என் மலர்tooltip icon

    பீகார்

    • ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
    • நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.

     

    அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த  துணிகள், மூன்று  கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • லோகோ பைலட் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, தக்க நேரத்தில் ரெயிலை நிறுத்தினார்.
    • அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தனர்.

    பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில் இருந்து முசாபர்பூர் வரை சென்றுக் கொண்டிருந்த ரெயிலை அதன் லோகோ பைலட் திடீரென நடுவழியில் நிறுத்தினார். பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, தக்க நேரத்தில் ரெயிலை நிறுத்தினார்.

    லோகோ பைலட் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் காப்பாற்றப்பட்டார். ரெயிலை நிறுத்தியதும், சக பயணிகள் கீழே இறங்கி வந்தனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது, குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதாக அந்த பெண் பதில் அளித்துள்ளார். தனது காதல் குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதோடு, என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • அவருக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது.
    • 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

     

     

    அவருக்கு [தேஜஸ்வி யதாவுக்கு] ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். 

    • பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
    • முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது.

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெல்வதுதான் எங்கள் ஜன சுராஜ் கட்சியின் நோக்கம். 243 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். அதில் குறைந்தபட்சம் 40 பெண் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 முஸ்லிம் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துவோம். மாநிலத்தின் மக்கள்தொகையில் 18-19% முஸ்லிம்கள் இருந்தாலும் பீகார் சட்டமன்றத்தில் 19 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர்.

    பீகாரில் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பார்க்கிறது. நான் அக்கட்சிக்கு சவால் விடுகிறேன், பீகாரின் முஸ்லிம் மக்கள்தொகைக்கு ஏற்ப முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அப்படியென்றால் குறைந்தது 40 சட்டசபை தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

    ராஷ்டிரிய ஜனதா எங்கெல்லாம் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் இந்து வேட்பாளர்களை நிறுத்துவோம். ஆகவே முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப அக்கட்சி சீட்டு வழங்கவேண்டும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டியே. கடந்த மக்களவை தேர்தலில் 243 தொகுதிகளில் 176 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு இங்கு இடமில்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் பீகார் முதல்வராக பதவி ஏற்பார்.

    நான் 2014 இல் நரேந்திர மோடியை ஆதரித்தேன். 2015 முதல் 2021 வரை பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஆதரித்தேன். இந்தியாவில் 80% இந்துக்கள் இருந்தும் பாஜகவிற்கு கடந்த மக்களவை தேர்தலில் 37% ஓட்டு தான் விழுந்தது. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக 40% இந்துக்கள் வாக்களித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    • நாய்கள் உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது.
    • அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ் துலாரி சின்கா (வயது 76). இவர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

    இவரது மகள், அமித்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் பெங்களூரு ஜாலஹள்ளி விமானப்படை கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட 7-வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அமித்குமார் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டு இருந்தது.

    சமீபத்தில் ராஜ் துலாரி சின்கா தனது மகள்-மருமகனை பார்ப்பதற்காக பீகாரில் இருந்து பெங்களூருக்கு சமீபத்தில் வந்திருந்தார்.

    இந்த நிலையில் தனது மருமகன் குடியிருப்புக்கு அருகே காலை 6.30 மணி அளவில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது சுமார் 10 முதல் 12 தெருநாய்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ராஜ் துலாரி சின்கா மீது பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

    நாய்கள், அவரது உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது. இதை கவனித்த ஒருவர் விரைந்து சென்று நாய்களை விரட்டி விட்டு படுகாயங்களுடன் இருந்த ராஜ் துலாரி சின்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோக சம்பவம் குறித்து பெங்களூரு மாநராட்சி கமிஷனர் துஷார் கிரி நாத் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை, தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகள் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மனித உயிர்கள் முக்கியம். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

    • பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பாட்னா:

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், தனது கட்சிக்கான நிதி தேவை குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பொதுமக்களிடம் நன்கொடை கேட்போம். பீகார் முழுவதும் 2 கோடி பேர் தலா ரூ.100 வீதம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விதத்தில் ரூ.200 கோடி எளிதாக திரட்டலாம். தேர்தல் நெருங்கும்போது இன்னும் அதிகமாக கூட கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞருக்கு எக்ஸ் ரே எடுத்ததில் அவரது வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார்.

    பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அவருக்கு எக்ஸ் ரே எடுத்ததில் அவரது வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை டாக்டர்கள் அகற்றப்பட்டது.

    அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவின் தலைவர் டாக்டர் அமித் குமார் கூறுகையில்,

    நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.

    சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

     பீகாரில் பெட்டியா [Bettiah] பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் GNM டிப்ளமோ படிப்புகளுக்கான பறிச்சி மையத்தின் பிரின்சிபல் ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக பொழுதைக் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரின்சிபல் ஜெய்ஸ்வால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை படம்பிடித்து அங்கு பயின்று வரும் மாணவர்கள் அம்மாநில முதலமைச்சர் அமைச்சர் அலுவலகத்துக்கும் சுகாதார அமைச்சகத்துக்கும் புகார் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

     

    ஆனால் இவை தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்டவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு பயிற்சி மையத்தின் தலைவரே ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    • பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    • உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு.

    உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பலவேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில், அடையாளம் தெரியாமல் உதவி கலெக்டர் ஸ்ரீகாந்தை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சுற்றியிருந்த போலீசார் அவர் யார் தெரியுமா அவர்தான் உதவி கலெக்டர் என்று அடித்த போலீசாரிடம் விளக்கினர். பின்னர் அந்த இடத்தில் இருந்து உதவி கலெக்டர் சென்றார்.

    உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு பாம்பு வந்துள்ளது
    • குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்த்துள்ளார்

    பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.

    குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.

    • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

    ×