவே ஓய்வுபெற விரும்புகிறோம். மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த வாரம் முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×