என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.ஜே.-வாக இருந்து நடிகர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இடையில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆர்.ஜே. பாலாஜி கருப்பு திரைப்பட பணிகள் காரணமாக வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    ஆர்.ஜே. பாலாஜி மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம், இவர் மீண்டும் வர்ணனை செய்வதை ஒட்டி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் விரைவில் ரிலீசாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
    • படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

    சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    அஜித் குமாரை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

    திரையுலகின் உச்ச நட்சத்திரம், ரேசர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜித் குமார். திரைத்துறை கடந்து, தற்போது கார் ரேசிங்கில் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள ரேசர் அஜித் குமாரை திரைப்பிரபலங்கள் நேரில் சந்தித்து கார் ரேசிங்கில் பங்கேற்று வருவதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வரிசையில், நடிகை மஞ்சு வாரியர் ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்துள்ளார். கார் பந்தயக் களத்தில் அஜித் குமாரை சந்தித்தது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ``AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்,'' என குறிப்பிட்டுள்ளார். 



    • படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
    • படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

    வி.கே.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் வடம். உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக காளை அடக்குதல் போட்டியை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமல் உடன் நட்டி சுப்ரமணியம், சனக்ஷா ஸ்ரீ, பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பலரும் விமலின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். 


    சூர்யா 46 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.

    இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மமிதா பைஜூ ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த X தளப் பதிவில், "S46-க்கான குக்கிங் நடைபெறுகிறது. மிக விரைவில் வருகிறோம், விரைவில் அப்டேட்," என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

     

    நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.

    நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய ராகவேந்திரா. இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஒன்றில் இரட்டை கொலைகள் நடக்கிறது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த கொலைகளை செய்வது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த கொடூர கொலைகள் நகர மக்களை உறைய செய்கிறது.

    இதையடுத்து விசாரணையும் தீவிரமடைகிறது. இதற்கிடையில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவை போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர போலீசார் உறைந்து போகிறார்கள். அது என்ன? கொலைகளை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

    நடிகர்கள்

    போலீஸ் அதிகாரியாக வரும் விஜய ராகவேந்திரா பொறுப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பல்வேறு காட்சிகளில் பாராட்டும்படி உள்ளது. கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. உஷா பந்தாரி உள்பட நடிகர் -நடிகைகள் அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

    இயக்கம்

    கிரைம் - திரில்லர் பாணியில் யாருமே யூகிக்க முடியாதபடி வலுவான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. புதுமையான கதையும், காட்சி பின்னணியும் படத்துக்கு பலம்.

    உளவியல் ரீதியான, மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரின் உள்ளார்ந்த குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பாராட்டக்கூடியது. சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஹேமந்த் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு.

    இசை

    நவநீத் ஷாமின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.

    ரேட்டிங்-3/5

    அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    இதில், தமிழ் திரைப்படங்கள் வென்ற ஒட்டுமொத்த விருதுகளின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..,

    சிறந்த திரைப்படம் - அமரன்

    சிறந்த இயக்குநர் - பி.எஸ். வினோத்ராஜ் (கொட்டுக்காளி), ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

    சிறந்த திரைப்படம் (விமர்சகர்) - மெய்யழகன் (பிரேம்குமார்)

    சிறந்த நடிகர் (முதன்மை பாத்திரம்) - சிவகார்த்திகேயன் (அமரன்)

    சிறந்த நடிகர் (விமர்சகர்) - அரவிந்த சாமி (மெய்யழகன்)

    சிறந்த நடிகை (முதன்மை பாத்திரம்) - சாய் பல்லவி (அமரன்)

    சிறந்த நடிகை (விமர்சகர்) - அன்னா பென் (கொட்டுக்காளி)

    சிறந்த நடிகர் (குணச்சித்திரம்) - கார்த்தி (மெய்யழகன்)

    சிறந்த நடிகை (குணச்சித்திரம்) - சுவாசிகா (லப்பர் பந்து)

    சிறந்த இசை ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)

    சிறந்த பாடலாசிரியர் - உமா தேவி (யாரோ இவன் யாரோ - மெய்யழகன்)

    சிறந்த பாடகர் (ஆண்) - ஹரிச்சரண் (ஹே மின்னலே - அமரன்)

    சிறந்த பாடகர் (பெண்) - ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே - அமரன்)

    சிறந்த அறிமுக இயக்குநர் - சுரேஷ் மாரி (ஜெ பேபி), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)

    சிறந்த அறிமுக நடிகர் - ரிது ஹரூன் (தக்ஸ்)

    சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)

    சிறந்த ஒளிப்பதிவு - சி.ஹெச். சாய் (அமரன்)

    தலைச்சிறந்த நடிப்பு - விக்ரம் (தங்கலான்)

    • ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
    • விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், "நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்" என்றார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அவர், "அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    அமரன் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது.

    ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் "அமரன்." வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற "அமரன்" திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 70வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது.

    ஃபிலம்ஃபேர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்பட எட்டு பிரிவுகளின் கீழ் அமரன் திரைப்படம் விருது வழங்கப்பட்டுள்ளது.

    70வது ஃபிலிம்ஃபேர் விழாவில் 8 விருதுகளை குவித்ததை ஒட்டி அமரன் படக்குழு சார்பில் சர்ப்ரைஸ் வீடியோ வெளயிடப்பட்டுள்ளது. இதில், "சினிமா மற்றும் போட்டிகளை கடந்த அமரன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, ஜோதிகா, ரோஜா, சத்யன் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் "மாயாவி." இந்தப் படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்தவர் விஷ்ணு பிரியா. இந்தப் படம் விஷ்ணு பிரியாவுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் திரைத்துறையில் நடித்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தின் போது, விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை ஐந்து பேர் கும்பல் நாற்காலியில் அமர வைத்து கட்டிப்போட்டு முகத்தை டேப்பால் சுற்றியுள்ளனர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சூரிய நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் சிசிடிவி, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை ஐந்து பேர் கும்பல் திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.

    விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.

    அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.

    ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால் தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள். சில நாட்களில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக திரைக்கதை பரபரக்கிறது.

    கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார். காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் உச்சத்தை காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம்.

    கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி காதலும் காதல் சார்ந்த காட்சிகளில் நடித்திருப்பது பரவசமாக இருக்கிறது.

    இப்படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா அப்பாவி பெண்களைக் குறிவைத்து, விதவிதமான தோற்றங்களில் சென்று, அவர்களை திருமணம் செய்து அடிமையாக்கி, தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கொடூர வில்லனாக தெரிகிறார். மோசடிப் பேர்வழிகளுக்கு உதவுகிறவராக காமெடி நடிகர் செந்தில் காட்டும் வில்லத்தனம் பரவாயில்லை.

    இயக்கம்

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை விவகாரத்தை கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா. படத்தில் குறைகள் காணப்டுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    பாடல் வரிகளுக்கு இசை மெருகூட்டியிருக்கும் ஏ.சி ஜான்பீட்டரும், பின்னணி இசையை காட்சிகளுக்குப் போதுமானதாக கலந்திருக்கிறார் தேவா.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ரேட்டிங்-2/5

    ×