உள்ளூர் செய்திகள் (District)

ராதாபுரத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2022-07-24 09:08 GMT   |   Update On 2022-07-24 09:08 GMT
  • ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா(52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் 350 அடி நீளமுள்ள காப்பர் வயரை கொண்டு சென்றுள்ளார்.

நெல்லை,:

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்கள், மின்மோட்டார்கள், காப்பர் வயர்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த அனித்(வயது 29) அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா(52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் 350 அடி நீளமுள்ள காப்பர் வயரை கொண்டு சென்றுள்ளார்.

தாமரைசெல்வி-ரெட்டியார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வயலுக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது வயரை காணவில்லை.

ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வயரை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து அவர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News