என் மலர்
ஆந்திர பிரதேசம்
- டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
- நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.
வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.
- பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
- தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டரின் மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
அப்போது கொட்டப்ப கொண்டா என்ற இடத்தில் தேர் சென்றபோது மின்கம்பியில் உரசாமல் இருப்பதற்காக தேரின் மேல் பகுதியை லேசாக வளைத்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் டிராக்டரின் முன் பகுதி நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர். 28, 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கொடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
- இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.
அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
- கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.
கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் தொகுதி உடன்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் அறிவித்தது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் பா.ஜ.க மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானது. அந்த கட்சியில் 2000 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்றனர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது ஜே .பி. நட்டா உடனிருந்தார்.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்பட 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் 4 இடங்களை மட்டுமே தர முடியும் என சந்திரபாபு நாயுடு உறுதியாக இருந்தார்.
இறுதியாக பா.ஜ.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதி ஒதுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று மீண்டும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணி இணைவது உறுதியாகி உள்ளது.
கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. திருப்பதி அல்லது அமராவதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அதில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
- அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
- வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
திருப்பதி:
மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.
கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.
அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.
4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.
வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.
பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.
இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.
இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.
இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
- வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
ஸ்ரீகாளஹஸ்தி:
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச, சேஷ வாகனங்களில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர். மாடவீதிகளில் திரண்ட பக்தர்கள் தேங்காய், உடைத்தும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் ஹர..ஹர.. மகா தேவா சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அன்னப்பறவை தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி குடித்து விடும், நீரை விட்டு விடும். அதுபோல அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளிய தன்னை வழிபடும் பக்தர்களிடம் இருக்கும் தீய குணங்கள், தீய சக்தியை நீக்கி, முக்தியின் பாதையில் செல்ல நல்வழிப்படுத்துவேன் என்பதை உணர்த்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் `ஹம்சம்' என்ற அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
அதேபோல் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். பொதுவாக கிளி வாகனம் அம்பாளுக்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களிடம் பழகி தோழமை கொள்ளும் இயல்புடையது.
பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். ஆகவே கிளி மேல் எழுந்தருளி உலா வரும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைப்பேன் என்பதை உணர்த்தவே தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
திருமலை:
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது.
அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9.45 மணியளவில் கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
- கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
- பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் இணையும் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைப்படி நடிகர் பவன் கல்யாண் வரும் தேர்தலில் பிதாபுரம் சட்ட சபை தொகுதியிலும், அனக்கா பள்ளி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது இரண்டிலும் தோல்வியடைந்தார். பவன் கல்யாண் இந்த முறை ஒரு சட்டசபை, ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் டெல்லி சென்றனர். இன்று பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
- இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.
திருமலை:
திருப்பதி கபிலேஸ்வரா் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மகான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகித்தேர்) காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடக்கிறது.
நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம் நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத், எஸ்.வி.சங்கீத், நிருத்ய கலாசாலா ஆகியவை ஏற்பாட்டில் பக்தி இசை மற்றும் கலா சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மகாசிவராத்திரிக்கு மறுநாள் (சனிக்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இந்தத் திருக்கல்யாண மகோற்சவம் அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆர்ஜித சேவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும்.
- மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜை செய்து சிவனை வழிபட்டுள்ளனர்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டம் நகரி தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அதையொட்டி 6 கால அபிஷேகமும் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலில் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தம் என 2 தீர்த்தங்கள் உள்ளன. அதில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலுக்கு மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதேபோல் காஞ்சி மகா பெரியவர் எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வந்து பல மாதங்கள் தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் கரும்புகளால் அமைக்கப்பட்ட லிங்கம், வில்வக்காய்களால் உருவாக்கப்பட்ட லிங்கம், விபூதியால் செய்யப்படட லிங்கம், சந்தனத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், பனை ஓலைகளில் அமைக்கப்பட்ட லிங்கம், பசு சாணத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட லிங்கம் எனப் பல்வேறு லிங்க அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வந்தன.

இந்த மகாசிவராத்திரி விழாவையொட்டி 10 அடி உயரத்தில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட லிங்கம் மற்றும் 9 அடி உயரத்தில் ருத்ராட்சங்கள், துளசி மணி, தாமரை மணிகளால் செய்யப்பட்ட ஏகபாத மூர்த்தி உருவம் வைக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியான நாளை ஏகபாத மூர்த்திக்கு 6 கால பூஜையும், உமா மகேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணியில் இருந்து இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சாமி தரிசனம் செய்ய தரிசன வரிசை வழியாக கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 11 மணியளவில் கங்காபவானியுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச வாகனத்திலும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பக்த கண்ணப்பர் உலா வந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ராஜகோபுரம் வரை கொண்டு வந்து அந்தந்த வாகனங்களில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். வீதி உலா முன்னால் கோலாட்டம், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
இதேபோல் இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் சோமசுந்தரமூர்த்தி, மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.






