செய்திகள் (Tamil News)

வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கொத்தனார் பலி

Published On 2017-02-23 13:26 GMT   |   Update On 2017-02-23 13:26 GMT
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் கொத்தனார் உயிரிழந்தார்.

வேலாயுதம் பாளையம்:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் தனபால். (வயது 45) இவரது நண்பர் ராஜா (32) இருவரும் கட்டிட கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் நேற்று வேலைக்கு செல்வதற்காக கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்களில் வேலாயுதம் பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் ஞானபரப்பு பிரிவு சாலையில் வந்துக் கொண்டிருந்தது. பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனபால், ராஜா படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கரூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல் சிகிச்கைக்காக தனபால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News