என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உடற்பயிற்சி அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
காலை மற்றும் மாலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.
நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.
மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.
நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.
மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.
பலம், பலவீனங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு தேவைப்பட்டால் மற்றவர்களின் ஆலோசனை மற்றும் உதவியை பெற்றாவது வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
எல்லோரும் விரும்புவது வெற்றியை தான். ஆனால் இந்த வெற்றியை எளிதாக பெற்று விட முடியாது. தோல்விகள் வருவது சகஜம் தான். மனிதர்களில் வெற்றியை மட்டும் ருசித்தவர் யாரும் இல்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்காக துவண்டு விட கூடாது. வேகமாக அதில் இருந்து வெளிவருவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்கள், செயல்பாடுகளில் மாற்றம் தேவையா? என்று யோசித்து முடிவு எடுங்கள்.
தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.
பலம், பலவீனங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு தேவைப்பட்டால் மற்றவர்களின் ஆலோசனை மற்றும் உதவியை பெற்றாவது வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். இவை அனைத்தும் வெற்றிகளை உங்களுக்கு சொந்தமாக்கி வாழ்வில் முன்னேற செய்யும்.
தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்கள், செயல்பாடுகளில் மாற்றம் தேவையா? என்று யோசித்து முடிவு எடுங்கள்.
தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.
பலம், பலவீனங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு தேவைப்பட்டால் மற்றவர்களின் ஆலோசனை மற்றும் உதவியை பெற்றாவது வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். இவை அனைத்தும் வெற்றிகளை உங்களுக்கு சொந்தமாக்கி வாழ்வில் முன்னேற செய்யும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் ஏற்றது. இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் - 4,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். இதை, கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.
வேக வைத்த பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.
அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.
பேபி கார்ன் - 4,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். இதை, கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.
வேக வைத்த பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.
அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.
சூப்பரான சத்தான பேபி கார்ன் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும்.
நீரழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழி முறைகளையும் அறிவுறுத்துகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.
அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.
உதாரணமாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவையாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தையினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக்கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.
அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.
உதாரணமாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவையாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தையினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக்கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மற்ற நேரங்களிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்ல பண்பாடு. மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உணவு சாப்பிடாமல் இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதிகமாக சாப்பிட்டாலும் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடியது உணவு. மாணவர்களின் உடலுக்கும், கல்விக்கும் பாதிப்பில்லாமல் உணவுப் பழக்க வழக்கம் அமைய வேண்டும் அதற்கான சில டிப்ஸ்...
காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.
ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.
சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.
இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.
செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.
ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.
ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.
புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.
ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.
சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.
இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.
செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.
ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.
ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.
புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? என்று பார்க்கலாம்.
குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தாலே பலருக்கு சிரமம் தான். கத்திரி வெயில் தான் சுட்டெரிக்கும் என்ற நிலைமாறி, வெயில் காலம் முழுவதுமே நம்மை சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும், வீசும் அனல் காற்றும் உடலை பெரிதும் பாதிக்க செய்வதே அதற்கு காரணம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னே வெயில் 100 டிகிரியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? உடல் வெப்ப தாக்குதல். உடல் சோர்வு, மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், ஆசன வாய்கடுப்பு, கண் எரிச்சல், தோல் நோய்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுவது ஏராளம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்த நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நலம்.
கோடை காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய் நிலைக்கு காரணம். அதுவே உடல் வெப்பநிலையை அதிகரித்து உடலின் நீர்ச்சத்து தோலின் வழியாகவே பெரும்பாலும் இழக்கப்படுவதால் உடல் சோர்வு, தாகம், நாக்கு வறட்சி, வியர்க்குரு, சிறுநீர் குறைவாக கழிதல், சிறுநீர் எரிச்சல், குடலில் வறண்ட மலத்தால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பித்தம் அதிகரிக்க கல்லீரல் செயல்பாடு அதிகரிப்பதால் காமாலை நோய் ஏற்படும் நிலை எளிதில் உண்டாகிறது.
