என் மலர்
இந்தியா
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை.
- ஐந்து பயங்கரவாதிகளில் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐந்து பயங்கரவாதிகள் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்களுக்கு கதுவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.
- கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஈரோடு, சேலத்தில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுளளது.
திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி, மதுரையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 27.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சைவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (27.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் 27.03.2025 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதை தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சட்ட உதவிகளை வழங்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 11 நாட்களுக்கு முன்னதாக முகேஷ் என்ற வாலிபர் காணாமல் போனார்.
- போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. மாநில அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் செயல்படுவதாக மற்றொரு சமூகத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக முதல்வர் பைரன் சிங் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆகவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக 20 வயது இளைஞர் லுவாங்தெம் முகேஷ் திடீரென காணாமல் போனார். இவர் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறது.
இந்த நிலையில் தேடுதல் முயற்சியை விரைவுப்படுத்த வேண்டும் என சபம் நிஷிகாந்த் என்ற எம்.எல்.ஏ., மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. சபம் நிஷிகாந்த் கூறுகையில் "நான் ஆளுநரை சந்தித்து முகேஷ் விசயமாக ஆலோசனை நடத்தினேன். ஆளுனர் இந்த விசயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். தற்போதைய அப்டேட் உடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். கெய்சம்தோங் என்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சபம நிஷிகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.
முகேஷ் கடைசியாக பிஷ்னுபூர் மாவட்த்தில் உள்ள சினிகோன் பகுதியில் தென்பட்டுள்ளார். கடைசியாக அவர் செல்போன் குகி பிரிவனர் அதிக வசிக்கும் நோனி மாவட்டம் ஜோயுஜாங்டெக் பகுதியில் லொகேசன் காட்டியுள்ளது. ஆனாலர் சரியான இடத்தை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
"எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இழக்கும் வேதனையைத் தாங்கக்கூடாது. என் மகனின் உயிருக்காக நான் கெஞ்சுகிறேன்" என முகேஷின் தாயார் மகனை கண்டுபிடித்து தரக்கோரி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
- சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
- மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.
திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.
- நந்தினி ப்ளூ பால் பாக்கெட் தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
கர்நாடகாவில் வருகிற 1-ஆம் தேதியில் இருந்து பால் விலை பாக்கெட்டுக்கு (1050 மி.லி.) 4 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது. கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தல் காரணமாக விலை உயர்த்தப்பட இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் கே.என். ரஞ்சனா கூறியதாவது:-
பால் கூட்டமைப்பு லிட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து தரும்படி கேட்டது. இதனால் பால் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் 4 ரூபாயும், விவசாயிகளுக்குச் செல்லும்" என்றார்.
கர்நாடகாவில் பேருந்து கட்டணம், மேட்ரோ ரெயில் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலை உயர்த்தப்பட இருக்கிறது.
முன்னதாக, கர்நாடக மாநில பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக், பால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த வரும் ஒரு லிட்டர் பாக்கெட்டில் 50 மி.லி. பால் அதிகரிக்கப்பட்டு, 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 1050 மி.லி. கொள்ளளவு கொண்ட நந்தினி ப்ளூ பால் பாக்கெட் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.
- மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் கடந்த 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் சர்வதேசத் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது.
சமூக- அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிந்தனையைத் தூண்டும் படங்களுக்குப் பெயர் பெற்ற பிரபல இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்னா விதானகேயின் படைப்புகளைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வுடன் இவ்விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.
இதில், முதல் நாள் விழாவில், போருக்குப் பிந்தைய இலங்கையில் அமைக்கப்பட்ட ஒரு துடிப்பான காதல் கதையான "உங்களுடன், நீங்கள் இல்லாமல்" (2012) மற்றும் காலனித்துவக் கால இலங்கையில் அடையாளம் மற்றும் ஒடுக்குமுறையை ஆராயும் "காடி" (2019) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

ஒவ்வொரு திரையிடலுக்குப் பிறகும் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.
இரண்டாம் நாள் விழாவில், "பாரடைஸ்" (2023) திரையிடப்பட்டது. இது இடம்பெயர்வு மற்றும் சலுகை பற்றிய சமகால நாடகமாகும்.
பிரசன்னா விதானகேவுடன் பாட்காஸ்ட் பாணி ஊடாடும் அமர்வு ஒரு சிறப்பம்சமாகும் அங்கு அவர் தனது திரைப்படத் தயாரிப்புப் பயணம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான கற்றல் அனுபவத்தை வழங்கியது.
முன்னோக்குகளை வடிவமைப்பதில் சினிமாவின் பங்கை வலுப்படுத்தியதோடு, அர்த்தமுள்ள விவாதங்களைத் தூண்டியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசாரின் என்கவுண்டரில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் உயிரிழந்தார்.
சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் வைத்து சூரஜ், ஜாஃபர் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் ரெயில் மூலம் தப்ப முயன்ற சல்மானை, ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் என்கவுண்டரில் ஜாஃபர் உயிரிழந்த நிலையில், தொடர் நகைப்பறிப்பு சம்பவத்தில் கைதான சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
- அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது.
- பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
நான் மதம், சாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதசாரபற்ற நிலைக்கு இதுவே சான்று.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு 44 பரிந்துரைகளை முன்வைத்தது. இறுதியாக பாராளுமன்ற நிலைக்குழு அதை 23 ஆக குறைந்தது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை 14 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது. இது மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிராக குறிவைக்கப்படுகிறது. பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக அவர் சமூகத்தை பிளவுப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் எப்போதும் சமூகத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இதை புரிந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.






