உள்ளூர் செய்திகள் (District)
கலைஞர் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞர் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:
ஒவ்வோர் ஆண்டும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக் கப்படும் என ஆணை வெளி யிடப்பட்டுள்ளது.
அவ்வகையில்,2021ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விரு திற்கான தகுதிகள் பின்வரு மாறு:&
விண்ணப்பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரி கிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழு நேர பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண் களின் முன்னேற்றத்திற்கா கவும் பங்காற்றியிருக்கவேண்டும்.
விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களி டையே நல்ல தாக்கத்தை ஏற் படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியா கவோ, மற்றொருவர் பரிந்து ரையின் அடிப்ப¬யிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 30.4.2022-க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.