என் மலர்
பொது மருத்துவம்
- பனங்கிழங்கில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம்.
- பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கூடுகிறது.
பனங்கிழங்கு ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான கிழங்குவகை. இது பல நன்மைகளை வழங்குகிறது.
பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.
பனங்கிழங்கில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இது உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்து நிறைவாக இருக்கிறது.
பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது.
புரதச்சத்து தேவைப்படுவோர் பனங்கிழங்கை சாப்பிடலாம். இதில் புரதம் இருப்பதால் சைவ விரும்பிகளுக்கு பனங்கிழங்கு உதவும்.
பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு. விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது.
பெண்களின் கருப்பை ஆரோக்கியத்திற்கு பனங்கிழங்கு உதவுகிறது. இதை வேக வைத்து தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலு பெறும்.
- ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம்.
- இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கவன பற்றாக்குறை மற்றும் அதிக செயல்பாட்டு கோளாறை ஏ.டி.எச்.டி. பாதிப்பு என கூறுகிறார்கள். இது சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன கவனத்தை ஒருங்கிணைப்பதிலும், மனக்கிளர்ச்சியான நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு ஏற்படும்போது அமைதியின்மை, திடீர் பதற்றம், நேரடியாக பேசும்போது கேட்க இயலாமை, மறதி, எளிதில் திசை திருப்புதல் அல்லது அதிவேகமாக இருப்பது ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 2.5 சதவீதம் பெரியவர்களும், 5 சதவீதம் குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த பாதிப்புக்கு சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் அல்லது கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரலாம் என்று கருதப்பட்டது.
மேலும், உடலில் அதிக அளவில் ஈயம் கலப்பது, குறைந்த எடை, மூளையில் காயம் போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால், இவை அனைத்தையும் விட ஏ.டி.எச்.டி. பாதிப்புக்கு பரம்பரை மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு உள்ளவர்களில் காணப்படும் மரபணுக்களின் மாறுபட்ட வடிவம், மற்ற மனநல பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படுவதை போலவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் காரணமாக உருவாகும் இந்த பாதிப்புக்கு தொடர் மருத்துவம் மூலம் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் நிரந்தரமாக குணமாக்கும் வகையில் ஆய்வுகள் தொடர்கின்றன.
- பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். கண்கள் இல்லையெனில் நம்மால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்து முடிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
* கண்களை பாதுகாக்க கீரை உணவுகளை வாரம் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
* கண்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும்.
* கண்களின் பாதுகாப்புக்கு தினந்தோறும் கண்களை மூடி, மெதுவாக விரல் நுனிகளால் கண் இமைகளை அழுத்தி விட வேண்டும். இப்படி தினமும் 10 முறை செய்ய வேண்டும். இது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளை தூண்டி, கண்ணீர் சுரப்பதை அதிகரிக்கும்.
* ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இது கண்களின் தசைகளை தளர்த்தி, கண் அழுத்தத்தை குறைக்கும்.
* வெளியில் செல்லும்போது, சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். காற்று அதிகமாக வீசும்போது, கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும். கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, கண் ரத்த அழுத்தத்தை குறைத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு ஓய்வு அளித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது, கண் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும்.
- கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என எல்லா வைட்டமின்களும் உள்ளன.
- கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது.
கொத்தமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி இலைகளில் நிறைய சிறப்புகள் உள்ளன. அவை சுவையான மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.
கொத்தமல்லியின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலையின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவையாக உள்ளன. கொத்தமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
* கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என எல்லா வைட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இவை நமக்கு நல்ல கண் பார்வையை அளிக்கிறது.
* கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
* கொத்தமல்லி இலைகளின் பிரகாசமான பச்சை நிறத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணமாகும். இது நொதி செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து விடும். கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது.
* கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்தது.
* கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகளின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு எலும்பை மூட்டுவலி தொடர்பான வலியிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.

* கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு அல்லது குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது. கொத்தமல்லி இலை சாறை 1 அல்லது 2 டீ ஸ்பூன் சாற்றை மோரில் கலந்து குடிக்கலாம்.
* கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், ஜீரண சக்தியை எளிதாக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
- வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
- மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.
நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.

நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
- காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை.
- கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் இப்போது இருக்கும் வேலை பளுவால் ஈஸியா என்ன சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிட தொடங்கிவிட்டோம். ஆனால் அப்படி அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதால் நமக்கு சுவை என்னமோ நல்லாதான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு அத்தனையும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.
இதனால் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உப்பு சார்ந்த நோய்கள் இப்போ அதிகபடியாக பெருகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், கேன்சர் என பல்வேறு விதமாக உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.
சரி ஹோட்டல்ல சாப்பிட்டா தான் இப்படி ஏகப்பட்ட நோய்கள் வருது.. அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவோம் என்று கிளம்பினாலும் இப்படிதான் ஆகிறது.

ஆமாம்... நாம் எந்த அளவுக்கு எண்ணெய், உப்பு, சர்க்கரை என அதிக சுவையூட்டும் உணவுகளை எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நோய்களுடன் வாழ்கிறோம் என்று தான் அர்த்தம்.
இப்போதெல்லாம் சிறு வயதிலேயே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. இதை ஐசிஎம்ஆர், என்ஐஎன் ஆகிய சுகாதார அமைப்புகள் உணவின் வழிகாட்டி என்ற கருத்துகணிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.
நாம் அன்றாடம் வேக வைத்த காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள் நாம் எடுத்து கொள்வதால் உடல் சார்ந்த நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.

நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடலுக்கு அதிக பாதிப்புக்களை தருகிறது. கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.
இது போன்ற உணவு பழக்கங்களில் இருந்து நாம் எப்படி மாறுவது என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்சட்டி சமையல் முறையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.

காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை. ஆதலால் அரைபதம் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
நமக்கு வரும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். நமது சந்ததியும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்கும் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன. ஆகவே நமது அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது தமது கையில் தான் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மகத்துவத்தை அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற நாம் கடமைபட்டிருக்கிறோம்.
- பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
- பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
வாழைப்பழத்தை விரும்பாதவர்களே இல்லை. எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேலும் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு என்ற நிறத்தில் இருக்கும். பலர் மஞ்சள் மற்றும் சிவப்பு வாழைப்பழத்தை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் மட்டுமே பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள்.
உங்கள் தெரியுமா.. மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் தான் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று. இதில் சத்துங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்த விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல வழியாகும். மேலும், பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மற்றும் இதில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ளது. இதிலிருக்கும் இனிப்பு தனித்துவமானது என்றே சொல்லலாம்.

மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..
• பச்சை வாழைப்பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.
• இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்தம் மற்றும் குடலில் உள்ள குளுக்கோஸை உடைக்கும் நொதிகளைத் தடுப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
• இதில் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது. இவை பசியைத் தணிக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை குறைக்கிறது, எனவே எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
• இதில் இருக்கும் மற்றொரு மூலப்பொருள் பெக்டின். இது எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. அவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, இருதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.
• பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை இதய நோய், புற்றுநோய், கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
- சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
- சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது.
சரியான சிறுநீரக உணவுக்கு டயாலிசிஸ் நோயாளியின் திரவ உட்கொள்ளல் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். உடலில் அதிக அளவு திரவங்கள் எடை அதிகரிப்பு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். நுரையீரலில் அதிகப்படியான திரவம் குவிந்தால், நோயாளி சுவாசிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார் மற்றும் பிற இதய பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும்.
டயாலிசிஸ் சிறுநீரகத்தின் போது கூடுதல் திரவங்கள் அகற்றப்பட்டாலும், ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பாதுகாப்பாக அகற்றப்படும். திரவங்களின் அளவு அதிகமாக இருந்தால், டயாலிசிஸ் நோயாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியும் பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கும்.
ஒரு நோயாளியின் திரவ உட்கொள்ளலைக் கண்காணிக்கும் போது, அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் பொருள் திரவமாக மட்டும் கணக்கிடப்படுவதில்லை, ஆனால் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சில காய்கறிகள் மற்றும் பழங்களில் திரவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றும் அவற்றின் செய்முறையில் திரவத்தை உள்ளடக்கிய உணவுப் பொருட்களும் திரவ நுகர்வில் சேர்க்கப்படும்.

