என் மலர்tooltip icon

    கேரளா

    • அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொச்சி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் அவருக்கு வயநாடு தொகுதியில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது.

    இந்த தடவையும் அவர் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிராணி ஏராளமான நலத்திட்டங்களை செய்து வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார். இதனால் அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.

    எனவே 2-வது தடவையாக வயநாடு தொகுதியில் களம் இறங்க அவர் நினைத்திருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வயநாடு தொகுதி யில் டி.ராஜாவின் மனைவி அனிராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வயநாடு தொகுதியில் அனிராஜா தீவிர பிரசாரம் செய்யும் பட்சத்தில் அங்கும் ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று ராகுல் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தடவையும் ராகுல் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இன்னொரு தொகுதி எது என்று ஆலோசித்து வரு கிறார்கள். வயநாடுக்கு பதில் கர்நாடகா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி யில் ராகுலை போட்டியிட வைக்கலாமா? என்றும் ஆலோசனை நடக்கிறது.

    இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது உத்தரபிரதே சத்தில் சரிவு ஏற்பட்ட நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் போட்டியிட்டார். அதே போன்று ராகுலும் கர்நாடகாவுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே வயநாடு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. எனவே வயநாடு தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்து விட்டு ராகுலை சாதகமான தொகுதிக்கு இட மாற்றம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    • கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி.
    • மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

    கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்க உள்ளது.

    அதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நேற்று வெளியிட்டது. அதன்படி ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா போட்டி யிடுகிறார்.

    இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பன்னியன் ரவீந்திரன் திருவனந்தபுரம் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சுனில் குமார் திருச்சூரிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரையிலும் போட்டியிடுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா கூறியிருப்பதாவது:-

    வயநாடு தொகுதியில் போட்டியிட கொடுத்திருப்பது ஒரு பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்துள்ளது. இந்த முறை மக்கள் ஆதரவை நாங்கள் வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். நான் எப்போதும் ஆதரவுடன் இருப்பேன். நான் அரசியல் வாழ்வில் குழந்தை படிகளை கற்றுக்கொண்ட இடம் வயநாடு.

    எங்களது கட்சி இவ்வளவு காலமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் கேரளாவில் 4 தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறையும் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரளாவை பொறுத்தவரை, இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அதில் புதிதாக எதுவும் இல்லை. அந்த நிலைமை அப்படியே உள்ளது. எதுவும் மாறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன், அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
    • திருவனந்தபுரம் வி.எஸ்.எல்.சி.யில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கேரளா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவர் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    பிரதமரின் அடுத்தடுத்த சுற்றுப்பயணம் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக நாளை(27-ந்தேதி) கேரளா வருகிறார்.

    கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன், அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த பாதயாத்திரையின் நிறைவு நாள் கூட்டம் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்துக்கு நாளை வருகிறார். அவருக்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்பு பாதயாத்திரை நிறைவு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி முரளிதரன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கும்மனம் ராஜசேகரன், பி.கே.கிருஷ்ணதாஸ், மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தேசிய-மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக திருவனந்தபுரம் வி.எஸ்.எல்.சி.யில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதில் ககன்யான் திட்டத்துக்காக புதுப்பிக்கப்பட்ட டிரை சோனிக் காற்றாலை சுரங்கப்பாதையை அவர் திறந்து வைக்கிறார்.

    இந்த காற்றாலை சுரங்கப்பாதை 2022-ல் நிறுவப்பட்டது. ககன்யான் ஆய்வுடன் பறந்த ஜி.எஸ்.எல்.சி. சோதனைக்காக மேலும் பலப்படுத்தப்பட்டது. அதனை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    • காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
    • கோவிலுக்குச் செல்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒவொருவரது தனிப்பட்ட விருப்பங்கள் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அதேநாளில் கோவிலில் தியானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.

    கோவிலுக்குச் செல்வது, பிரார்த்தனை செய்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள். நாங்கள் யாரும் அதை எதிர்க்கவில்லை.

    ஆனால் அவர்கள் பார்வையிடத் தேர்ந்தெடுத்த தேதி மற்றும் நேரம் மற்றும் இதன்மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிக்கும் செய்தியில் தான் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டார்.

    • ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூந்துறை நேமம் கரக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஷமீரா பீவி(வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந்தேதி அவரது கணவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதில் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷமீரா பீவியை அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு வீட்டில் பிரசவம் பார்க்க அவரது கணவரான நயாஸ்(47) மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தது ஷிஹாபுதீன் என்ற அக்குபஞ்சர் மருத்துவர் என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    • கோவில் திருவிழாற்கு சென்றபோது மர்ம நபர்கள் கோடரியால் தாக்குதல்.
    • பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொயிலாண்டியில் செரியபுரம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோழிக்கோடு நகர மத்திய உள்ளூர் குழு செயலாளர் பிவி சத்யநாதன் (வயது 62) கலந்து கொண்டார்.

    நேற்றிரவு மர்ம கும்பல் கோடரியால் அவரை கொடூரமாக வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் சத்யநாதன். உடனடியாக மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் நான்கு இடங்களில் கோடரியால் வெட்டப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும், ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    சத்யநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொயிலாண்டியில், அக்கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

    • மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்தனர்.

    கூட்டத்தை நிர்வகிப்பதில் சரியான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாதாந்திர பூஜை காலத்திலும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் பண நோட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதில் ரூ.357.47 கோடி பண நோட்டுகள் கிடைத்தன. இந்தநிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் நாணயங்களை எண்ணும் பணி தற்போது நடைபெற்றது.

    சபரிமலையில் உள்ள உண்டியல்களில் இருந்த நாணயங்கள் அனைத்தும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, மாளிகைபுரம் கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த பணி நேற்று முடிவடைந்தது.

    அதில் ரூ.11.65 கோடி நாணயங்கள் இருந்தன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன. அவற்றை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் பழுதானதால், அதன்பிறகு தேவசம்போர்டு ஊழியர்களால் நேரடியாக எண்ணும் முறை பின்பற்றப்படுகிறது.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயண செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். நாணயங்கள் எண்ணும் பணியில் தேவசம் போர்டு ஊழியர்கள் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்களுக்கான உணவு செலவு, போக்குவரத்து செலவு, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்த்து நாணயங்கள் எண்ணுவதற்கான செலவே ரூ.1 கோடிக்கு மேல் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் நாணயங்கள் எண்ணுவதற்கான எந்திரங்களை பழுது நீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    • பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை.
    • தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகிவரும் வகையில், அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்கில பாடத்துக்கான தேர்வுத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே மாணவ-மாணவிகளின் வாட்ஸ்-அப்பில் பரவியதாக தெரிகிறது. பொதுவாக தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஒருவாரத்துக்கு முன்பாகவே பள்ளி அலுவலகத்தின் லாக்கர்களில் வைக்கப்படும்.

    அவை தேர்வு நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அங்கிருந்து எடுக்கப்படும். அப்படி பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை. தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.

    இதனால் அது தொடர்பாக விசாரணை எதுவும் நடக்கவில்லை என தெரிகிறது.

    • ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சராசரி வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    • குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மாவட்டத்தில் வெப்பநிலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து 37.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. இதேபோல் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூரில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி வரையிலும், ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களில் 36 டிகிரி வரையிலும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களில் சராசரி வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆகவே சூரிய ஒளி மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இன்று அமலானது.

    இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.

    அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ×