என் மலர்
வழிபாடு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
- சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர். 28, 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கொடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






