என் மலர்
குஜராத்
- முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது.
- 2வது போட்டி ராஜ்கோட்டிலும், 3வது போட்டி இந்தூரிலும் நடக்கிறது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் , நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால்.
நியூசிலாந்து அணி:
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
- சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார்.
- சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.
அகமதாபாத்:
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27,975 ரன்களை எடுத்துள்ளார். இன்னமும் 25 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் 28,000 ரன்களைக் கடந்துள்ளனர்.
சச்சின் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34,357 ரன்களை எடுத்தார். 1989 முதல் 2013 வரை இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சராசரி, 48.52ஆக இருக்கிறது. 100 சதம், 164 அரை சதங்களை சச்சின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வதோதராவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
- சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நடந்து வருகிறது.
- வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் இந்தத் திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் சுயமரியாதை திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு சோம்நாத் கோவிலுக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
இரவு 8 மணியளவில் கோவிலில் நடைபெற்ற தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் சோமநாதர் கோவிலில் நடைபெறும் டிரோன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.

நாளை நடைபெற உள்ள சவுரிய யாத்திரை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் யாத்திரையில் 108 குதிரைகளின் அடையாள ஊர்வலம் இடம்பெறுகிறது. அதன்பின், சோமநாதர் நகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சோமநாதர் சுயமரியாதை விழா நமது ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது நாடு முழுவதும் முழுமையான பக்தி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சோம்நாத் சுய மரியாதை திருவிழா, தனது கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பாரதத் தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவு கூரும் தருணமாகும். காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தபோதும், நெறிமுறைகளுக்கான அவா்களின் உறுதிப்பாட்டை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. இந்திய நாகரிக மீட்சியின் கொண்டாட்டம் இது.
கடந்த 1951-ல் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2001-ல் கோவிலின் 50-ம் ஆண்டு விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் பங்கேற்றுச் சிறப்பித்தனா். நடப்பாண்டில் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
- முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதம்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13-ந் தேதிகளில் இந்தியா விற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும். 12-ந்தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
ராஜ்கோட்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவரில் 332 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின.
இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார். நடப்பு தொடரில் படிக்கல் அடித்த 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் 5-வது வெற்றியை ருசித்த கர்நாடகா அணி ஏ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
- ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
- ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கிராம மக்கள் வாழும் நிலத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாத்தின்போது, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம், ஒவ்வொரு முறையும் தன்னுடைய கட்சி தேர்தலில் ஏன் தோல்வியடைகிறது என என்னிடம் விசித்திரமான கேள்வியை கேட்டார். மக்களிடம் கேட்பதற்குப் பதில் என்னிடம் கேட்டார். ராகுல் பாபா, நான் இங்கு தொடங்கியுள்ள இந்த இரண்டு முயற்சிகளை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.
தோல்விக்காக ராகுல் காந்தி காந்தி சோர்வு அடையக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் தோல்வியடைய இருக்கிறது.
எங்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள காரணம், மக்கள் எங்களுடைய கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ராமர் கோவில், பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக பிரசாரம் ஆகியவற்றை எதிர்த்தது.
மக்கள் விரும்புவதை, நீங்கள் எதிர்த்தால், நீங்கள் எப்படி வாக்குகளை பெறுவீர்கள்? என்பதை எனக்கு சொல்லுங்கள்.
ஆனால், இத்தகைய ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
- ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள்.
- உங்களை போன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
குஜராத் மாநிலம் ஜூனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:-
இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் கொடியை உச்சத்தில் பறக்கவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வெற்றிக்காக மட்டும் விளையாடவில்லை. நீங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள், மூவர்ணக் கொடியின் பெருமைக்காகவும் மரியாதைக்காகவும் விளையாடுகிறீர்கள்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள், அவர்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகளை வழங்குங்கள். ஏனென்றால் விளையாட்டு கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கும், மனதிற்கும் ஒரு அத்தியாவசியமான தேவையுமானது.
இன்று விளையாட்டுகளில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை வரம்பற்றவை. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகூட இளம் வயதிலேயே உச்சத்தை அடைய முடியும்.
வரும் ஆண்டுகளில் இந்தியா பல முக்கிய விளையாட்டுகளை நடத்த இருக்கிறது. 2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. உங்களை போன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும் 2036-ல் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இன்று 10 அல்லது 12 வயது இளைஞர்கள்தான் 2036 ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள். அவர்களை நாம் இப்போதே கண்டறிந்து, வளர்த்து, தேசிய அரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
- ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
- சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.
- விமான விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும். இந்த விபத்தில் 241 உயிர்கள் பரிபோனது.
2025ம் ஆண்டு ஜூன் 12 அன்று மதியம் 1:39 மணியளவில், ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்துக்குள்ளானது.

குஜராத்தின் அகமதாபாத் (சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்) முதல் லண்டன் (கேட்விக் விமான நிலையம்) வரை விமானம் புறப்பட்டது.
விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. சரியாக 32 விநாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. விமானம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
விமானத்தில் இருந்தவர்கள் மொத்தம் 242 பேர் (230 பயணிகள் + 12 ஊழியர்கள்). இதில் 241 பேர் உயிரிழந்தனர். அதிசயத்தக்க வகையில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.

தரையில் இருந்தவர்கள்: விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அதன்படி, இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.
விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால், விமானிகளால் விமானத்தை மீண்டும் ஓடுதளத்திற்குத் திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க போதிய நேரம் கிடைக்கவில்லை.
இந்த விபத்து நவீன ரகமான 'டிரீம்லைனர்' விமானங்களின் பாதுகாப்பு குறித்து உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
அகமதாபாத் நகரமே இந்த விபத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கின.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
- திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங் - 12 பந்து
ஹர்திக் பாண்ட்யா - 16 பந்து
அபிஷேக் சர்மா - 17 பந்து






