என் மலர்
குஜராத்
- விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
- மருத்துவர்கள் விடுதியில் புகுந்ததால் பலத்த சேதம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததுடன், பி.ஜே. மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியுள்ளது. கட்டிடத்திற்குள் நுழைந்த விமானத்தின் வால் பகுதி மட்டுமே வெளியே தெரியும்படி காணப்பட்டது.

மதியம் நேரம் என்பதால் தங்கும் விடுதிக்கு மதிய உணவு அருந்த பயிற்சி டாக்டர்கள் வந்துள்ளனர். இதனால் பலர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களை தவிர குடியிருப்பு மற்றும் ஹாஸ்டலில் உள்ளவர்களும் உயிரிழந்துள்ளதாக வந்துள்ள செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
- கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
- மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்று பல்வேறு இடங்களில் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளது.
இதில், இந்தியாவை உலுக்கிய 10 பெரிய விமான விபத்துகள் குறித்து பார்ப்போம்.
கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விமானம் விழுந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்தது.
மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 17, 2000, பாட்னா விமான விபத்து: அலையன்ஸ் ஏர் விமானம் 7412-ல் போயிங் 737 விமானம் பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் ஆகும்.
நவம்பர் 12, 1996, சார்கி தாத்ரி நடுவானில் மோதியது: சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே மோதி விபத்துக்குள்ளானது. இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர். விமானியின் தவறு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தவறான தொடர்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது.
ஏப்ரல் 26, 1993, அவுரங்காபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு டிரக் மற்றும் மின் கம்பிகளில் மோதி 55 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 16, 1991, இம்பால் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 இம்பால் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 14, 1990, பெங்களூரு விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், 92 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 19, 1988, அகமதாபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 133 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 21, 1982, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 1, 1978, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.
- குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் விடுதியில் புகுந்தது.
- விமானத்தின் பின் பகுதி மட்டும் கட்டிடத்திற்கு வெளியில் தெரியும்படி காணப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.

இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் பயங்கரமாக மோதியதில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கட்டிடங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதியம் நேரம் என்பதால் தங்கும் விடுதிக்கு மதிய உணவு அருந்த பயிற்சி டாக்டர்கள் வந்துள்ளனர். இதனால் பலர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.




பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி சேதம் அடைந்துள்ள பதைபதைக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
- விமானம் விழுந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது.
- மதிய உணவு இடைவேளை என்பதால் பலர் விடுதியில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.
இவர்களில் 110 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என அஞ்சப்படுகிறது.
- ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விமானிகள் மற்றும் பணிப்பெண்களுடன் 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
- 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் ரூபானியின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என கூறப்படுகிறது.
அவரின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி, பயணிகள் பட்டியலில் 12வது நபராக அவரது பெயர் உள்ளது.
- விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
- 2 விமானிகள் உள்ளபட 12 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.
பயணம் செய்தவர்களில் இந்தியவர்கள் 181 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதில் 100 பேர் பெண்கள் ஆவார்கள். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 14 பேர் அடங்குவார்கள். இதுவரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் (Gatwick) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 2 பைலட்கள் உள்பட 12 ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
அகமதாபாத்- லண்டன் காட்விக் விமானம் AI171 விபத்துக்குள்ளானது என்று விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பு MAYDAY CALL சென்றுள்ளது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் கொடுத்துள்ளதாகவும், விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார். க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார். சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.
- பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் அனுப்பி உள்ளார்.
- விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 3 நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு லண்டன் விமானத்தை இயக்கிய விமானி தகவல் அனுப்பி உள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 3 நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்தது.
லண்டன் வரை செல்லும் விமானம் என்பதால் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க முயன்று விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்தது.
விமான விபத்து நடந்த இடத்திற்கு 90 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்தது.
- விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
- 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
விபத்து தொடர்பாக நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விமானத்தில் இருந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
- இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






