என் மலர்tooltip icon

    டெல்லி

    • எதிர்க்கட்சிகளில் ஏராளமான இளம் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் திறமையானவர்கள்.
    • ஆனால், குடும்ப பாதுகாப்பின்மை இல்லாததால், பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஆன்லைன் கேமிங் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களிடையே பிரதமர் மோடி பேசும்போது "எதிர்க்கட்சிகளில் ஏராளமான இளம் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால், குடும்ப பாதுகாப்பின்மையால், பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபோன்ற இளம் தலைவர்கள் இருப்பது ராகுல் காந்திக்கு பாதுகாப்பற்ற உணர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும்" எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முடிவடைந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் சிறந்த தொடரில் ஒன்று. ஏனென்றால் ஆன்லைன் கேமிங் உள்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வழி செய்யும் மசோதா.
    • மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு (Online Gaming Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த அல்லது முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்யும். அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படாது. பணம் வைத்து கேமிங்கை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.

    அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பீகார் மாநில SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபட்ட நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும்.

    • பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
    • மேல்சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    • நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும்.
    • 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்.

    குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் 4 தொகுப்பு வேட்புமனு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்த பிறகு அதற்கான பதிவேட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். அதன்பிறகு அதற்கான ஒப்புகை சீட்டை பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் பணியை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி நேற்று டெல்லி சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் கார்கே எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அங்கு அவர் தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் வழங்கினார். அப்போது இந்தியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.

    சுதர்சன் ரெட்டியின் மனுவை இந்தியா கூட்டணி எம்.பி.களில் 20 பேர் முன்மொழிந்திருந்தனர். 20 எம்.பி.க்கள் வழி மொழிந்திருந்தனர்.

    குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவுபெறுகிறது. நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அன்று மாலை போட்டி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும்.

    இதைதொடர்ந்து வருகிற 9-ந் தேதி பாராளுமன்ற அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். பாராளுமன்ற இருசபை எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெற்று குடியரசு துணை தலைவர் ஆவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.



    • நேற்று 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
    • இந்த வாரம் 3-வது முறையாக இன்றும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

    இதே போல் நேற்றும் மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் இந்த வாரம் 3-வது முறையாக இன்று பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. டெல்லியில் உள்ள பிரசாத் நகர் மற்றும் துவாரகா செக்டார் 5 உட்பட 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

    தகவல் அறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    • இந்த முடிவால் அரசுக்கு சுமார் ரூ.9,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
    • ஜிஎஸ்டியில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.

    நாடு முழுவதும் ஆயுள் (Life) மற்றும் சுகாதார (Health) காப்பீட்டு பிரீமியங்கள் மீதான தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு அமைச்சர் குழு (GoM) பரிந்துரைத்துள்ளது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாலிசிகளின் பிரீமியங்கள் கணிசமாகக் குறையும்.

    மறைமுக வரி முறையில் கொண்டு வரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை டெல்லியில் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் இந்த குழு கூடியது.

    கூட்டத்திற்குப் பிறகு பேசிய சாம்ராட் சவுத்ரி, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து பூஜ்ஜிய சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானா அமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா, இந்த முடிவால் அரசுக்கு சுமார் ரூ.9,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.

    மாநிலங்கள் இந்த 15 சதவீத ஜிஎஸ்டியை நீக்க தயாராக இருப்பதாகவும், இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஜிஎஸ்டியில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.

    இந்நிலையில் அமைச்சர்கள் குழுவால் வழங்கப்பட்ட இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

    • அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
    • தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.

    மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

    அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.

    'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.

    தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்

    இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.

    சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். 

    • துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
    • இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்.

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 

    இந்நிலையில் டெல்லியில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாம் ஏன் ஒரு புதிய துணைத் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேற்று நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பழைய துணைத் ஜனாதிபதி எங்கே போனார் என்று கேட்டேன்?  

    துணைத் ஜனாதிபதி ராஜினாமா செய்த நாளில், வேணுகோபால் ஜி என்னை அழைத்து, துணைத் ஜனாதிபதி பணியை விட்டு போய்விட்டார் என்று கூறினார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

    சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது. ஆனால் அவர் மறைந்திருப்பதாக ஒரு கதையும் இருக்கிறது.

