என் மலர்
குஜராத்
- புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அகமதாபாத்:
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.
நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.
- தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார்.
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் பாவ்நகரைச் சேர்ந்த சாஜன் பரையா (25) மற்றும் சோனி ரத்தோட் (23) ஆகியோர் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.
- பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழா சூரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நாடு ஏற்கனவே இந்த முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை (MMC) நிராகரித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியை பாதுகாப்பது தற்போது மிகவும் கடினமானது என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
50-60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர் தோல்வியால் இப்படித்தான் முடிவடைகிறார்கள் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது என்பதை உணர்த்தும் தெளிவான விசயம்.
என்.டி.ஏ. வெற்றி பெண்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் கிடைக்கப்பெற்றது. ஜாமினில் வெளியே வந்தவர்கள், ஜாதிவாத விசத்தை பரப்ப தங்களுடைய அனைத்து எனர்ஜிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் இதுமட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தனர். பீகார் தேர்தல் சாதிவாத விசத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான அறிகுறியாகும்.
தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியை நிராகரித்துள்ளனர்.
பீகார் தேர்தலின்போது, ஜாமினில் வந்த அரசியல்வாதிகளும், அவர்களுடைய கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று மசோதாவை பொது வெளியில் கிழித்தனர். பீகார் மக்கள் இந்த வகுப்புவாத விசத்தை முற்றிலுமாக நிராகத்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
- மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.
தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.
திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.
தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
- மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.
- இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
- துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.
இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு.
- பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கடந்த மாதம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆசாராமின் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை, குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் நீதிபதி ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், ஆசாராமின் வழக்கறிஞர் தேவ்தத் காமத், மேலும் 6 மாதங்கள் ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் மருத்துவ சான்றிதழைகளையும் சமர்ப்பித்தார்.
அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு குஜராத் உயரநீதிமன்றம் அவருக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
- கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்ததால் கொலை செய்ய திட்டம்.
- 3 பேர் உதவியுடன் கொலை செய்து சமையலறையில் உடல் புதைப்பு.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் பகுதியில் கட்டுமான தொழில் (கொத்தனார்) வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் ரூபி என்ற பெண்ணிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ரூபிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வகேலா என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அன்சாரிக்கு தெரியவந்து, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இனிமேல் கணவன் உயிரோடு இருந்தால், வதேலாவுடனான கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த ரூபி, கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இது தொடர்பாக கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். கள்ளக்காதலன் வகேலா, அவரது உறவினர்கள் ரஹீம் மற்றும் மோசின் ஆகிய மேலும் இரண்டு பேரை இவர்களது திட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.
அன்சாரி வீட்டிற்குள் சென்ற 3 பேரும், ரூபி உதவியுடன் அன்சாரியின் கழுத்தை அறுத்து தீர்த்துக்கட்டினர். பின்னர் உடலை சமையலறையில் குழி தோண்டு புதைத்துள்ளனர். அத்துடன், டைல்ஸ் ஒட்டி குழி தோண்டிய அடையாளம் இல்லாத வகையில் மறைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வருடம் ஆகிறது. ரூபி அந்த வீட்டில் பல மாதங்கள் தங்கியுள்ளார். பின்னர், வேறு வீட்டிற்கு மாறியுள்ளார். வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சந்தேகம் வந்துள்ளார். இந்த வீட்டில் வசித்து வந்த அன்சாரி என்பவரை பல மாதங்களாக பார்க்கவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தும்போது, வதேலா வசமாக சிக்கிக் கொண்டார். வதேலாவின் வாக்குமூலம் அடிப்படையில் ரூபி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய விவரம் தெரியவந்தது. வீட்டை உடைத்து சமையலறையில் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை எடுத்துள்ளனர். அதை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் அவர்களை நெருங்குவதை அறிந்து கொண்ட ரூபி, ரஹிம், மோசின் தலைமறைவாகியுள்ளனர்.
- கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர்.
அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.
விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்ததால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை.
சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜீராவால மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.
கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இது குறித்து தொழிலதிபர்கள் கூறுகையில்:-
ஏழைகளுக்கு உதவி செய்ய தங்களது தாய் தூண்டியதாகவும் விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானது என தெரிவித்தனர்.
- அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.
- சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பீகாரில் இருந்து பல வருடங்களுக்கு முன் குஜராத்திற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் குடியேறியது.
கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றிய தந்தை, கோவிட் காலத்தில் இறந்தார். அதன் பிறகு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து தனது தாயையும் பதினைந்து வயது தம்பியையும் மூத்த மகன் கவனித்துக் கொண்டார். மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
தனது அண்ணன் தன்னை அடிக்கடி அடிப்பதால் அவர் பதினைந்து வயது தம்பி வெறுப்புடன் இருந்து வந்தான். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று வீட்டில் வைத்து அண்ணனை இரும்புக் கம்பியால் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொன்றான்.
பின்னர் 6 மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அவரையும் சிறுவன் கொடூரமாக படுகொலை செய்தான். அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.
அண்ணனும் அண்ணியும் பீகாருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லி, அக்கம்பக்கத்தவரை தாயும் மகனும் நம்ப வைத்துள்ளனர்.
தீபாவளி நேரத்தில் பீகாரில் உள்ள உறவினர்கள் அண்ணன்-அண்ணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது பதில் இல்லை. சிறுவனைத் தொடர்புகொண்டபோது அவன் சரியாகப் பேசவில்லை.
பின்னர் தாயைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். விபத்து குறித்த புகைப்படங்களை உறவினர்கள் அனுப்ப சொன்னபோது தாயும் மகனும் மறுத்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜுனாகடில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சுற்றியுள்ள பகுதிகளில் எந்த விபத்தும் இல்லை என்றும், கணவன்-மனைவி யாரும் இறக்கவில்லை என்றும் போலீசார் கூறினர்.
இதனால் அவர்களை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரை ஏற்று, தாயையும் மகனையும் காவல்துறையினர் கண்காணித்த போது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலை வழக்குப் பதிவு செய்து, தாயையும் மகனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
- தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.
குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா கிராமத்தைச் சேர்ந்த சவ்ஜி படேல், டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.
சவ்ஜி படேலின் தந்தைக்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற சவ்ஜி படேல், தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
இறப்பதற்கு முன்பு தனது பேரன் தனது சொத்திற்கு வாரிசாக இருப்பார் என்று ஒரு உயில் எழுதியிருந்தார்.
சவ்ஜி படேலின் மகனும் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். இந்த சூழலில், சவ்ஜி படேலின் பேரன் சமீபத்தில் உனா கிராமத்திற்குச் சென்றார்.
தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆன்லைனில் சரிபார்த்தபோது, அவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என தெரியவரவே உற்சாகத்தில் மூழ்கினார்.
ஆனால் இதை அறிந்த இளைஞனின் தந்தையும் தனது தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
தனது தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதிக் கொடுத்ததால், இந்தப் பங்குகளும் தன்னுடையவை என்று பேரன் வாதிட்டார்.
பங்குகளின் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.






