என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை ஆறு மணிக்கு காபி அல்லது டீ, எட்டு மணிக்கு இரண்டு இட்லி, பத்து மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.

    சிலர் வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.

    சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதைக் கடந்துவிட்டாலே சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

    நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, விடிகிற பொழுது நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1 கப்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - 1/4 பாகம்
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

    முட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலால் மிக அதிக அளவில் வலிப்பு வரும்.
    காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது உயிருக்கு ஆபத்தான சில விஷக்காயச்சல்களாலும் வலிப்பு ஏற்படலாம். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.

    ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.

    அறிகுறிகள்

    உடல் வெப்பம் அதிகரிப்பு
    கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
    காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.

    அபாய நிலை

    * குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
    * காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
    * பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
    * மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
    * ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
    * காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
    * ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
    * 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.



    மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்

    * 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
    * மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
    * குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
    * அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு

    கவனிக்க வேண்டியவை

    1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
    5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
    6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
    8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
    9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
    10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
    11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
    12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
    உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை என மாத்திரைகள் பலவகைகளில் உள்ளன.
    நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன.

    இந்த மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா… மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன? பார்க்கலாம்.

    மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    உணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.

    நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.

    வாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் மாத்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.

    மாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், ‘குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்’ என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.

    பாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.



    மாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.

    தவறான முறைகள்

    ஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.

    நீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.

    காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.

    மாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
    புளித்த மோர் - 2 கப்,
    அரிசி - ஒரு டீஸ்பூன்,
    சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

    குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
    பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.

    ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

    சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.



    இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.

    பிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.

    வேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடி கொட்டுதல் நிகழும்போது, முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை தேடி உண்ண வேண்டும்.
    முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். முடி கொட்டுதல் நிகழும்போது, முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை தேடி உண்ண வேண்டும்.

    பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் கட்டாயமாக முடி கொட்டும். பெண்கள் தாய்மைப் பேறை அடைந்தது முதல் இரும்புச் சத்து, புரதச் சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக்காக தினமும் எடுப்பார்கள். இது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்தி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக, செழிப்பாகக் காணப்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு மருந்து மாத்திரைகளை உண்பதை தாய்மார்கள் நிறுத்தியதும், தானாகவே பெண்களுக்கு முடி கொட்டத் துவங்குகிறது.



    அதேபோல் குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டும். ஏனெனில் பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி உண்ணும் தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும், ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை. செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான ஒரு நிகழ்வுதான் இது.

    படிக்கின்ற வயதில் இருக்கும் இளம் பருவத்தினர் சிலர், படிப்பில் அதிக கவனம் செலுத்தும்போது சரியான சரிவிகித உணவை எடுப்பதில்லை. அவர்கள் முடியையும் சரியாகப் பராமரிப்பதில்லை. குறிப்பாக அரசுத் தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்களுக்கு படிப்புச் சுமை காரணமாக, சரியான தேக பராமரிப்பின்மை காரணமாக  முடி கொட்டத் துவங்குகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக அல்லாமல் நோய் எதிர்ப்பிற்காக மருந்துகளை அதிகமாக எடுப்பவர்களுக்கும் முடி அதிகமாகக் கொட்டும். வயது முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாகக் கொட்டும்.
    குழந்தைகளுக்கு அடிக்கடி பழங்கள் காய்கறிகளை வைத்து சல்சா அல்லது சாலட் செய்து கொடுத்தால் அனைத்து விதமான சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    கிவி - 3
    வெங்காயம் - 1
    பூண்டு - 2
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    வினிகர் - 1 டீஸ்பூன
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    தக்காளி, கிவி, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, கிவி, வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு, வினிகர், சர்க்கரை, மிளகு தூள், சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு அனுலோம விலோம பிராணாயாமம் மிகவும் நன்மை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: உள்மூச்சிலே காற்றை மேல் நோக்கியும் வெளிமூச்சிலே காற்றை கீழ் நோக்கியும் அலைகளைப் போல காற்றை இழுத்து விடுவதால் அனுலோம விலோம பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப் பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். இரு கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விட்டு நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.

    இரு நாசிகளின் வழியாக ஒரே சீராக மூச்சுக் காற்றை ஆழமாகவும் நிதானமாகவும் உள்ளே இழுக்கவும். பிறகு அதே போல் இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை ஒரே சீராக நிதானமாகவும், ஆழமாகவும் வெளியே விடவும். இப்படிச் செய்தால் அது அனுலோம விலோம பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது.



    மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும், மூச்சை வெளியே விடும் போது மார்பை சம நிலைக்கும், அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.

    ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்து பயிற்சியினால் சுற்றுக்களை அதிகரித்துக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை மாலை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்:- வயிறு, மார்பு மற்றும் மூச்சின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் மூச்சுக்காற்றில் சப்தம் வராதபடி செய்யவும்.

    பயன்கள்: நுரையீரல், இருதயம், வயிறு சுத்தமாக்கப்பட்டு அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தை அடையும். ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகும். மூச்சின் வேகமும் இருதயத்தின் வேகமும் குறைந்து சம நிலைக்கு வரும். நுரையீரல், இருதயம் சீராக இயங்கும். நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த பயிற்சி மிகவும் நன்மை அளிக்கிறது.
    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்!

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    * கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

    * கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

    * நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.

    * கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

    * தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

    இவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா? வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்!
    நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி  உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச  உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மைத்தாக்குப் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

     * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல். பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா. கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற  வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து மொறுமொறு சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
    ரொட்டி தூள் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
    வினிகர், சோயா சாஸ் - 1 சிறிய தேக்கரண்டி
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    தயிர் - 3 தேக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

    இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×