என் மலர்
இந்தியா
- பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி ஒன்றியம், திங்களூர் அ பஞ்சாயத்தில் சேர்ந்த சிக்கநந்தி, டி. பி.தொட்டி, என்.எஸ்.புரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி இருந்தனர். அதேபோல் இந்த பகுதி முறையான பஸ் வசதியும் இல்லாமல் பகுதி மாணவ மாணவிகள் 3 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று பஸ்ஸில் ஏறி சென்று வருகின்றனர். இங்கு முறையான பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பாசகுட்டை என்ற பகுதியில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.
சீரான குடிநீர் வழங்க வேண்டும், கிராமத்துக்குள் பஸ் சென்று வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.
- ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
- தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குன்னூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.
அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
- தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் பண்பை கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தி.மு.க.வை வழி நடத்துகிறார் முதல்வர்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் உள்ளனர்.
* எனக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டாயமும் இல்லை. நானே சுயமாக சிந்தித்து முடிவு எடுத்து தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* கடந்த காலத்தைப்பற்றி கவலையில்லை. இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
* ஒரு தொண்டனாகவே தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன்.
* கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
* தளபதி எடுக்கும் முடிவுக்கு இனி நான் முழுமையாக கட்டுப்படுவேன்.
* தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
- அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
* எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கே வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க.வில் இணைந்தேன்.
* அரசியலில் சர்வாதிகாரியாக ஆணவப்போக்குடன் நடக்கும் இ.பி.எஸ். இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.
* தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை இ.பி.எஸ். திட்டமிட்டு அழித்து வருகிறார்.
* தென் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
* ஆணவப்போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார்.
* அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
- தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
* அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
* தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
* அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
- 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என்று கூறியுள்ளார்.
- பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம்.
- கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வரகுண பாண்டியன் வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீக்கப் பெற்றார். 27 நட்சத்திரங்கள் வழிபட்ட பெருமையுடையதாக இத்தலம் விளங்குகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடி உள்ளனர். மனிதப்பிறவி எடுத்துள்ள நாம் இத்தகைய திருமுறை பதிகங்களை தவறாது ஓத வேண்டும். தீயவழியில் செல்பவர்களை நல்வழிப்படுத்துவது திருமுறைகளும், சைவ சித்தாந்தமும் என்பதை உணர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது, பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் கோவில்கள் மற்றும் கோசாலைகளை முறையாக பாதுகாக்கப்படுகிறது. பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம். கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் மற்றும் இலவசங்களை வாரி வழங்கி புண்ணியம் செய்துள்ளார். இலவசம் கொடுப்பதும் தர்மம் தான். புண்ணியம் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்று பேசினார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
- இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் அமைந்துள்ள ஜீவா சிலை முன்பு மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த மௌன அஞ்சலி இரங்கல் கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஜயூடி நிர்வாகி நூர்முகமது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நாம் தமிழர் கட்சி மரியஜெனிபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பகலவன், தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ் ஆர் மாதவன் உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 700 கனஅடியாக வந்தது.
இதையடுத்து கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
- தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுவரை முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ம.ம.க. ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் என குற்றச்சாட்டு.
ஏர்செல்-மேக்சிஸ் பணமோசடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிய அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது நிலுவையில் உள்ள ஏர்செல் மேக்சிஸ் பணமோசடி வழக்கை விசாரணை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2006-07 ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சட்டப்படி, 600 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு தான் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆனால், சுமார் 3,565 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு, சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக அனுமதி அளித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பிரதிபலனாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் ஒரு பொது ஊழியர் மீது வழக்குத் தொடர வேண்டுமென்றால், முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2024 நவம்பரில் உத்தரவிட்டது.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளது.
2011 ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க உள்ளது.
ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடக்கம் முதலே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தங்களை இலக்கு வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






