என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தொடக்க ஆட்டக்காரர்களில் அதிக சிக்சர்: கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
    X

    தொடக்க ஆட்டக்காரர்களில் அதிக சிக்சர்: கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

    • இந்தியா 49 ஓவரில் 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
    • ரோகித் சர்மா 2 சிக்சர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.

    வதோதரா:

    இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் பறக்கவிட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா மொத்தம் 329 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் .

    தொடக்க ஆட்டக்காரராக கிறிஸ் கெயில் 328 சிக்சர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

    Next Story
    ×