செய்திகள் (Tamil News)
அமெரிக்காவில் பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரான்ஸ் தூதரகம் உள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி நேற்று அங்கு வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். மேலும், தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஓட்டு போட வந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பலத்த சோதனை நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரான்ஸ் தூதரகம் உள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி நேற்று அங்கு வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். மேலும், தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஓட்டு போட வந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பலத்த சோதனை நடத்தப்பட்டது.