அதிகமான பித்தத்தைக் குறைப்பதே காத்துக்கொள்வதற்கு சிறந்த வழி. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். உணவில் காரம், புளிப்பு, மசாலா சேர்ந்த உணவுப்பொருட்களை தவிர்த்து கொள்வது நல்லது. மதுபானத்தால் காமாலை நோய் சீக்கிரமே உண்டாகும். டீ, காபி இவற்றை முற்றிலும் தவிர்த்து பித்தத்தை குறைக்கும் படியாக பாலில் ஏலம், சீரகம், தனியா விதை சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். தயிர், மோர் இவற்றினை மஞ்சள் பொடியிட்டு கொத்துமல்லி இலைகள் சேர்த்து தாளித்து தேவையான அளவு பருகலாம். உணவில் நீர்ச்சத்து நிறைந்த கீரைகளையும், காய்கறியையும் அதிகம் சேர்க்கலாம்.
பகல் நேரம் பித்தம் அதிகமான காலம் என்பதால் அந்த நேரத்தில் வெள்ளரி பிஞ்சி, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வ பழம் இவற்றினை எடுத்து கொள்ளலாம். இதனால் நீர்ச்சத்து உடலில் சேர்க்கப்படுவதோடு பித்தமும் குறையும். சிறுநீர் எரிச்சல் நீங்கும். பழங்களை பிழிந்து சாறு மட்டும் குடிக்காமல் பழம் முழுவதும் எடுத்து கொண்டால் நார்ச்சத்து கிடைக்கும். அதனால் மலச்சிக்கல் நீங்கும்.
கோடைக்காலத்தில் நீர் தூய்மைக்கேடு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால் குடிக்கும் நீரினை கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தவும். இல்லாவிட்டால் தொண்டை வலி, வயிற்று போக்கு எளிதில் தோன்றும். மேலும் நீரில் வெட்டிவேர் அல்லது சீரகம் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். இவற்றால் உடல் உள்உறுப்புகள் குளிர்ச்சி அடையும், உஷ்ணம் தணியும்.
அதிக உடல் சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்புடன் சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம். கோடைக்கால வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னாரி மணப்பாகு, மாதுளை மணப்பாகு, துரிஞ்சி பழ மணப்பாகு இவற்றில் ஒன்றை பகல் நேரங்களில் அளவோடு எடுத்து கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் லேகியம், வில்வபழ லேகியம் இவற்றை உட்கொண்டால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். கோடைக்கால அம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ள தாழம்பூ மணப்பாகினை எடுத்துக்கொள்ளலாம்.
வெப்பக்கால நோய்களில் இருந்து தோலினை காத்து கொள்ள சந்தனாதி தைலம், குளிர் தாமரை தைலம், சீரக தைலம் இவற்றில் ஒன்றை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். வெறும் நல்லெண்ணெய் கூட, எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும். கண்களும் குளிர்ச்சி அடையும். வியர்க்குரு போக்க பனைநுங்கினை உண்பதுடன் தோலின் மீதும் பூசலாம்.
தோல் வறட்சியை தடுக்கவும், நீர் இழப்பினை குறைக்கவும், பகல் நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்க்கலாம். தோல் நமைச்சல் இருந்தால் அருகம்புல் தைலம் மேலே தடவலாம். அதிக கண் எரிச்சல் உள்ளவர்கள் இரவில் உள்ளங்கால்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுக்கலாம்.
சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்று கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம். கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து காத்துக்கொள்ள கசப்பு சுவையுள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவற்றை வாரம் இருமுறை சேர்த்து கொள்ளலாம். பப்பாளி, சப்போட்டா போன்ற கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இவ்வாறாக செயற்கையான குளிர்பானங்களையும், நிறமூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தவிர்த்து இயற்கையான உணவு வகைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றினால், இந்த கோடைக்காலம் மட்டுமல்ல, எந்தக்காலமும் நமக்கு குளிர்ச்சி தரும் காலம் தான்.
சோ.தில்லை வாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.
கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? உடல் வெப்ப தாக்குதல். உடல் சோர்வு, மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், ஆசன வாய்கடுப்பு, கண் எரிச்சல், தோல் நோய்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுவது ஏராளம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்த நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நலம்.
கோடை காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய் நிலைக்கு காரணம். அதுவே உடல் வெப்பநிலையை அதிகரித்து உடலின் நீர்ச்சத்து தோலின் வழியாகவே பெரும்பாலும் இழக்கப்படுவதால் உடல் சோர்வு, தாகம், நாக்கு வறட்சி, வியர்க்குரு, சிறுநீர் குறைவாக கழிதல், சிறுநீர் எரிச்சல், குடலில் வறண்ட மலத்தால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பித்தம் அதிகரிக்க கல்லீரல் செயல்பாடு அதிகரிப்பதால் காமாலை நோய் ஏற்படும் நிலை எளிதில் உண்டாகிறது.
அதிகமான பித்தத்தைக் குறைப்பதே காத்துக்கொள்வதற்கு சிறந்த வழி. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். உணவில் காரம், புளிப்பு, மசாலா சேர்ந்த உணவுப்பொருட்களை தவிர்த்து கொள்வது நல்லது. மதுபானத்தால் காமாலை நோய் சீக்கிரமே உண்டாகும். டீ, காபி இவற்றை முற்றிலும் தவிர்த்து பித்தத்தை குறைக்கும் படியாக பாலில் ஏலம், சீரகம், தனியா விதை சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். தயிர், மோர் இவற்றினை மஞ்சள் பொடியிட்டு கொத்துமல்லி இலைகள் சேர்த்து தாளித்து தேவையான அளவு பருகலாம். உணவில் நீர்ச்சத்து நிறைந்த கீரைகளையும், காய்கறியையும் அதிகம் சேர்க்கலாம்.
பகல் நேரம் பித்தம் அதிகமான காலம் என்பதால் அந்த நேரத்தில் வெள்ளரி பிஞ்சி, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வ பழம் இவற்றினை எடுத்து கொள்ளலாம். இதனால் நீர்ச்சத்து உடலில் சேர்க்கப்படுவதோடு பித்தமும் குறையும். சிறுநீர் எரிச்சல் நீங்கும். பழங்களை பிழிந்து சாறு மட்டும் குடிக்காமல் பழம் முழுவதும் எடுத்து கொண்டால் நார்ச்சத்து கிடைக்கும். அதனால் மலச்சிக்கல் நீங்கும்.
கோடைக்காலத்தில் நீர் தூய்மைக்கேடு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால் குடிக்கும் நீரினை கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தவும். இல்லாவிட்டால் தொண்டை வலி, வயிற்று போக்கு எளிதில் தோன்றும். மேலும் நீரில் வெட்டிவேர் அல்லது சீரகம் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். இவற்றால் உடல் உள்உறுப்புகள் குளிர்ச்சி அடையும், உஷ்ணம் தணியும்.
அதிக உடல் சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்புடன் சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம். கோடைக்கால வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னாரி மணப்பாகு, மாதுளை மணப்பாகு, துரிஞ்சி பழ மணப்பாகு இவற்றில் ஒன்றை பகல் நேரங்களில் அளவோடு எடுத்து கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் லேகியம், வில்வபழ லேகியம் இவற்றை உட்கொண்டால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். கோடைக்கால அம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ள தாழம்பூ மணப்பாகினை எடுத்துக்கொள்ளலாம்.
வெப்பக்கால நோய்களில் இருந்து தோலினை காத்து கொள்ள சந்தனாதி தைலம், குளிர் தாமரை தைலம், சீரக தைலம் இவற்றில் ஒன்றை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். வெறும் நல்லெண்ணெய் கூட, எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும். கண்களும் குளிர்ச்சி அடையும். வியர்க்குரு போக்க பனைநுங்கினை உண்பதுடன் தோலின் மீதும் பூசலாம்.
தோல் வறட்சியை தடுக்கவும், நீர் இழப்பினை குறைக்கவும், பகல் நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்க்கலாம். தோல் நமைச்சல் இருந்தால் அருகம்புல் தைலம் மேலே தடவலாம். அதிக கண் எரிச்சல் உள்ளவர்கள் இரவில் உள்ளங்கால்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுக்கலாம்.
சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்று கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம். கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து காத்துக்கொள்ள கசப்பு சுவையுள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவற்றை வாரம் இருமுறை சேர்த்து கொள்ளலாம். பப்பாளி, சப்போட்டா போன்ற கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இவ்வாறாக செயற்கையான குளிர்பானங்களையும், நிறமூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தவிர்த்து இயற்கையான உணவு வகைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றினால், இந்த கோடைக்காலம் மட்டுமல்ல, எந்தக்காலமும் நமக்கு குளிர்ச்சி தரும் காலம் தான்.
சோ.தில்லை வாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.
பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. பப்பாளி பழம் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் எங்கும் எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான். இந்த பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. எனவே, பப்பாளி பழம் மூலம் என்ன என்ன நன்மைகள் என பார்க்கலாம்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் உடனே ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால் வீக்கம் விரைவில் கரைவதை பார்க்கலாம்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும்.
பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
எனவே, மிக எளிதில் கிடைக்கும் இந்த பப்பாளி பழத்தை உபயோகப்படுத்தி பயன்பெறலாம்.
மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கேழ்வரகு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - ஒரு கப்
பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல் - கால் கப்
நாட்டுச் சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
கேழ்வரகு மாவு - ஒரு கப்
பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல் - கால் கப்
நாட்டுச் சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.
அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.
பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.
அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.
பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.
சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.
கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.
ஹாட் பேன்ட்:
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.
பருத்தி சேலைகள்:
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.
நீளமான பாவாடைகள்:
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.
லூசான பேன்ட் :
இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்
பருத்தி ஆடைகள்:
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.
சல்வார் கமீஸ்:
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.
குட்டையான ஆடைகள்:
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.
காதி:
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?
ஹாட் பேன்ட்:
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.
பருத்தி சேலைகள்:
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.
நீளமான பாவாடைகள்:
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.
லூசான பேன்ட் :
இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்
பருத்தி ஆடைகள்:
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.
சல்வார் கமீஸ்:
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.
குட்டையான ஆடைகள்:
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.
காதி:
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.
பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை.
பற்சிதைவு என்பது பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனை அது. சரியான நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது! குழந்தைகளை பொறுத்தவரை, பற்களை சரியாக விளக்கினால், பற்சிதைவை தவிர்க்கலாம். ஏதேனும் காரணத்தினால் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை பற்சிதைவினால் அவதி படுகிறது என்பதை அறிய சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.
அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.
நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்பு புள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.
உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம்.
சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.
அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.
நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்பு புள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.
உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம்.
பிள்ளைகள் தேர்வின் போது உடலுக்கு உபாதை தராத அதே சமயம் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரொட்டி (அ) நவதானிய ரொட்டி - 8,
பன்னீர் துருவியது - 1 கப்,
கேரட் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
ஸ்வீட்கார்ன் ( வேகவைத்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
குடைமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு,
கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கேரட், சீஸ், வேகவைத்த ஸ்வீட கார்ன், நறுக்கிய கொத்தமல்லித் தழை, நறுக்கிய குடைமிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது கோதுமை ரொட்டியில் முதலில் வெண்ணெய் தடவி, பின் அதன்மேல் புதினா சட்னியை தடவி, அதன்மேல் பன்னீர் கலவையை வைத்து, அதன்மேல் ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூட வேண்டும்.

கிரீன் சட்னி செய்முறை
என்னென்ன தேவை?
புதினா - 1 கப்,
மல்லித்தழை - 2 டீஸ்பூன்,
தேங்காய் -1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
பூண்டு பல் - 4.
இஞ்சி - ¼ துண்டு,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கோதுமை ரொட்டி (அ) நவதானிய ரொட்டி - 8,
பன்னீர் துருவியது - 1 கப்,
கேரட் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
ஸ்வீட்கார்ன் ( வேகவைத்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
குடைமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு,
கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கேரட், சீஸ், வேகவைத்த ஸ்வீட கார்ன், நறுக்கிய கொத்தமல்லித் தழை, நறுக்கிய குடைமிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது கோதுமை ரொட்டியில் முதலில் வெண்ணெய் தடவி, பின் அதன்மேல் புதினா சட்னியை தடவி, அதன்மேல் பன்னீர் கலவையை வைத்து, அதன்மேல் ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூட வேண்டும்.
சூடாக்கிய கிரில்பேன் அல்லது தோசைக் கல்லில் ரொட்டியை வைத்து இரண்டு பக்கமும் சிவந்த பிறகு, இரண்டாக வெட்டி பரிமாறவும்.

கிரீன் சட்னி செய்முறை
என்னென்ன தேவை?
புதினா - 1 கப்,
மல்லித்தழை - 2 டீஸ்பூன்,
தேங்காய் -1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
பூண்டு பல் - 4.
இஞ்சி - ¼ துண்டு,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கிரீன் சட்னி தயார். இந்த சாண்ட்விச் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்தாது. அதே சமயம் மிகவும் எளிதான உணவு.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






