தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை மீண்டும் உயர்வு- பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-10-05 05:25 GMT   |   Update On 2022-10-05 06:04 GMT
  • தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்து உள்ளது.
  • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.67 ஆயிரமாக உள்ளது.

சென்னை:

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. கடந்த 27-ந்தேதி பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகரித்தது. இதற்கிடையே நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 835 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கிறது. 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1040 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது.

Tags:    

Similar News