    இந்திய துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?

    ராஜ்யசபாவில் கர்ஜித்தவர் திடீரென்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பதிலளித்த ராகுல், "பீகாரில் நெருப்பு பற்றி எரிகிறது.

    இந்த நெருப்பைப் பார்க்க அனைத்து தலைவர்களையும் நான் அழைக்கிறேன். அதைத் தடுக்க முடியாது. பீகாரில் நான்கு வயது குழந்தை 'வாக்கு திருடன், வாக்கு திருடன்' என்று கத்துகிறது.

    அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களைத் திருடினர். இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்" என்று கூறினார்.

    • 2014-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தால் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
    • இந்த மசோதாவை ஹிட்லரின் கெஸ்டபோ (Gestapo) காவல் அமைப்புடன் ஒப்பிட்டார்.

    குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம்செய்யும் மசோதாவை நேற்று மத்திய நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

    அப்போது அவருக்கும் ம் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபாலுக்கும் இடையே காரசானமான விவாதம் நடைபெற்றது.

    மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பேசிய வேணுகோபால், "அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தார்மீகத்தைக் கடைப்பிடித்தாரா?" என்றுகேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதனால் கோபமடைந்த அமித் ஷா, "போலி வழக்கில் சிக்க வைக்கப்பட்டபோதும், நான் விடுதலையாகும் வரை எந்த ஒரு அரசியல் பதவியிலும் இருக்கவில்லை. நீங்கள் எனக்கு தார்மீகம் கற்றுக்கொடுக்கிறீர்களா?" என்று பதிலடி கொடுத்தார்.

    2010-ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மூன்று மாதங்கள் சிறையில் இருந்த பிறகு ஜாமீன் பெற்ற அவர், 2014-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தால் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

    காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, "இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை அழித்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

    ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த மசோதாவை ஹிட்லரின் கெஸ்டபோ (Gestapo) காவல் அமைப்புடன் ஒப்பிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மசோதா நகல்களைக் கிழித்தெறிந்து அமித் ஷாவை நோக்கி வீசினார்.

    • அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்று தெரியவந்துள்ளது.
    • இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்றும் தெரு நாய்களை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி கூண்டுகளில் அடைக்கும் டெல்லி அரசின் முயற்சியை எதிர்த்து இந்த தாக்குதலை நடத்தினார் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் தன் மீதான தாக்குதல் குறித்து ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "இன்று காலை ஜன் சன்வாய் நிகழ்ச்சியில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீது மட்டுமல்ல, டெல்லிக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதும் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான முயற்சியாகும்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனது அனைத்து நலம் விரும்பிகளும் என்னை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களுடன் பணியாற்றுவதைக் காணலாம்.

    இதுபோன்ற தாக்குதல்கள் எனது மன உறுதியையும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையும் ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    ஜன் சன்வாய் மற்றும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாகும்.

    உங்கள் மகத்தான அன்பு, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது வீசியெறிந்தனர்.
    • அவர்களுக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள்.

    குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை இன்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது வீசியெறிந்தனர்.

    இந்நிலையில் இந்த மசோதாவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பாஜக முன்மொழியும் புதிய மசோதா மூலம் மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக்கூடிய பழங்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்கிறோம்.

    அவர்களுக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள்.

    பின்னர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிரதிநிதியின் பதவி 30 நாட்களுக்குள் பறிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்.

    கைது செய்யப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அர்த்தமல்ல. ஆனால் இந்த மசோதா மூலம், அரசாங்கங்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக கோஷ்டிவாதத்தில் ஈடுபடும் அபாயம் உள்ளது.

    இது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுவதாகும். அதிகாரமே நீதியை ஆளும் சூழ்நிலை உருவாகும்" என்று தெரிவித்தார்.  

    • பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
    • டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இதுவரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

    கடுமையான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படும் பிரதமர், மத்திய மந்திரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி தானாகவே பறிக்கப்படும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தப் புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னரும் சுமார் 6 மாத காலம் சிறையில் இருந்தபடியே டெல்லி அரசை வழிநடத்தினார்.

    இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    ×