என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
    • கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?

    சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.

    இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.

    பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்

    அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.

     

    தி பேரடைஸ் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

    நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் "தி பாரடைஸ்". 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

    மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது. 1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று பின்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான AayaSher பாடல் நாளை (பிப்.24) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோவை நடிகர் நானி X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
    • கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார்.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    அவ்வ்கையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்திற்கு 2 ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை பி.எஸ். வினோத்ராஜ் வென்றார். அதே போல சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென் வென்றார்.

    இந்நிலையில், கொட்டுக்காளி படத்திற்காக விருது வென்ற பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் அன்னா பென் ஆகியோரை சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ளது.

    அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜை செய்தனர்.

    2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

    இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

    'ஜெய் ஹனுமான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஹனுமானாக நடிக்க உள்ளார்.

    'ஜெய் ஹனுமான்' படத்தை, கடந்த 2024 இல் 'ஹனுமான்' என்ற படத்தை எடுத்து கவனம் பெற்ற தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார். உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

    கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே, அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் நேற்று ஜெய் ஹனுமான் படக்குழு சிறப்பு பூஜை செய்து படப்பிடிப்பை தொடங்கியது.

    இதில் ரிஷப் ஷெட்டி தனது மனைவி பிரகதி ஷெட்டியுடன் கலந்து கொண்டார். இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். கௌரா ஹரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.   

    நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.

    எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

    இருப்பினும் எப்போது திருமணம் என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தகவலின்படி, பிப்ரவரி 26 அன்று மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

    மேலும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.    

    தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது.

    சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

    இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். 

    வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட GKM தமிழ்குமரன்,  788 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். 

    தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.   

    • ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கேரளா மாநிலத்தில் நடைபெற்றது.
    • அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    இதில், 'பிரம்மயுகம்' படத்திற்காக சிறந்த மலையாள நடிகருக்கான Filmfare விருதை மம்மூட்டி வென்றார்.

    ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
    • சரத்குமார் நடித்துள்ள ஆழிப் படமும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

    அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. ராதிகாவை மையக்கதாபாத்திரமாக கொண்டு நகைச்சுவை பாணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் சிவகார்த்தியேன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    நிவாஸ் கே. பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல்பாடலை பாடியுள்ளார். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


    வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஷால் ஜனநாயகன் திரைப்பட விவகாரம், தணிக்கை வாரியம் பற்றி கருத்து தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனக்கு கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் பற்றி தெரியாது. இதுபோன்ற பிரச்சினையின் போது ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால், இந்த வவிகாரத்தில் ஏதாவது நடந்திருக்கலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்.

    தயாரிப்பாளர் சங்கத்தை விட பெரிய அமைப்பு தணிக்கை வாரியம். கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை கட் செய்ய வேண்டும் என்பதை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட அமைப்பு முடிவு செய்கிறது. உண்மையை சொல்லப் போனால், எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. எனினும், விதிமுறைகள் என இருக்கும் போது அதற்கு ஏற்பதான் நடந்து கொள்ள வேண்டும்," என்றார். 

    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.ஜே.-வாக இருந்து நடிகர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம், இவர் மீண்டும் வர்ணனை செய்வதை ஒட்டி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் விரைவில் ரிலீசாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
    • படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

    சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    ×