டயாலிசிஸின் பக்க விளைவுகளில் ஒன்று, செயல்முறையின் போது ஒரு குறிப்பிட்ட அளவு புரதம் இழக்கப்படுகிறது. எனவே, இழப்பை ஈடுசெய்ய அதிக புரத உட்கொள்ளல் அவசியம். உடலில் புரதச் சத்து குறைவதால் உடல் எடை குறைவதோடு, கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் உடலின் திறனையும் குறைக்கலாம்.
உயர்தர புரதப் பொருட்களில் சில... கோழிப் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு.
டயாலிசிஸ் நோயாளிக்கு குறைந்த உப்பு நுகர்வு எப்போதும் ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் உப்பு உட்கொள்வது ஒரு நபருக்கு தாகத்தை உண்டாக்கும் மற்றும் இறுதியில் அதிகப்படியான திரவ நுகர்வுக்கு வழிவகுக்கும்.
சோடியம் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த, சமைக்கும் போது முழு மசாலா மற்றும் புதிய மூலிகைகள் பயன்படுத்த வேண்டும் மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு, பாட்டில் கோழி சாறு மற்றும் அதிக அளவு சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு, அதாவது ஒவ்வொரு சேவையிலும் 250 கிராமுக்கு மேல்.
சமைக்கும் போது குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்த வேண்டும் அல்லது எதுவும் பயன்படுத்தக்கூடாது. உணவுக்கு ஒரு சுவையை கொடுக்க, சுண்ணாம்பு மற்றும் வினிகர் சிறந்த விருப்பங்கள்.
பருப்பு, கோகோ பானங்கள், கோலா பானங்கள், பீர், பீன்ஸ் மற்றும் நட்ஸ் போன்ற பாஸ்பரஸ் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது டயாலிசிஸ் நோயாளியின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டயாலிசிஸ் உடலில் இருந்து பாஸ்பரஸை அகற்றாது, இது இறுதியில் இரத்தத்தில் சேருகிறது, இதன் விளைவாக எலும்புகள் கால்சியத்தை வெளியிடத் தொடங்குகின்றன, இதன் விளைவாக எலும்புகள் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். எனவே, இரத்தத்தில் உள்ள இந்த பாஸ்பரஸ் இதயம், மூட்டுகள், இரத்தம் மற்றும் தசைகளில் கால்சியம்-பாஸ்பரஸ் படிகங்களை உருவாக்குகிறது, இது நிலையான வலி, இரத்த ஓட்டத்தில் சிக்கல்கள், கண்ணில் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
நோயாளிகள் உண்ணும் உணவில் இருந்து பாஸ்பரஸ் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த பாஸ்பேட் பைண்டர்களை உட்கொள்ள வேண்டும். சிறுநீரக நிபுணர் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப பாஸ்பேட் பைண்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார்.

டயாலிசிஸ் சிகிச்சை பெற்றவர்கள் தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மற்றும் பன்றி இறைச்சி போன்ற அதிக பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு இடையில் பலவீனமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது, இது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை உயர்த்துகிறது.
இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் தசைகளை வலுவிழக்கச் செய்யலாம் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பை ஏற்படுத்தும், இது தீவிர நிகழ்வுகளில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
சில நேரங்களில் உணவு நோயாளிக்கு போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்காது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் மூலம் தேவையான அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைப் பெற முடியும், ஆனால் அந்தந்த சுகாதார நிபுணரின் பரிந்துரையின் கீழ் மட்டுமே.
- உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்
- காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் தரும்.
சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவும் வயிற்றில் கேஸ் சேரும்.
உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆக கூடியவற்றை குடியுங்கள்.
பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரை சூடாக்கும் போது அதில் ஒரு ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பூண்டு:
உணவு ஜூரணத்திற்கும், கேஸ் பிரச்சனைக்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.
பெருங்காயம்:
நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.

சூடான பானங்களை குடியுங்கள். டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.

இலவங்கப் பட்டை:
இலவங்கப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும்.
- கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
- கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
- காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
காலையில் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது சிறப்பானது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாக தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதன் இயக்கமும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடனடியாக கிடைக்கச் செய்யும். மேலும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு ஆளாகுவதை தவிர்க்கவும் முடியும். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வழிவகை செய்யும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி ஜூஸ் பருகுவது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவி புரியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இது நார்ச்சத்துமிக்க உணவுப்பொருளாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அதனை சாப்பிடுவது குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும். கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் எளிமையாக்கும்.
பீட்ரூட்:
இதிலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் எளிதாக நடைபெறுவதற்கு உதவிடும்.
ஆப்பிள்:
இதில் நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், இரைப்பை, குடல் நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
- வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும்.
- மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அத்துடன் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டுக்கும் நார்ச்சத்து அவசியமானது.
வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும். மேலும் மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் அவை கொண்டிருக்கின்றன.






